யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

3/8/18

B.LITT B.EDக்கு ஊக்க ஊதிய உயர்வு உண்டு என்கிற உயர்நீதின்ற உத்தரவு பெறப்பட்டுள்ளது.இதனை அனைத்து த.ஆசிரியர்களும் பயன்படுத்துவோம்.அரும்பாடுபட்டு பெற்றுத்தந்த வழக்கறிர்கள் திரு.சங்கரன் திரு.பாலச்சந்தர் ஆகியோருக்கு நன்றி

மாவட்டங்களில் கல்வித்துறை இணை இயக்குனர்கள் அலுவலகம்:

கல்வித்துறையில் மாவட்டங்களை ஒருங்கிணைத்து இணை இயக்குனர், மண்டல இணை இயக்குனர் அலுவலங்கள் அமைக்கப்பட உள்ளது.பள்ளி கல்வித் துறை சார்பில், புதிய கல்வி மாவட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசின் நலத்திட்டங்கள் சரியான முறையில் செயல்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய, 20 இணை இயக்குனர்கள், ‘நோடல் ஆபீசர்ஸ்’ ஆக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இணை இயக்குனர்களுக்கு, ஒன்று அல்லது இரண்டு மாவட்டங்களை சேர்த்து பொறுப்பு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.மூன்று மாவட்டங்களை ஒருங்கிணைத்து கல்வித் துறை இணை இயக்குனர் அலுவலகம், இணை இயக்குனர்களை ஒருங்கிணைத்து மண்டல இணை இயக்குனர் அலுவலகம், மாவட்டங்களில்அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மூன்று இணை இயக்குனர்களை ஒருங்கிணைத்து மண்டல இணை இயக்குனர்
அலுவலகம் மதுரையில் அமைக்கப்படுகிறது. இணை இயக்குனர்களுக்கான அலுவலகம் தேடும் பணியில், கல்வித்துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.இதுவரை இணை இயக்குனர்கள் சென்னையில் இருந்து, பணிகளை கவனித்தனர். அரசின் சீர்திருத்த நடவடிக்கையால்,இனி மாவட்டங்களில் அலுவலகம் அமைத்து கவனிப்பார்கள், என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கூட்டுறவு சங்கத் தேர்தல் நடைமுறைகள் மீண்டும் தள்ளிவைப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

கூட்டுறவு சங்கத் தேர்தல்களுக்கான நடைமுறைகள் மீண்டும் தள்ளிவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட முடிவுகள் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 2) அறிவிக்கப்படுவதாக இருந்தது. இந்த நிலையில் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கூட்டுறவு சங்கத் தேர்தலில் 5 ஆண்டு பதவிக் காலம் கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. தொடக்க சங்கங்கள், மத்திய சங்கங்கள், தலைமைச் சங்கங்கள் என மூன்றடுக்கு முறையில் தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த மூன்றடுக்கு முறை தேர்தல் ஒவ்வொன்றும் 5 நிலைகளாக நடத்தப்படுமென கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், தேர்தல் வழக்கு தொடர்பாக வாக்கு எண்ணிக்கை, முடிவுகள் அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தத் தடையை இப்போது விலக்கி தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு நிலுவையிலுள்ள சங்கங்களுக்கு மட்டும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தேர்தல் முடிவுகள்: இரண்டாம் நிலையிலுள்ள சங்கங்களுக்கு தலைவர், துணைத் தலைவர் தேர்தல் முடிவுகளும், மூன்று மற்றும் நான்காவது நிலையில் உள்ள சங்கங்களின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகளும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 2) அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தது. மேலும், மூன்று மற்றும் நான்காவது நிலையிலுள்ள கூட்டுறவு சங்கங்களுக்கான தலைவர், துணைத் தலைவர் தேர்தல் வரும் 6-ஆம் தேதி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
முடிவுகள் தள்ளிவைப்பு: தேர்தல் முடிவுகள் வியாழக்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென தேர்தல் முடிவு உள்பட அனைத்து தேர்தல் நடைமுறைகளையும் நிறுத்தி வைப்பதாக கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகையில், சில நிர்வாகக் காரணங்களுக்காக தேர்தல் நடைமுறைகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை, தேர்தல் முடிவுகள், நிர்வாகக் குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்வது உள்ளிட்ட அனைத்து தேர்தல் நடைமுறைகளையும் மேற்கொள்வதற்கான புதிய கால அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவித்தன.

மதிய உணவுத் திட்டம் தமிழகத்துக்கு உச்ச நீதிமன்றம் ரூ.50 ஆயிரம் அபராதம்:

பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் விதத்தை இணையதளம் வாயிலாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க தவறியதற்காக தமிழகம், ஜார்க்கண்ட், உத்தரகண்ட் ஆகிய 3 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
பள்ளிகளில் செயல்படுத்தப்படும் மதிய உணவுத் திட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தன்னார்வ தொண்டு அமைப்பு ஒன்று கடந்த 2013ஆம் ஆண்டு மனு தொடுத்திருந்தது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் உணவுகள் சுத்தமானதாக உள்ளதா என்று கண்காணிப்பதற்கு தேசிய, மாநில அளவில் 2 குழுக்களை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதேபோல், மதிய உணவு திட்டத்தை இணையதளம் வாயிலாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு நீதிபதிகள் மதன் பி லோகுர், தீபக் குப்தா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தன்னார்வ தொண்டு அமைப்பின் வழக்குரைஞர் ஆஜராகி, உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை சில மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் செயல்படுத்தவில்லை என்று தெரிவித்தார். இதைக்கேட்ட நீதிபதிகள், தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். பின்னர் அவர்கள் கூறியதாவது:
தமிழகம், ஜார்க்கண்ட், உத்தரகண்ட் ஆகிய 3 மாநிலங்களும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தாதது அதிருப்தி அளிக்கிறது. இதற்காக அந்த மாநிலங்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படுகிறது. இந்த அபராதத் தொகையை சிறார் கைதிகள் விவகாரங்களுக்கு பயன்படுத்தும் வகையில், உச்ச நீதிமன்ற சட்ட சேவைகள் அமைப்பிடம் 4 வாரங்களுக்குள் மேற்கண்ட 3 மாநிலங்களும் டெபாசிட் செய்ய வேண்டும்.
இதேபோல், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அருணாசலப் பிரதேச மாநிலம், புதுச்சேரி, தாதர் மற்றும் நாகர்ஹவேலி ஆகிய யூனியன் பிரதேசங்களும் செயல்படுத்தவில்லை. எனினும், இவைகளுக்கு அபராதம் விதிக்கவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த மேலும் அவசாகம் அளிக்கிறோம். இந்த அவகாசத்துக்குள் அருணாசலப் பிரதேசம், புதுச்சேரி, தாதர் மற்றும் நாகர்ஹவேலி ஆகியவை உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் என எதிர்பார்க்கிறோம் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் மாதம் 20ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும் நீதிபதிகள் அறிவித்தனர்

எம்.பி.பி.எஸ்.: அகில இந்திய 2 -ஆம் கட்ட கலந்தாய்வு முடிவுகள் வெளியீடு:

எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இரண்டாம்கட்ட கலந்தாய்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சமர்ப்பிக்கப்படும் 15 சதவீத இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள், தொழிலாளர் ஈட்டுறுதி நிறுவனத்தின் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் இடங்கள் ஆகியவற்றுக்கான கலந்தாய்வை மத்திய சுகாதார இயக்ககம் நடத்துகிறது. முதல்கட்ட கலந்தாய்வு ஜூன் 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற்று, 12,683 பேருக்கு எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டன. இரண்டாம்கட்ட கலந்தாய்வு ஜூலை 10,11 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. முடிவுகள் ஜூலை 12 -ஆம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

முடிவுகள் வெளியீடு: ஆனால் இதுதொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அளித்த உத்தரவின்பேரில் அகில இந்திய கலந்தாய்வு உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் நிறுத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையும் அகில இந்திய கலந்தாய்வுக்கு தடை விதித்தது. இந்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் இரண்டாம்கட்ட கலந்தாய்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. கலந்தாய்வில் இடங்களைப் பெற்றவர்கள் ஆகஸ்ட் 8 -ஆம் தேதிக்குள் அந்தந்த கல்லூரிகளில் சேர வேண்டும். ஆகஸ்ட் 8 -ஆம் தேதி மாலை கலந்தாய்வில் நிரம்பாத இடங்கள், மாணவர்கள் கைவிட்ட இடங்கள் ஆகியவை அந்தந்த மாநில ஒதுக்கீட்டுக்காகச் சமர்ப்பிக்கப்படும்.
தமிழகத்தில் எப்போது?: தமிழகத்தில் முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 1 முதல் 7-ஆம் தேதி வரை நடைபெற்றது. அகில இந்திய கலந்தாய்வு முடிவுகள் வெளியிடப்படாததால் இரண்டாம்கட்ட கலந்தாய்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் அகில இந்திய கலந்தாய்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழகத்தில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு எப்போது தொடங்கும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலர் டாக்டர் ஜி.செல்வராஜன் கூறியது:
அகில இந்திய கலந்தாய்வில் இடங்களைப் பெற்றவர்கள் கல்லூரியில் சேருவதற்கான கால அவகாசம் நிறைவடைந்த பிறகு, நிரம்பாத இடங்கள் மருத்துவக் கல்வி தேர்வுக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்படும். அதன் பிறகு தமிழகத்தில் இரண்டாம் கட்ட கலந்தாய்வை நடத்துவது தொடர்பான அட்டவணை வெளியிடப்படும் என்றார்.
மீண்டும் கலந்தாய்வு: தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 30, 31 தேதிகளில் நடைபெற்றது. கலந்தாய்வில் நிரம்பாத மீதம் உள்ள இடங்களுக்கான நீட்டிப்பு கலந்தாய்வு ஆகஸ்ட் 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் கலந்தாய்வு நடைபெறும்

தற்காலிக பட்டச் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்: சென்னைப் பல்கலை. அறிவிப்பு

பட்டப்படிப்பை முடித்த மாணவர்கள் தற்காலிக பட்டச் சான்றிதழை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்கள் உடனடியாக கல்விச் சான்றிதழ் கிடைக்காததால் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். படிப்பை முடித்து மூன்று மாதங்களுக்குப் பிறகே அவர்களுக்கு புரொவிஷனல் பட்டச் சான்றிதழ் வழங்கப்படும். இதனால், மாணவர்கள் வேலைவாய்ப்புப் பெறுவதிலும் சிரமம் இருந்து வந்தது.

இந்த நிலையை மாற்றும் வகையில், மாணவர்கள் படிப்பை முடித்த உடன் தற்காலிக புரொவிஷனல் சான்றிதழ் வழங்கும் திட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 2018 ஏப்ரலில் தேர்வெழுதி பட்டப்படிப்பை முடித்திருக்கும் மாணவர்கள், www.unom.ac.in  என்ற இணையதளத்திலிருந்து தற்காலிக பட்டச் சான்றிதழை புதன்கிழமை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

25,000 மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் CA சிறப்பு பயிச்சி -அமைச்சர் செங்கோட்டையன்!

வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக வணிகவியல் துறையில் ஆடிட்டர் படிப்பிற்காக சிறப்பு பயிச்சி வகுப்பு நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஆடிட்டர் படிப்பிற்காக 25,000 மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பு பயிச்சி நடத்தப்படும் என்று திருப்பூரில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

பள்ளிக்கு சீருடையில் செல்லும் மாணவர்கள் அரசுப் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் - போக்குவரத்து துறை அமைச்சர்


மாணவர்கள் ஆகஸ்ட் 31-குள் எழுத படிக்க தெரியவில்லை எனில் ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை - CEO உத்தரவு!

ஆகஸ்ட் 31 - குள் 10 வகுப்பு வரைஅனைத்து மாணவர்களும் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் - தவறினால் இப்போது பாடம் எடுக்கும் ஆசிரியர் கடந்த ஆண்டு பயிற்றுவித்த ஆசிரியர் மீதும் நடவடிக்கை - CEO செயல்முறைகள்...


ஆடிப்பெருக்கு விடுமுறை அறிவிப்பு!

ஆடிப்பெருக்கான நாளை திருச்சி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை. அதை ஈடுசெய்யும் வகையில் வரும் 18ம் தேதி சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்கும்- ஆட்சியர் கு.ராசாமணி அறிவிப்பு.

2/8/18

இன்டர்நெட் சென்டரில் ரெடியாகும் ஆசிரியர்களின் ஊதிய பட்டியல்: தடுக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி

அரசு ஆசிரியர்களின் ஊதியப் பட்டியல்கள் தனியார் கணினி மையங்களில் தயாரிப்பது தடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் படித்து பொதுத் தேர்வு எழுதிய  மாணவ, மாணவியரின் விவரங்கள் தனியாருக்கு விற்கப்பட்ட சம்பவத்தில்  3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பரபரப்பான சூழல்நிலையில், ஆசிரியர்களின் ஊதியப் பட்டியல் (சம்பளம்) தனியார் கணினி மையங்களில் தயாரிக்கப்படுவது தெரியவந்துள்ளது.
பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையின்போது, ஆசிரியர்களின் ஊதியப்பட்டியலும் தனியார் கணினி மையங்களில் ைவத்துதான் தயாரிக்கப்படுகிறது என்ற விவரம் தெரிந்து கல்வி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 3 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் ஊதியத்தில் மெத்தமான இருப்பது கவலை அளிக்கிறது. அதனால் இதுகுறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில்,
‘ஆசிரியர்களின் சம்பள பில்கள் ஒரு சில தனியார் கம்ப்யூட்டர் நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்படுவதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. அதை தடுப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பள்ளிகளில் உள்ள கணினி இயக்குநர்கள் மூலம் இந்த பணிகளை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது’ என்றார்.

குரூப் 4 தேர்வில் 14.26 லட்சம் பேர் தகுதி! கூடுதலாக 2000 இடங்கள் சேர்ப்பு :

குரூப் 4 பதவியில் 9351 பணியிடத்துக்கு நடத்தப்பட்ட தேர்வில்   14.26 லட்சம் பேர் தகுதி ெபற்றுள்ளனர். குரூப்2 தேர்வுக்கான அறிவிப்பு வருகிற 15ம் தேதிக்குள் வெளியிடப்படும். கடந்த ஆண்டு நடந்த குரூப் 1 தேர்வில் எந்த முறைகேடும் நடக்கவில்லை” என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கூறியுள்ளனர். 
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் நந்தகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் ஆகியோர் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நேற்று அளித்த பேட்டி: குரூப் 4 பதவிக்கான தேர்வு கடந்த பிப்ரவரி 11ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வை 17 லட்சத்து 53 ஆயிரத்து 154 பேர் எழுதினர். இத்தேர்வுக்கான ரிசல்ட்  www.tnpsc.gov.in. http://results.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வில் 14 லட்சத்து 26 ஆயிரம் 10 பேர் தகுதி ெபற்றுள்ளனர்.
இதில் ஆண்கள் 6,28,443 பேர்,  பெண்கள் 7,97,532 பேர், மூன்றாம் பாலினத்தவர் 35 பேர். குரூப் 4, வி.ஏ.ஓ. தேர்வை சேர்த்து நடத்தியதால் அரசுக்கு 12 கோடி மிச்சம் ஏற்பட்டுள்ளது. இந்திய வரலாற்றில் முதல்முறையாக டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 தேர்வில் அதிகப்படியானோர் பங்கேற்றனர். எந்த மாநிலத்திலும் இவ்வளவு பேர் எழுதியதாக சரித்திரம் இல்லை. இத்தேர்வில் தகுதியானவர்களில் சுமார் 33,000 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்படுவர்.
அதாவது, 1:3 என்ற அடிப்படையில்  அழைக்கப்படுவார்கள். அவர்களின் விவரம் இன்னும் 3 நாட்களில் தேர்வாணையம் வலைதளம், எஸ்.எம்.எஸ்., இமெயில் வாயிலாக தெரிவிக்கப்படும்.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு நேரில் வர வேண்டாம். அதற்கு பதிலாக அரசின் இசேவை மையங்களுக்கு சென்று தங்களுடைய சான்றிதழை வருகிற 16ம் தேதி முதல் தேர்வாணையத்தின் இணையதளத்தின் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும். 30ம் தேதி சான்றிதழை பதிவேற்றம் செய்ய கடைசி நாள்.
அதைத் தொடர்ந்து அந்த  சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். அதன் பிறகு அக்டோபர் கடைசி வாரத்தில் கவுன்சலிங் தொடங்கும். கவுன்சலிங்கிற்கு 200 பேர் அழைக்கப்படுவார்கள். குரூப் 4 தேர்வு அறிவிக்கும்போது காலி பணியிடங்கள் எண்ணிக்கை 9,351 என்று அறிவிக்கப்பட்டது.
தற்போது இந்த இடங்களின் எண்ணிக்கை 11,280 ஆக உயர்ந்துள்ளது. வி.ஏ.ஓ. எண்ணிக்கை 494லிருந்து 1,107 ஆக அதிகரித்துள்ளது. இளநிலை உதவியாளர் (பிணையம்) 226, இளநிலை உதவியாளர் (பிணையற்றது)-4722, வரித்தண்டலர்- 52, தட்டச்சர்- 3974, சுருக்கெழுத்து தட்டச்சர்- 931, நில அளவர்- 102, வரைவாளர்- 156 ஆகவும் காலி பணியிடங்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஓராண்டுக்கான கால அட்டவணையில் அறிவித்தப்படி 9 தேர்வுகள் நடத்துவதில் காலதாதமதம் ஏற்பட்டுள்ளது.
இதற்காக வருந்துகிறோம். இதனை 2, 3 மாதத்தில் சரி செய்து விடுவோம். கணினி வழி மூலமாக இதுவரை 27 தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது. இதில் எந்தவொரு குழப்பமோ, குந்தகமோ ஏற்படவில்லை. தேர்வர்களிடம் இருந்து எந்தவித புகார்களும் வரவில்லை.
கணினி வழியாக குறைந்த அளவிலான தேர்வர்கள் பங்கேற்கும் வகையில் தேர்வு நடத்த வசதி உள்ளது. கணினி மூலம் தேர்வுகள் நடத்தினால் விரைவில் தேர்வுகளை வெளியிட முடியும். ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும்.
2017ம் ஆண்டு நடந்த குரூப் 1 முதன்மை தேர்வில் எந்தவித  முறைகேடும் நடைபெறவில்லை. முதன்மை தேர்வுக்கான விடைகள் திருத்தும் பணி  நடைபெற்று வருகிறது. இன்னும் 3 மாதத்தில் தேர்வு முடிவு வெளியிடப்படும்.  அதாவது, தேர்வாணையம் ஓராண்டு கால அட்டவணையில் அறிவித்தபடி செப்டம்பர்  8க்குள் முடிவுகள் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
குரூப் 4, விஏஓ தேர்வை ஒன்றாக நடத்தியதால் அரசுக்கு 12 கோடி மிச்சம்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4, வி.ஏ.ஓ. பதவிகளுக்கு தனித்தனியாகத்தான் தேர்வுகளை நடத்தி வந்தது. இதனால், அதிக செலவு ஏற்பட்டதாக டிஎன்பிஎஸ்சி கூறி வந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு குரூப் 4, வி.ஏ.ஓ. தேர்வை ஒன்றாக டிஎன்பிஎஸ்சி நடத்தியது. இதனால், அரசுக்கு 12 கோடி ரூபாய் மிச்சம் ஏற்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு
2016ல் நடந்த குரூப் 1 தேர்வு  முறைகேடு தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்கில்  சம்பந்தப்பட்ட தேர்வாணைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  போலீசார் நடத்தும் விசாரணைக்கு டிஎன்பிஎஸ்சி முழு ஒத்துழைப்பு கொடுத்து  வருகிறது. இதுபோன்ற பிரச்னைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு  வருகிறது என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

TET - ஆசிரியர் நியமனம்: இரண்டு தேர்வுகள் எதற்கு? உண்மையில் 13,000 ஆசிரியர் காலிப் பணியிடங்கள்?

பள்ளி ஆசிரியர்கள் நியமனத்துக்குத் தகுதித் தேர்வு, பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு என்று இரண்டு தேர்வுகளை நடத்துவதற்கான அரசாணையை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு.
ஆசிரியர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்த வேண்டிய ஆசிரியர் தகுதித் தேர்வை இந்த ஆண்டு உரிய காலத்தில் நடத்தாமல் தள்ளிப்போட்டுக்கொண்டிருந்தது. இந்நிலையில், இப்படியொரு அறிவிப்பு வந்திருப்பது ஆசிரியர் பயிற்சிப் படிப்பு முடித்த மாணவர்களிடையே கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
மாறும் முறை
ஏற்கெனவே, சி-சாட் தேர்வு இப்படித்தானே நடத்தப்படுகிறது. தகுதித் தேர்வு எழுதி, வெற்றி பெற்றவர்கள் காத்திருந்துதானே காலிப் பணியிடங்களில் சேர்கிறார்கள் என்பது வாதத்துக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால், அது அகில இந்திய அளவில் நடத்தப்படும் தேர்வு. ஒரு குறைந்தபட்ச தகுதி நிர்ணயிக்கப்பட்டு தேர்வு செய்யப்படுபவர்கள் சில ஆண்டுகள் வரையில் காலிப் பணியிடங்களுக்கு முயலலாம் என்ற ஏற்பாடு அது. அந்தத் தேர்வோடு தமிழ்நாட்டுக்குள் நடக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வை ஒப்பிட முடியாது.
தமிழ்நாட்டில் ஆசிரியர் பயிற்சிப் பட்டயம் முடித்தவர்களும் கல்வித் துறையில் பட்டம் பெற்றவர்களும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துகொண்டு, அந்த வரிசையின் அடிப்படையில் காலிப்பணியிடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதே நடைமுறையாக இருந்துவந்தது. அந்த நிலை மாற்றப்பட்டு, அவ்வப்போது உருவாகும் காலிப் பணியிடங்களுக்கு நேரடியாகவே போட்டித் தேர்வை நடத்தி தகுதியான மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும்வகையில்தான் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது அந்தத் தகுதித் தேர்வும் போதாமல், இன்னொரு தேர்வும் நடத்தப்படுவதற்கு என்ன காரணம்? அதை அரசு விளக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துகொண்ட வரிசையின் அடிப்படையில் காலிப் பணியிடங்களை நிரப்புவதால் தகுதியான ஆசிரியர்கள் கிடைப்பதில்லை. படித்து முடித்து வெகுகாலம் சென்றபிறகு பணிக்கு வருபவர்கள் பாடங்களை  மறந்துவிட்டார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டது. அப்படியென்றால் இப்போது கல்லூரியிலிருந்து படிப்பை முடித்துவிட்டு வெளியே வருபவர்கள் உடனடியாகத் தகுதித் தேர்வு எழுதி வெற்றிபெறும் வாய்ப்பு இருக்கிறது. அவர்களுக்குப் பாடங்கள் மறந்துபோகவும் வாய்ப்பில்லை. அப்படியிருந்தும் தகுதித் தேர்வு, பணியிடங்களுக்கான தேர்வு என்று ஏன் இரண்டு தேர்வுகளை நடத்த வேண்டும்?
தகுதி இல்லையா?
இரண்டு கட்டத் தேர்வுகளை எழுதி வென்று ஆசிரியர் பணியில் சேர்பவர்கள் அறிவாளிகளாக இருப்பார்கள், சிறப்பாகப் பணிபுரிவார்கள் என்று ஒரு நம்பிக்கையும் விதைக்கப்படுகிறது. அப்படியென்றால் அவர்கள் கல்லூரியில் கற்ற கல்வி தரமில்லாததா என்ற கேள்வியும் எழுகிறது. ஓராண்டு படிப்பாக இருந்த பி.எட். படிப்பு இரண்டாண்டுகளாக நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் ஆசிரியர் பயிற்சிப் பட்டயப் படிப்பை முடித்த அனைவருமே அதோடு நின்றுவிடாமல் தொடர்ந்து இளங்கலை, முதுகலை என்று படிப்பைத் தொடரவே செய்கிறார்கள். அப்படியும் ஆசிரியர் பணிக்கு அவர்கள் தகுதிபெறவில்லையா என்ன?
வேலையில்லாத் திண்டாட்டத்தைக் கவனமாகக் கையாள வேண்டிய அரசு, அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளாமல் பாதிக்கப்படுபவர்களை நோக்கியே திருப்பிவிடுகிறது என்பதுதான் இந்த அரசாணையின் நோக்கமாக இருக்க முடியும். ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளையும் கல்வித் துறைப் படிப்புகளையும் அரசுதான் கண்காணிக்கிறது. அப்படியென்றால் அவர்களைத் தகுதிப்படுத்த அரசு தவறிவிட்டதா?
பட்டம் பெற்று, வேலைக்குக் காத்திருக்கும் மாணவர்களைக் காத்திருக்கச் சொன்னாலும் தவறு இல்லை. குறைந்த பணியிடங்களுக்கு அதிக போட்டிகள் நிலவும் நிலையில் ஆசிரியராவதற்கான தகுதியே உனக்கு இல்லை என்று தம் மீதான பழியை மாணவர்களை நோக்கி திருப்பி வீசப்போகிறது தமிழக அரசு.
நோக்கம் என்ன?
வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவால் வேலை கொடுக்க முடியாத நிலை. ஆசிரியர் தகுதித் தேர்வு வந்தது. ஆசிரியர் தகுதித் தேர்வுகளாலும் வேலை கொடுக்க முடியாத அல்லது விரும்பாத நிலை. தற்போது மேலும் ஒரு தேர்வு மாணவர்களின் மீது சுமத்தப்படுகிறது.
பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்களுக்கான தகுதித் தேர்வை பல்கலைக்கழக மானியக் குழு நடத்திவந்தது. சி.பி.எஸ்.இ. வசம் அந்தப் பொறுப்பு  ஒப்படைக்கப்பட்டது. அடுத்து தேசிய தேர்வுகள் முகமை அந்தத் தேர்வுகளை நடத்தப்போகிறது. தேசிய அளவில் நடக்கும் அந்தத் தேர்வு, உதவிப் பேராசிரியர்களுக்கான தகுதித் தேர்வு மட்டுமல்ல. அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து ஆய்வுப் பட்டம் படிப்பதற்கு ஊக்கத்தொகையையும் வழங்குவதற்கான தேர்வு.
ஒருவேளை ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்களுக்கும் அப்படி ஏதாவது உயர்கல்விக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டால் இந்தத் தேர்வின் நோக்கம் உண்மையிலேயே கல்வியின் தரத்தை உயர்த்துவதுதான் என்று ஏற்றுக்கொள்ளலாம். அப்படியெல்லாம் ஏதும் நடக்கப்போவதில்லை.
தெருவுக்கு ஒரு தனியார் பள்ளி திறக்கப்பட்டுவருகிறது. அடிப்படைக் கல்வியை இலவசமாகக் கொடுக்க வேண்டிய அரசு தனியாரைத் தாராளமாக அனுமதிக்கிறது. தனது பொறுப்புகளிலிருந்து நழுவுகிறது. அரசுப் பள்ளிகளே இல்லாமல் போனால், அப்புறம் ஆசிரியர் எதற்கு?  2012-ம் ஆண்டுக்குப் பிறகு நான்காண்டுகள் கழித்து 2017-ல் தேர்வு நடந்தது. அடுத்த தேர்வு எப்போது?
அரசுப் பள்ளிகளின் உண்மை நிலை என்ன?
# அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை - 8,000
# அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் - 30 லட்சம்
# ஆசிரியர் பணியிடங்கள் - 1.32 லட்சம்
# காலிப் பணியிடங்கள் - 13,000
2017 தகுதித் தேர்வு - ஒரு பார்வை
1. எட்டாம் வகுப்பு வரைக்குமான ஆசிரியர் தகுதித் தேர்வுகளை எழுதியவர்கள் - 7.53 லட்சம்
2. தேர்வில் வெற்றி பெற்றவர்கள் -  34, 979
3. முதுகலை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்கள் - 2,00,299
4. தேர்வில் வெற்றி பெற்றவர்கள் - 3,521
நன்றி - இந்து தமிழ்

சிறு விளையாட்டுகள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க தினம் ஒரு விளையாட்டு-18 "உட்கார்ந்து ஓடும் ஆட்டம்" (01.08.2018)

Flash News: உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நாளை (2.8.2018) பிற்பகல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடைபெறுகிறது :

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்பான முதல்வர் பேச்சுக்கு ஜாக்டோ-ஜியோ 4ம் தேதி பதில்!

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு ஜாக்டோ-ஜியோ 4ம்  தேதி கூட்டத்தை கூட்டி பதிலளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
சேலத்தில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது, அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டம் குறித்தும் பேசினார். அப்போது அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அளவுக்கு அதிகமாக ஊதியம் வழங்கப்படுகிறது. அதை வாங்கிக் கொண்டு பணியை செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று தெரிவித்தார். மேலும், ஆசிரியர்களின் ஊதியத்தை பொறியியல் பட்டதாரிகளின் ஊதியத்துடன் ஒப்பிட்டுக் காட்டி பேசியுள்ளார்.

இது அரசியல் வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல கட்சித் தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்தும் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ இதுகுறித்து தங்களின் நிலையை வெளிப்படுத்த 4ம் தேதி ஜாக்டோ-ஜியோ கூட்டம் கூடி முதல்வரின் பேச்சுக்கு முறையான விளக்கம் மற்றும் பதிலை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது.

10ம் வகுப்பு துணை தேர்வு இன்று, 'ரிசல்ட்' வெளியீடு

பத்தாம் வகுப்பு துணை தேர்வுக்கான முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன.பத்தாம் வகுப்புக்கு, மார்ச்சில் நடந்த பொது தேர்வுக்கு விண்ணப்பித்து, பங்கேற்க முடியாதவர்கள்; தேர்வில் 
பங்கேற்று ஏதாவது சில பாடங்களில், தேர்ச்சி பெறாதவர்களுக்கு, ஜூனில் சிறப்பு துணை தேர்வு நடந்தது. இதன் முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன.இதற்கான அறிவிப்பை, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ளார். முடிவுகளை, http://www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில், இன்று பிற்பகலில் தெரிந்து கொள்ளலாம். தற்காலிக சான்றிதழ்களையும், இன்றே பதிவிறக்கம் செய்யலாம்.மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், நாளை மற்றும் நாளை மறுநாள், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்துக்கு சென்று, பதிவு செய்ய வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும், ஒப்புகை சீட்டையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பு

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஆசிரியர் பணிகளில் சேர்வதற்கான, மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கு, இன்று முதல், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.கேந்திரிய வித்யாலயா போன்ற, 
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர, மத்திய அரசு நடத்தும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வுக்கான அறிவிப்பை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நேற்று வெளியிட்டது.இதன்படி, www.ctet.nic.in என்ற இணையதளத்தில், இன்று முதல், ஆக., 27 வரை, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மொத்தம், 92 நகரங்களில், 20 மொழிகளில் தேர்வு நடத்தப்பட உள்ளது என, அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGH SCHOOL HM PANEL AS ON 01.01.2018 RELEASED Posted: 01 Aug 2018 07:53 AM PDT CLICK HERE தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 10 க்கும் குறைவாக உள்ள பள்ளிகளை அருகில் உள்ள பள்ளியுடன் இணைக்க கணக்கெடுப்பு துவங்கியது! Posted: 01 Aug 2018 06:51 AM PDT DEO Promotion 2018-19: Panel தயாரிப்பது தொடர்பான அறிவுரைகள் ,படிவங்கள் மற்றும் உத்தேசமாக தேர்ந்த்தெடுக்கப்படவேண்டிய தலைமையாசிரியர்கள் பெயர் பட்டியல் Posted: 01 Aug 2018 06:34 AM PDT CLICK HERE TO DOWNLOAD .DIR.PRO.& FORMAT SSLC Special Supplementary June 2018 - Provisional Mark Sheet for Individuals on 01.08.2018 at 2.00 pm Posted: 01 Aug 2018 03:02 AM PDT CLICK HERE ஆகஸ்ட் மாத பள்ளி நாட்காட்டி Posted: 31 Jul 2018 07:19 PM PDT 'குரூப் - 4' தேர்வில் 2,000 இடங்கள் கூடுதலாக சேர்ப்பு : 11,270 பேரை நியமிக்க டி.என்.பி.எஸ்.சி., முடிவு Posted: 31 Jul 2018 07:09 PM PDT 'குரூப் - 4' தேர்வில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலியிடங்களுடன், 2,000 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்த தேர்வின் வழியே, 11 ஆயிரம் காலியிடங்களை நிரப்ப உள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 9,351 பதவிகளுக்கு, குரூப் - 4 தேர்வு, இந்த ஆண்டு, பிப்., 11ல் நடத்தப்பட்டது. தேர்வில், மாநிலம் முழுவதும், 17.53 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வின் முடிவுகள், ஐந்து மாதத்திற்குப்பின், நேற்று முன்தினம் வெளியாகின.முடிவுகள்,http://results.tnpsc.gov.inமற்றும், http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதில், 15 லட்சத்து, ௨,௦௦௦ பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்வு முடிவு குறித்து, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் மற்றும் செயலர், நந்தகுமார் ஆகியோர், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:பிப்., 2018ல் நடத்தப்பட்ட, குரூப் - 4 தேர்வு, இந்தியாவிலேயே ஒரே நாள் தேர்வில், அதிக விண்ணப்பங்களை பெற்று, நடத்தப்பட்ட தேர்வு. இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு பதவிக்கு மூன்று பேர் வீதம், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்படுவர். தற்போதைய நிலையில், தோராயமாக, 33 ஆயிரம்பேர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவர். தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் பட்டியல், விரைவில் அறிவிக்கப்படும்.ஆக.,16 முதல், 30 வரை, டி.என்.பி.எஸ்.சி.,யின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, இ - சேவை மையங்களுக்கு சென்று, தங்கள் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவற்றை, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் ஆய்வு செய்த பின், அக்டோபரில் இட ஒதுக்கீடுக்கான கவுன்சிலிங் நடக்கும்.இந்த தேர்வின் வழியே, வி.ஏ.ஓ., பதவியில், 494 காலியிடங்கள் உட்பட, பல்வேறு பதவிகளுக்கான, 9,351 இடங்கள் நிரப்பப்படும்; இடங்களின் எண்ணிக்கை, மாறுதலுக்குரியது என்று, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, தற்போது கூடுதலாக, 1,929 இடங்கள் நியமன பட்டியலில் சேர்ந்துள்ளன.வி.ஏ.ஓ., - 1,107; பிணையமற்ற இளநிலை உதவியாளர் பதவி, 4,722; பிணையம் உள்ள இளநிலை உதவியாளர் பதவி, 226; வரிவசூலிப்பாளர், 52; தட்டச்சர், 3,974; சுருக்கெழுத்தர், 931; கள ஆய்வாளர், 102 மற்றும் வரைவாளர், 156 என, 11 ஆயிரத்து, 270க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த எண்ணிக்கையும், கவுன்சிலிங் நடக்கும் வரை மாற வாய்ப்புள்ளது. 86 சதவீதம், 'பாஸ்'பெண்கள் அமோகம் குரூப் - 4 தேர்வில், 17.53 லட்சம் பேர் பங்கேற்றதில், 15.02 லட்சம் பேர், அதாவது, 86 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெண்களில், 7.97 லட்சம் பேரும்; ஆண்களில், 6.28 லட்சம் பேரும், மூன்றாம் வகை பாலினத்தில், 35; மாற்று திறனாளிகள், 17 ஆயிரம்; விதவைகள், 5,000 மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள், 2,800 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தட்டச்சர் பதவிக்கு, 74 ஆயிரத்து, 555 பேரும்; சுருக்கெழுத்தர் பதவிக்கு, 1,446 பேரும் தேர்ச்சி பெற்றனர். வி.ஏ.ஓ., உள்ளிட்ட மற்ற ஆறு வகை பதவிகளுக்கு, 14.26 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.குரூப் - 4 தேர்வில், சைதை துரைசாமியின் மனிதநேயம் பயிற்சி மையத்தில் படித்தவர்களில், திருநாவுக்கரசு என்பவர், மாநில அளவில், 14வது இடம் பிடித்துள்ளார். செல்வகுமார், 33; கிருத்திகா, 114 மற்றும் கோபி, 731 ஆகிய இடங்களை பெற்றுள்ளனர். திருப்பூரில் ஆச்சரியப்பட வைக்கும் அரசு பள்ளி :அர்ப்பணிப்புடன் அசத்திய தலைமை ஆசிரியை Posted: 31 Jul 2018 07:08 PM PDT விரிசல் விழுந்த சுவர், துர்நாற்றம் வீசும் கழிப்பறை, உடைந்த பெஞ்ச், புதர்கள் நிறைந்த வளாகம்... இவ்வாறு தான் அரசு பள்ளி இருக்கும் என்ற எண்ணத்தை தவிடு பொடியாக்கி உள்ளது, திருப்பூரில் உள்ள ஒரு அரசுப் பள்ளி. அதன் உட்கட்டமைப்பு வசதி, மாணவர்களை சுண்டி இழுக்கிறது.திருப்பூர், அனுப்பர்பாளையம், நேதாஜி வீதி, கவிதா லட்சுமி நகரில், மாநகராட்சி துவக்கப்பள்ளி உள்ளது. கடந்த, 2003ல் துவக்கப்பட்ட இப்பள்ளி, மாநகராட்சியின் வாரச்சந்தை, இறைச்சி கடை அருகே, 4 சென்ட் இடத்தில், 8க்கு, 12 அடி கட்டடத்தில் இயங்கி வந்தது.ஒரேயொரு வகுப்பறையில் தான், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை நடந்தது. அப்பகுதி மக்கள், இந்த பள்ளியில், தங்கள் குழந்தைகளை சேர்ப்பதில் ஆர்வம் காட்டவில்லை. இதனால், 22 மாணவர்களுடன் பள்ளி இயங்கியது. 4 சென்ட் நிலம் இந்நிலையில், 2008ல், பள்ளியின் தலைமை ஆசிரியையாக கற்பகம் பொறுப்பேற்றார். பள்ளியின் நிலையை பார்த்த அவர், மாணவர் எண்ணிக்கையை அதிகரிப்பது, உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவது என உறுதியேற்றார்.இதற்காக, வீடு வீடாகச் சென்றும், அங்குள்ள வர்த்தகர்களை சந்தித்தும், பள்ளி கட்டடம் கட்ட நிதி திரட்டினார். அனைவருக்கும் கல்வி திட்டம் வாயிலாக, எட்டு லட்சம் ரூபாய் நிதி பெற்று, கூடுதலாக, 4 சென்ட் இடம் வாங்கி, பள்ளியை விரிவுபடுத்தினார்.தொடர்ந்து, நான்கு வகுப்பறைகள், சமையல் அறை கட்டப்பட்டன. பள்ளியின் தரத்தை உயர்த்துவதை லட்சியமாக கொண்ட கற்பகம், அடுத்த கட்டமாக, பள்ளியை வண்ணமயமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். சொந்த பணம், 50 ஆயிரம் ரூபாயுடன், பொதுமக்களிடம் திரட்டியது என, மொத்தம், 1.75 லட்சம் ரூபாயில், பணியை துவக்கினார். முப்பரிமாண ஓவியம் பள்ளி சுற்றுச் சுவரில், விலங்குகள், உள்பக்கம், தலைவர்கள், மலர்கள், விளையாட்டு என அனைத்து ஓவியங்களும் வரையப்பட்டன. இவற்றில், பல ஓவியங்கள் முப்பரிமாண முறையில் வரையப்பட்டன. இந்த முயற்சிக்கு, நல்ல வரவேற்பு கிடைத்தது. பெஞ்ச், டெஸ்க், தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம், வகுப்பறை முழுவதும் ஸ்பீக்கர் என, ஒரு முன்னோடி பள்ளியாக, இப்பள்ளி மாறி விட்டது.மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க எடுக்கப்பட்ட முயற்சிக்கு, வெற்றி கிடைத்துள்ளது. மெல்ல மெல்ல பள்ளி மேம்பாடு அடைவதை பார்த்த பெற்றோர், தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தனர். இதனால், மாணவர்கள் எண்ணிக்கை உயர ஆரம்பித்து, இப்போது, 160 பேர் படிக்கின்றனர். இவர்களில், பெரும்பாலானோர் பனியன், பாத்திர தொழிலாளர்களின் குழந்தைகள். 'ஏசி' வசதியும் வருகிறது தலைமை ஆசிரியை கற்பகம் கூறியதாவது:நான் பணியில் சேர்ந்த போது, தினமும் மது பாட்டில்களை அகற்றிய பின்பே, பள்ளிக்குள் நுழைய வேண்டியிருந்தது. எப்படியாவது, பள்ளியை மாற்றிக் காட்ட வேண்டும் என உறுதி எடுத்தேன்.புத்தகத்தில் படிப்பதை, சுவரில் நேரில் காண முடிவதால், மாணவர்கள் மனதில் எளிதாக பதிய வைத்து கொள்கின்றனர். இப்பகுதி மக்கள், தங்கள் குழந்தைகளை வேறு பள்ளிகளுக்கு அனுப்பாமல், இங்கே சேர்த்துள்ளனர். இதுவே மிகப்பெரிய வெற்றி. அடுத்ததாக, வகுப்பறைகளில், 'ஏசி' மற்றும் மைதானம் வசதி ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறேன்.இவ்வாறு அவர் கூறினார். 'நெட்' தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு

உதவி பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தேர்வு முடிவுகள் வெளியிடப்
பட்டுள்ளன.பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில் உதவி பேராசிரியர்
 பணியில் சேர்வதற்கு, மத்திய அரசின் சார்பில், சி.பி.எஸ்.இ., நடத்தும்,

'நெட்' தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான, 'நெட்' 
தேர்வு, ஜூலை, 8ல் நடத்தப்பட்டது. தேர்வில், 8.59 லட்சம் பேர் பங்கேற்றனர்.
இதன் முடிவுகளை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., 
நேற்று வெளியிட்டது. இந்த தேர்வில், உதவி பேராசிரியர் பணி தகுதிக்கு, 
52 ஆயிரம் பேரும், பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி.,யின், 
ஜே.ஆர்.எப்., ஆராய்ச்சி மாணவர் உதவி தொகை பெறும் தகுதிக்கு, 
3,900 பேரும் தகுதி பெற்றுள்ளனர்.

'குரூப் - 4' தேர்வில் 2,000 இடங்கள் கூடுதலாக சேர்ப்பு : 11,270 பேரை நியமிக்க டி.என்.பி.எஸ்.சி., முடிவு

குரூப் - 4' தேர்வில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலியிடங்களுடன், 2,000 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்த தேர்வின் வழியே, 11 ஆயிரம் காலியிடங்களை நிரப்ப உள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 9,351 பதவிகளுக்கு, குரூப் - 4 தேர்வு, இந்த ஆண்டு, பிப்., 11ல் நடத்தப்பட்டது. தேர்வில், மாநிலம் முழுவதும், 17.53 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வின் முடிவுகள், ஐந்து மாதத்திற்குப்பின், நேற்று முன்தினம் வெளியாகின.முடிவுகள்,http://results.tnpsc.gov.inமற்றும், http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதில், 15 லட்சத்து, ௨,௦௦௦ பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்வு முடிவு குறித்து, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் மற்றும் செயலர், நந்தகுமார் ஆகியோர், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:பிப்., 2018ல் நடத்தப்பட்ட, குரூப் - 4 தேர்வு, இந்தியாவிலேயே ஒரே நாள் தேர்வில், அதிக விண்ணப்பங்களை பெற்று, நடத்தப்பட்ட தேர்வு. இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு பதவிக்கு மூன்று பேர் வீதம், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்படுவர். தற்போதைய நிலையில், தோராயமாக, 33 ஆயிரம்பேர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவர். தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் பட்டியல், விரைவில் அறிவிக்கப்படும்.ஆக.,16 முதல், 30 வரை, டி.என்.பி.எஸ்.சி.,யின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, இ - சேவை மையங்களுக்கு சென்று, தங்கள் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். 
அவற்றை, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் ஆய்வு செய்த பின், அக்டோபரில் இட ஒதுக்கீடுக்கான கவுன்சிலிங் நடக்கும்.இந்த தேர்வின் வழியே, வி.ஏ.ஓ., பதவியில், 494 காலியிடங்கள் உட்பட, பல்வேறு பதவிகளுக்கான, 9,351 இடங்கள் நிரப்பப்படும்; இடங்களின் எண்ணிக்கை, மாறுதலுக்குரியது என்று, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, தற்போது கூடுதலாக, 1,929 இடங்கள் நியமன பட்டியலில் சேர்ந்துள்ளன.வி.ஏ.ஓ., - 1,107; பிணையமற்ற இளநிலை உதவியாளர் பதவி, 4,722; பிணையம் உள்ள இளநிலை உதவியாளர் பதவி, 226; வரிவசூலிப்பாளர், 52; தட்டச்சர், 3,974; சுருக்கெழுத்தர், 931; கள ஆய்வாளர், 102 மற்றும் வரைவாளர், 156 என, 11 ஆயிரத்து, 270க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த எண்ணிக்கையும், கவுன்சிலிங் நடக்கும் வரை மாற வாய்ப்புள்ளது.

86 சதவீதம், 'பாஸ்'பெண்கள் அமோகம்

குரூப் - 4 தேர்வில், 17.53 லட்சம் பேர் பங்கேற்றதில், 15.02 லட்சம் பேர், அதாவது, 86 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெண்களில், 7.97 லட்சம் பேரும்; ஆண்களில், 6.28 லட்சம் பேரும், மூன்றாம் வகை பாலினத்தில், 35; மாற்று திறனாளிகள், 17 ஆயிரம்; விதவைகள், 5,000 மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள், 2,800 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தட்டச்சர் பதவிக்கு, 74 ஆயிரத்து, 555 பேரும்; சுருக்கெழுத்தர் பதவிக்கு, 1,446 பேரும் தேர்ச்சி பெற்றனர். வி.ஏ.ஓ., உள்ளிட்ட மற்ற ஆறு வகை பதவிகளுக்கு, 14.26 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.குரூப் - 4 தேர்வில், சைதை துரைசாமியின் மனிதநேயம் பயிற்சி மையத்தில் படித்தவர்களில், திருநாவுக்கரசு என்பவர், மாநில அளவில், 14வது இடம் பிடித்துள்ளார். செல்வகுமார், 33; கிருத்திகா, 114 மற்றும் கோபி, 731 ஆகிய இடங்களை பெற்றுள்ளனர்.