யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

5/10/18

பள்ளிக்கல்வி துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன

                                      

யூடியூப் மூலம் மாணவர்கள் கல்வி கற்கும் முறை வரும் கல்வியாண்டு முதல் அமல் : அமைச்சர் செங்கோட்டையன்


5,000 அரசுப் பள்ளிகளை மூடுவதா?" - கொட்டும் மழையில் முழங்கிய புதுக்கோட்டை அரசு ஊழியர்கள்

புதுக்கோட்டையில் ஜாக்டோ ஜியோ சார்பில் ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள்  ஒட்டு மொத்த தற்செயல் விடுப்பு போராட்டம்...


புதுக்கோட்டை,அக்.4 : அரசு நிர்வாகத்தின் அலட்சியப் போக்கை கண்டித்து ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் வியாழக்கிழமை  புதுக்கோட்டை பொதுத்துறை அலுவலக வளாகம் முன்பு  ஒரு நாள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு இரா.ரெங்கசாமி,மு.ராஜாங்கம்,க.சு.செல்வராசு ஆகியோர் தலைமை வகித்தனர்.

போராட்டத்தினை தொடங்கி வைத்து தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற மாநில துணைச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் பேசியதாவது: 1.4.2003 க்குப் பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்கும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமுல்படுத்திட வேண்டும்.

இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதி,அமைச்சுப் பணியாளர்கள்,கண்காளிப்பாளர்கள் ,தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலக பல்வேறு துறைகளிலுள்ள தொழில் நுட்ப ஊழியர்கள்,ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும்.சிறப்பு கால முறை ஊதியம் சத்துணவு,அங்கன்வாடி,வருவாய் கிராம உதவியாளர்கள் ,ஊராட்சி செயலாளர்கள்,ஊர்ப்புற நூலகர்கள் மற்றும் பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு தொகுப்பூதியமும்,கணினி ஆசிரியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியமும் வழங்கப் பட வேண்டும்.21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடன் வழங்கிட வேண்டும்.5000 அரசுப் பள்ளிகள் மூடுவதை உடனடியாக கைவிட்டு சமூக நீதியினைப் பாதுகாத்திட வேண்டும்.இளைஞர்களின் வேலைவாய்ப்பினை பறிக்க கூடிய வகையில் வெளியிட்ட பணியாளர்கள் பகுப்பாய்வுக் குழுவினை ரத்து செய்திட வேண்டும்..எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அக்டோபர் 13 ஆம் தேதி சேலத்தில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடும்,நவம்பர் 27 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தமும் நடைபெறும் என்றார்..

போராட்டத்தில் அரசு ஊழியர் சங்க பொறுப்பாளர் குமரேசன்,தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் கணேசன்,முதுகலை ஆசிரியர் சங்கம  மணிமேகலை,கல்லூரி பேராசிரியர்  சங்கம் நாகேஸ்வரன்,அங்கன்வாடி ஊழியர் சங்கம் இந்திராணி, சத்துணவு ஊழியர் சங்கம் மலர்விழி ,ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் மகேந்திரன்,கணேசன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்..

கூட்டத்தில் ஏராளமான  ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள்  கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது..

சொன்ன மாதிரியே நடக்குது....உலகம் அறியாத "மிரட்டும் பஞ்சாங்க அறிவியல்"..! இந்த ஆண்டு அக்டோபருக்கு பிறகு...தமிழகத்தில்..!

                                       

ஒவ்வொரு வருடமும் ஆண்டு இறுதிக்குள் ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்த வண்ணம் உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை உதாரணத்திற்கு சுனாமி, புயல்,டெங்கு காய்ச்சல், வெள்ளத்தில் மிதந்த சென்னை என சொல்லிக்கொண்டே போகலாம்.

அந்த வரிசையில் தற்போது இந்த ஆண்டு இறுதிக்குள் என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் சாதாரணமாகவே வந்து விடுகிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, உலகம் அறியாத பஞ்சாங்க அறிவியல் முறையில் புயல் ராமச்சந்திரன் ஒரு வருடத்திற்கு முன்பாகவே சில முக்கிய நிகழ்வுகளை கணித்து உள்ளார்.


அதன்படி, .
இந்த ஆண்டு இந்த மாதம் (அக்டோபர் மாதம்) முடிந்த பிறகு தமிழகத்தில் தென்மாவட்டங்கள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கும என ஒரு வருடத்திற்கு முன்பாகவே கணித்து உள்ளார்.
வடகிழக்கு பருவ மழையினால் மதுராந்தகம முதல் தென் தமிழகம் வரை பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கும் என்பதை ஆணித்தரமாக கூறுகிறார் புயல் ராமச்சந்திரன்.


இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இதை எப்படி நம்புவது..? அது உண்மை தானா..? இன்று இருக்கக்கூடிய நிலவரப்படி வானிலையை கணிக்க, நாளை முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்யக்கூடும் என மட்டும் தானே கணிப்பார்கள் என பலருக்கும் யோசனைதான்.
ஆனால் இவர் சென்ற ஆண்டே கணித்தது போல சில விஷயங்கள் நடந்து தான் வருகிறது
அதன்படி,
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவும் என்று கணித்தார். அதே போன்று தான் நடந்தது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 4 - 11 வரை கேரளாவில் வெள்ளம் ஏற்படும் என கணித்து இருந்தார். அவ்வாறே நடந்தது.
அதே போன்று, அதற்கேற்றவாறு தற்போது தமிழகத்தில், பேஆப் பெங்காலில் அக் 12 முதல் அக் 16 வரையில், ஆந்திரா ஒரிசா இடையே சைக்லோன் உருவாகும் என கணித்து உள்ளார். இதனால் மதுராந்தகம் முதல் தென் தமிழகம் வரை வெள்ளத்தால் அதிக பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வட மாவட்டங்கள் - மிதமானதாக இருக்கும் என அவர் கணித்து உள்ளார்


அதற்கேற்றவாறு தற்போது தமிழகத்தில், மழை பெய்ய தொடங்கி உள்ளது. ரெட் அலெர்ட் கூட விடுக்கப்பட்டு உள்ளது. விவசாய நிலங்கள் அதிக அளவில் பாதிக்கப்படும் என்றும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் போது, எப்ப்போது தான் மழை நிற்குமோ என்று தெய்வங்களை வேண்டும் அளவிற்கு மனம் செல்லும் என புயல் ராமச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.
மேலும் பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவில் தான், அவர் இவ்வாறு கணித்து உள்ளதாகவும் அறிவியல் பஞ்சாங்கம் என்பது உண்மை..ஒரு சில சமயத்தில் தான் கணிதத்தில் சில மாற்றங்கள் வரலாம். ஆனால் பெரிய மாற்றம் இருக்காது...தான் கணித்த வாறே கட்டாயம் நடக்கும். அறிவியல் பஞ்சாங்கத்தை மேலும் பல வல்லுனர்கள் கொண்டு கணித்தால் 300 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் பலவற்றை கணிக்கலாம் என்று உறுதிபட கூறுகிறார் புயல் ராமச்சந்திரன்
என்ன நடக்கிறது என்பதைபொறுத்திருந்து பார்க்கலாம்.

பள்ளிகள் விடுமுறை குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே முடிவு செய்வர்:- அமைச்சர் உதயகுமார் தகவல்!

தமிழகம் முழுவதும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. தமிழகத்தில் 4399 இடங்களில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.

வரும் சனிக்கிழமை (6/10/2018) பள்ளிகளுக்கு விடுமுறை


ஆரம்ப பள்ளிக்கு புதிய கட்டிடம் வேண்டும் கிராம சபை கூட்டத்தில் 2-ம் வகுப்பு மாணவி கோரிக்கை (பத்திரிகை செய்தி)

                                                         
திருவண்ணாமலை வந்தவாசி அடுத்த சளுக்கை கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஆரம்பப் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று 2-ம் வகுப்பு மாணவி கோரிக்கை விடுத்துள்ளார்.

காந்தி ஜெயந்தியையொட்டி, தி.மலை மாவட்டம் கீழ்பென்னாத் தூர் அடுத்த செல்லங்குப்பம் ஊராட்சியில் நேற்று முன்தினம் கிராம சபை கூட்டம் நடைபெற் றது. ஊராட்சி ஒன்றிய ஆணையா ளர் லட்சுமி நரசிம்மன் தலைமை தாங்கினார். சிறப்பு பார்வையாள ராக ஆட்சியரின் நேர்முக உதவியா ளர் (வளர்ச்சி) குமாரி பங்கேற்றார். கூட்டத்தில், பிளாஸ்டிக் பயன்படுத் துவதை தவிர்த்தல், குடிநீரை சிக்க னமாக பயன்படுத்துதல், சுகாதா ரத்தை கடைபிடித்தல் போன்றவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

இதேபோல, வந்தவாசி அடுத்த சளுக்கை ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் குப்புசாமி தலைமை வகித்தார். கழிவுநீர் கால்வாய், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தடையில்லாமல் செய்து கொடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் 2-ம் வகுப்பு படிக்கும் மாணவி மகாலட்சுமி,' தான் படிக்கும் ஆரம்பப் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் குப்புசாமி, ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்

25/9/18

82 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மீண்டும் தகுதி தேர்வு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

தேர்வு நிலை , சிறப்பு நிலை , ஊக்க ஊதியம் பெறுவதில் சிக்கல்

மாணவர் எண்ணிக்கை குறைவா? - அரசு பள்ளிகளில் கணக்கெடுக்கும் பணியை துவக்கியது குழு

அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை கணக்கெடுக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


தமிழகதில் இயங்கி வரும் 32 ஆயிரம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் செய்ய மத்தியஅரசு நிதி பயன்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் ஒரு வகுப்பில் ஒரு ஆசிரியருக்கு 30 மாணவர்கள் என்ற விகிதாச்சாரத்தில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு  தெரிவித்துள்ளது.

இதையடுத்து தமிழகத்தில் மாணவர்கள் எண்ணிக்கை  குறைவாக இருக்கும் பள்ளிகளை கணக்கெடுக்க பள்ளிக் கல்வித்துறை  உத்தரவிட்டுள்ளது. இதற்காக த னியாக குழு ஒன்றையும் பள்ளிக் கல்வித்துறை அமைத்துள்ளதாக ெதரிகிறது. மேற்கண்ட குழு கணக்கெடுப்பு பணியை தொடங்கியுள்ள நிலையில் தற்போது 500 பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது தெரியவந்துள்ளது.

எஸ்எஸ்ஏ சார்பில் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட நிதியில் நிறைவேற்றப்பட்ட பணிகளுக்கான செலவுக் கணக்கை சமர்ப்பிக்காத காரணத்தால் தமிழகத்துக்கு கிடைக்க  வேண்டிய நிதி நிறுத்திக் வைக்கப்பட்டுள்ளது. தற்ேபாது மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை கணக்கெடுத்து கொடுத்த பிறகே மத்திய அரசின் நிதி  கிடைக்கும் என்று தெரிகிறது.

தமிழக அரசு பள்ளிகளில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

தமிழக அரசு பள்ளிகளில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

தமிழக அரசு பள்ளிகளில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தனது இல்லத்தில் செய்தியாளா்களை சந்தித்த போது, இலங்கை யாழ்ப்பாளத்தில் உள்ள மிகப்பழமையான நூலகத்திற்கு 50 ஆயிரம் நூல்களும், தமிழா்கள் வாழ்கின்ற பகுதிகளில் உள்ள 5 நூலகங்களுக்கு 50 ஆயிரம் நூல்களும், இந்து பள்ளிகள் பத்துக்கு தலா 500 நூல்கள் என மொத்தம் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் நூல்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது
தமிழக அரசு பள்ளிகளில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும்.

வெயிட்டேஜ் முறை நீக்கப்பட்டுள்ளதால் அவா்களுக்கு மீண்டும் ஒரு தோ்வு வைக்கப்பட்டுள்ளது
அதில் வெற்றி பெறும் ஆசிரியா்களை கொண்டு காலிப்பணி இடங்கள் அனைத்தும் நிரப்பப்படும். ஆசிரியா் காலிப்பணியிடங்கள் உள்ள பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியா் கழகத்தின் மூலம் ரூ.7,500 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியா்களை நியமிக்க ஆணை பிறப்பித்துள்ளது. இந்த பணிகள் இன்னும் ஒரிரு நாட்களில் நிறைவடையும்
ஆசிரியா் தகுதித் தோ்வு எழுதியவா்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும்
9,10,11 மற்றும் 12 ஆகிய வகுப்புகள் கணினிமயமாக்கவும், 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பணிகள் நிறைவடைந்தவுடன் கணினி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும்
மேலும் 10, 11, 12 ஆகிய வகுப்பில் பொதுத்தோ்வில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு மீண்டும் தோ்வு எழுதி வெற்றி பெற இரண்டு மறு தோ்வுகள் நடத்தப்பட்டது
அது அடுத்தாண்டு முதல் ஜூன் மாதம் மட்டுமே மறு தோ்வு எழுதி வெற்றி பெறுமாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இரு முறை தோ்வு என்பதை மாற்றி ஒரு முறை தோ்வு என மாற்றம் செய்யப்பட்டுள்ளது
12 -ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 600 மதிப்பெண்கள் என்ற முறையில் தோ்வு எழுதி வெற்றி பெறும் மாணவா்கள் உயர்கல்விச் செல்வதில் எந்த சிக்கலும் இருக்காது. சிபிஎஸ்இ பள்ளிகளில் 500 மதிப்பெண்கள்தான் கணக்கிடப்படுகிறது என்றார்

கல்வி அதிகாரியை தள்ளிவிட்ட எம்.எல்.ஏ!

கம்யூட்டர், பிரிண்டர் வசதி இல்லாததால் 'ஆன்லைன் சம்பள பில் முறை' அரசு பள்ளிகளில் கேள்விக்குறி, கிராமப்புற தலைமை ஆசிரியர்கள் தவிப்பு

NEET & JEE EXAM 2019 - Important Dates!

தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை விண்ணப்பம் & விண்ணப்பம் அனுப்பும் போது பின்பற்ற வேண்டியவைகள்!!!

பள்ளிகளில் பிளாஸ்டிக் தடை எவர்சில்வர் வாட்டர் பாட்டில் விற்பனை அதிகரிப்பு :

தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் 5 ஆயிரம் பணியாளர், உதவியாளர் பணியிடங்கள் காலி

தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் 5,000-க்கும் மேற் பட்ட அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணியிடங்கள் காலி யாக உள்ளதால் குழந்தைகளின் கல்வி, சுகாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 54,439 அங்கன்வாடி மையங்கள் செயல் பட்டு வருகின்றன. இந்த மையங் களை அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் நிர்வகித்து வரு கின்றனர். அங்கன்வாடி பணியாளர் கள், உதவியாளர்கள் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு சத்துணவு, சுகாதாரம், முன்பருவ கல்வியை வழங்கி வருகின்றனர்.விழிப்புணர்வு பணிஇதுமட்டுமின்றி, வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட் டும் தாய்மார்களுக்குஇணை உணவு வழங்குவதுடன், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

5,000 அங்கன்வாடி பணியாளர்கள்

ஆனால், அங்கன்வாடி மையங் களில் ஏற்பட்டுள்ள அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப நட வடிக்கை எடுக்காததால் இந்தப் பணிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதன்படி, தமிழகம் முழுவதும் சிவகங்கை, திருவா ரூர், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 5,000-க் கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

5 மையங்கள் வரை...

காலிபணியிடங்கள் உள்ள மாவட்டங்களில், ஒரு அங்கன்வாடி பணியாளர், 5 மையங்கள் வரை நிர்வகிக்க வேண்டியுள்ளது. இத னால், அங்கன்வாடி மையங்களின் பலன்களை முழுமையாகப் பெற முடியாமல் குழந்தைகள், வளர் இளம் பெண்கள், பாலூட்டும் தாய் மார்கள்பரிதவித்து வருகின்றனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் பொது செயலாளர் டெய்சி கூறியதாவது:

தமிழகம் முழுவதும் சிவகங்கை, திண்டுக்கல், திருவாரூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் 5,000-க் கும் மேற்பட்ட அங்கன்வாடி பணி யாளர், உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.இதுதவிர, குறிப்பிட்ட கால இடைவேளியில் அங்கன்வாடி மையங்களில் பணியாற்றிய 2,000-க்கும் மேற்பட்டோர் ஓய்வு பெற்றுள்ளனர். ஆனால், இந்தப் பணியிடங்களும் அவ்வப்போது நிரப்பப்படவில்லை.இதனால், ஒரு அங்கன்வாடி பணியாளர் 5 மையங்கள் வரை நிர் வகிக்க வேண்டியுள்ளது. அன்றாடப் பணிகளை மேற்கொள்ளக்கூட சிரம மாக உள்ளது. எனவே, காலி பணியிடங்கள் அனைத்தையும்உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட ஆட்சியர் பொறுப்பு

இதுகுறித்து , ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டியது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் பொறுப்பு. எனவே, காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். அவர்களும் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழகம் முழுவதும் ஓய்வு பெற்றவர்களின் காலிப்பணி யிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.இருப்பினும், தற்போது பணியில் இருக்கும் பணியாளர்களைக் கொண்டு அங்கன்வாடி மையங் களைச் சிறப்பாகவே நிர்வகித்து வருகிறோம். எந்த பாதிப்பும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்

மாணவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ வேண்டும் - ஆசிரியர்களுக்கு I.A.S அதிகாரி அட்வைஸ்:

போக்குவரத்துக் காவலராய் உருவெடுத்தப் பள்ளி ஆசிரியை!

ஒரு காவல்துறை அதிகாரியாக ஆக வேண்டும் என்பது மாலாவின் சிறுவயதுக் கனவு. இருப்பினும், தன் பெற்றோரின் விருப்பத்திற்கு ஏற்ப, தன் கனவை விட்டுக்கொடுத்து, ஒரு ஆசிரியையாக மாறினார். காக்கியை ஒரு நாளும் அணிய இயலாது, தன்னுடைய கனவு ஒருபோதும் நிறைவேறாது என எண்ணினார் மாலை.  ஆனால் விதி வேறு திட்டங்களைக் கொண்டிருந்தது.“2006 ஆம் ஆண்டில், தான் வேலை செய்த பள்ளிக்கு, தமிழ்நாடு போலீஸ் போக்குவரத்து பாதுகாவலர் அமைப்பிடமிருந்து, ஆசிரியர்களை, போக்குவரத்து பாதுகாவலர்களாக, தன்னார்வப் பணி செய்வதற்கு அழைப்பு விடுத்து, சுற்றறிக்கை ஒன்று வந்தது. நான் ஒரு போலீஸ் அதிகாரியாக ஆக விருப்பப்பட்டது, எனது பள்ளிமுதல்வருக்கு தெரிந்திருந்ததால், இந்த தன்னார்வப் பணியை ஏற்க எனக்கு விருப்பமா எனக் கேட்டார். சிறிதும் தயக்கமின்றி, உடனே எனது விருப்பத்தைத் தெரிவித்தேன்”, எனக் கூறினார்.அன்றிலிருந்து, தான் எடுத்த முடிவிலிருந்து, மாலா, திரும்பிப் பார்க்கவில்லை. கடந்த 12 ஆண்டுகளாக, ஒவ்வொரு சனிக்கிழமை மாலையும், காக்கி உடை அணிந்து, மயிலாப்பூரின் பரபரப்பான சாலைகளில், போக்குவரத்தை நிர்வகிக்கின்றார். சென்னை மாநகரில் பணிபுரியும், இரண்டு பெண் போக்குவரத்து பாதுகாவலர்களில், மாலாவும் ஒருவர் ஆவார்.
"நான் பணியில் சேர்ந்த போது, சில பெண்கள் போக்குவரத்து காவலர்களாக இருந்தனர்,  ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர்கள் பணியிலிருந்து வெளியேறினார்கள்," என்கிறார் 37 வயதான, மாலா. மேலும் பல பெண்கள் இவ்வாறான தன்னார்வப் பணி செய்ய முன்நோக்கி வரவேண்டும் எனக் கூறுகிறார்.இரு குழந்தைகளின் தாயான, மாலா, திருமணமோ அல்லது குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்போ, அவரது தன்னார்வ சேவைக்கு இடையூறாக இருக்கவில்லை. மாங்காடு முதல் மயிலாப்பூர் வரை பயணம் செய்வது ஒரு பெரிய பிரச்சனையாகத் தெரியவில்லை, அவருக்கு. இதைப்பற்றி அவர் கூறுகையில், “போக்குவரத்தைச் சீர் செய்து, மக்களைப் பாதுகாப்பாக பயணிக்க உதவி புரிகையில், தொலைதூரப் பயணம் ஒரு பெரிய விஷயமாகத் தெரியவில்லை என்கிறார். மேலும், என் கணவர் மற்றும் குழந்தைகள், நான் செய்யும் சேவையை நினைத்து பெருமை கொள்கின்றனர், எனக்கு ஆதரவாகவும் திகழ்கின்றனர்”, என்று அவர் கூறுகின்றார்.ஒரு போக்குவரத்து வார்டன் என்ற முறையில், ஆர்.எஸ்.பீ கேடட்ஸ்களை முன்னின்று வழிநடத்துவது, சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் பேரணிகளை நடத்துவது ஆகியவை மாலாவின் பொறுப்புக்களாகும். இதைத்தவிர, தான் வேலை செய்யும், மயிலாப்பூர் சில்றன்ஸ் கார்டன் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, சாலை பாதுகாப்பு பற்றிய வழிமுறைகளை கற்றுக்கொடுக்கிறார். “மக்கள் பாதுகாப்பிற்கு, என்னுடைய சிறிய பங்களிப்பு தான், நான் செய்யும் இந்தப் பணி. விபத்து இல்லாத நகரமாக சென்னை கூடிய விரைவில் மாற வேண்டும் என விரும்புகிறேன்”, என்று கூறுகின்றார்.ஆசிரியர் மற்றும் போக்குவரத்துக் காவலர், எனப் பொது பணிக்குத் தன்னை அர்ப்பணம் செய்து, மக்கள் சேவையே மகேசன் சேவை, என்று வாழும் மாலா அவர்களை மனதாரப் பாராட்டுவோம். மேலும், மாலாவை முன்னுதாரணமாகக் கொண்டு, நாம் அனைவரும் தன்னார்வப் பணியில் ஈடுபட விழைவோமாக!