யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

3/12/18

எதிர் உணவுகளை ஒன்றாகச் சேர்த்து உண்ணக்கூடாது!----உடல்நலம் மருத்துவம்,


எதிர் உணவுகளை ஒன்றாகச் சேர்த்து உண்ணக்கூடாது!

எதிர் உணவுகளை சேர்த்து உண்டால் அவை ஒன்றுடன் ஒன்று வினைபுரிந்து உடல்நிலையை பாதிக்கும்.

உடலுக்குப் பெருங்கேடு உண்டாகும்!
எல்லோரும் இதை அறிந்து எதிர் உணவுகளை உண்ணாமல தவிர்க்கவும்.

எதிர் உணவுகள்
மீன் X முள்ளங்கிA
பசலைக்கீரை X  எள்
திப்பிலி X மீன்.
தயிர் X மீன் .
திப்பிலி X தேன்.
துளசி X  பால்.
தேன் X  நெய்.
பால் X  புளிப்பான பொருள்கள்.
மோர் X  வாழைப்பழம்
இறைச்சி X  விளக்கெண்ணெய்
முள்ளங்கி X  பால்
அகத்திக்கீரை X ஆல்கஹால்

இவையெல்லாம் ஒன்றுக்கொன்று எதிர் உணவுகள்.

நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
பலருக்கும் பகிருங்கள்!


உலர் திராட்சையை சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு அவ்வளவு நல்லது----உடல்நலம் மருத்துவம்,


உலர் திராட்சையை சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு அவ்வளவு நல்லது

உலர் திராட்சையில் (dry Raisins) உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

இதில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளை உலர் திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமடையும். தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளை உலர்திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.

உலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டு போட்டு காய்ச்சி ஆறவைத்து பழத்தை சாப்பிட்டு விட்டு பாலை குடித்தால் காலையில் மலச்சிக்கல் சரியாகும்.

தினமும் படுக்கைக்குச் செல்லும்முன் பாலில்
இந்தப் பழங்களைச் சேர்த்து காய்ச்சி அருந்திவந்தால் மலச்சிக்கல் தீரும். மலச்சிக்கலின்றி வாழ்ந்தால் நூறாண்டு நோயின்றி வாழலாம்.

இதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. குழந்தைக்கு பால்காய்ச்சும் போதும் அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால், தேக புஷ்டி உண்டாகும். குழந்தை திடமாக வளரும்.

 பெருஞ்சீரகத்தோடு இப்பழத்தை சேர்த்து கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வலி அனைத்தும் தீரும். இந்தப் பழத்தை அவ்வப்போது ஒன்று இரண்டு சாப்பிட்டு வருதல் நல்லது."

உலர் திராட்சையை சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு அவ்வளவு நல்லது

உரை மருந்து" மறந்துட்டோமே!!!-------உடல்நலம் மருத்துவம்,


"உரை மருந்து" மறந்துட்டோமே!!!
.--
குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் அருமையான பல பாரம்பர்ய முறைகள் நம்மிடம் இருந்தன. இவை, தற்போது `வேக்ஸின்களின் வருகையால் ஒட்டுமொத்தமாக மலையேறிவிட்டன.
.
குழந்தைகள் நல மருத்துவர்கள் இந்தப் பாரம்பர்யப் புரிதலை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் இந்த முறைகள் தொலைந்துபோவதற்கு முக்கியமான காரணமாகிவிட்டது.
.
கிட்டத்தட்ட 16 வகையான வேக்ஸின்களை வலியுறுத்தும் மருத்துவச் சமூகம், நம்மிடையே இருந்த 23 நோய் எதிர்ப்பு சக்தி தரும் மருந்துகளை அதன் ஆழத்தையும், மருத்துவக் குணத்தையும் புரிந்துகொள்ளாமல், மறக்கச் செய்துவிட்டது.
.
மறந்துட்டோமே "உரை மருந்து"
.
இந்தக்கால தாய்மார்கள் பலருக்கு இந்த வார்த்தை புதிதாக இருக்கலாம். ஆனால் நீங்கள் உங்கள் அம்மாவிடமோ அல்லது பாட்டியிடமோ இதை பற்றி கேட்டால், அவர்கள் சொல்வது இதுவாக தான் இருக்கும், "ஆம் அந்தக்காலத்தில் நாங்கள் உரை மருந்து கொடுக்காமல் குழந்தைகளை வளர்த்ததில்லை".
.
இந்த அறிய பொக்கிஷத்தை மூடநம்பிக்கை, நேரமின்மை, சரியான புரிதல் இன்மை மற்றும் நம் முன்னோர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் என்று நினைப்பது இப்படி பல காரணங்களால் மறந்துவிட்டோம்.
.
நாங்கள் நீங்கள் இதை செய்தே ஆகவேண்டும் என்று உங்களை வற்புறுத்தவில்லை. ஆனால் நீங்கள் உங்கள் குழந்தையின் நன்மைக்காக இந்த மருத்துவ முறை பற்றி சிறிது ஆராய்ந்து பின்னர் முடிவு எடுங்கள்.
.
அந்தக்காலத்தில் மருத்துமனைக்கு குழந்தைகளை தூக்கி சென்றதே இல்லை என்ற நிலை தற்போது மாறி இருப்பதை பற்றி சிந்தித்து பாருங்கள்.
.
உரை மருந்து என்றால் என்ன?
.
இயற்கை மருந்துகள் சிலவற்றை உரைகல்லில் உரைத்து குழந்தைகளுக்கு புகட்டுவது.
.
எவை எவை உரை மருந்தாகிறது?
.
1.வசம்பு
2.கடுக்காய்
3.மாசிக்காய்
4.சித்தரத்தை
5.ஜாதிக்காய்
6.சுக்கு
*மஞ்சள்(தேவை என்றால்)
.
எப்படி உபயோகப்படுத்துவது?
முதலில் மேற்கூறப்பட்டுள்ள மருத்துகளை ஒரு கப் தண்ணீர் அல்லது தாய்பால் விட்டு கொதிக்க விடவும். பிறகு ஒரு கப் தண்ணீர் அரை கப் அளவான உடன், தண்ணீரை வடிகட்டி விட்டு மருந்துகளை நிழலில் உலர்த்தி காற்று புகாத மூடி போட்ட பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
.
பிறகு மருந்துகளை உரைகல்லில் தாய்பால் அல்லது தண்ணீர் விட்டு உரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
.
ஒவ்வொரு மருந்தையும் இரண்டு முதல் பதினைந்து முறை வரை உரைக்கலாம்.(வசம்பை தவிர)
.
உரைத்து எடுத்த மருந்தை பாலாடையில் விட்டு மேலும் சிறிது தாய்பால் அல்லது தண்ணீர் விட்டு குழந்தைக்கு புகட்ட வேண்டும்.
.
எப்போது கொடுக்க வேண்டும்?
.
குழந்தையை குளிக்க வைத்தவுடன் இந்த மருந்தை கொடுப்பது வழக்கம்.
.
ஒரு நாள் விட்டு மறுநாள் கொடுக்கலாம்.
.
குழந்தையின் இரண்டு மாதம் முதல் மூன்று வயது வரை கொடுக்கலாம்.
.
உரை மருந்துக்கான மூலப் பொருட்களும் அவற்றை சுத்தப்படுத்தும் முறைகளும், அவற்றின் மருத்துவ பயன்களும்...
.
கடுக்காய், சித்தரத்தை, சுக்கு, ஜாதிக்காய், மாசிக்காய், வசம்பு என்ற ஆறு கடைச்சரக்குகள்.
.
நெல்லைப் புழுக்குவதற்கு வேக வைக்கும்போது நெல்லுடன் இவற்றை அப்படியே வெள்ளைத்துணியில் முடித்து வைத்துவிடவும்.
அல்லது (2கிலோ நெல் வாங்கி வந்து தனியாக அவிக்கவும்.)
அரை வேக்காடு ஏற்பட்டதும் (காய்களை அழுத்தினால் அழுந்தும் பதம் வந்தவுடன்) எடுத்து நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும். உரை மருந்து தயார்.
.
கை அகலத்திலுள்ள உரைகல் ஒன்று தேவை.
அதில் வாயு, சளி என்றால் வெந்நீரிலும்,

சளி, மப்பு என்றால்
வெற்றிலைச் சாற்றிலும்,துளசிச் சாறு, தேன் கலந்தும்,

வயிறு மந்தம், வயிற்றுப்போக்குக்கு, தேன், ஓமகஷாயம்,

மப்பு, ஜூரம், வாந்திக்கு
 இஞ்சிச் சாறு,தேன் விட்டும், பிரச்சனைக்கேற்ப இவற்றில் ஒன்றைவிட்டு ஒவ்வொன்றையும் வயதிற்கேற்றபடி 2  அல்லது 5 தடவை உரைத்து வந்த விழுதைத் தேன் சேர்த்துக் கொடுக்கவும்.
.
#கடுக்காய்:
.
நல்ல ஜீரண சக்தி, பசி தரும். மலத்தை இளக்கும். புளிப்பு(வயிற்றில்) அதிகமாவதைத் தடுக்கும். அஜீரண பேதியைத் தடுக்கும். குடல், இரைப்பை, கல்லீரல் சரியே இயங்கச் செய்யும்.
.
#சுக்கு:
.
வயிற்றில் வாயு சேர விடாது. வயிறு உப்புசம், மலஜலம் சரியாக வெளியேறாதிருத்தல், மப்பால் வயிற்றுவலி, அஜீரணம், வாந்தி இவற்றைப் போக்கும். ஆனால் வயிற்றில் அழற்சி, கடுப்புடன் சீதத்துடன் மலம் வெளியாதல் ரத்தப்போக்கு போன்றவை இருந்தால் சுக்கை உரைத்துக் கொடுக்கக்கூடாது.
.
#சித்தரத்தை:
.
தொண்டை மார்பு இவற்றில் கபக்கட்டு, உடலில் கடுப்பு வலி இவற்றில் நல்லது. எண்ணெய் தேய்த்தால் ஜூரம் சளி பிடிக்கும் என்ற நிலையில் இதனைத் தொடர்ந்து கொடுக்கலாம். தொண்டை-வாய்ப்புண், வறட்டிருமல், வயிற்று வேக்காளம் உள்ள நிலையில் சித்தரத்தையைக் கொடுக்கக்கூடாது. கபக்கட்டுள்ள நிலையில் இதனையும், சுக்கையும் அதிகம் உபயோகிக்கலாம்.
.
#ஜாதிக்காய்:
.
இரைப்பையை நன்கு தூண்டி, ருசி சுவை கூட்டி பசி ஜீரண சக்தி தரும். சிடுசிடுப்பு, பரபரப்பு, காரணம் புரியாத அழுகை முதலியதைக் குறைத்து அமைதியாகத் தூக்கம் வரச் செய்யும். இளகிச் சூட்டுடன் அடிக்கடி மலம் போவதை இது தடுக்கும்.
.
#மாசிக்காய்:
.
வேக்காளத்தைக் குறைக்கும். வாய்ப்புண், இரைப்பைப் புண், குடல் புண் இவற்றைக் குறைக்கும். பற்களைக் கெட்டியாக அழகாக வளரச் செய்யும். உடலில் விஷசக்தி பரவாமல் தடுக்கும். சிறுநீர் தாராளமாக வெளியாகும். தொண்டைச் சதை வளர்ச்சி, உள்நாக்கு வளர்ச்சி, சீத ரத்தத்துடன் மலப்போக்கு, வாயில் உமிழ்நீர் அதிகம் பெருகுதல் இவற்றைக் கட்டுப்படுத்தும்.
.
#வசம்பு :
.
இதுவும் கடுக்காயும், பிள்ளை வளர்ப்பான் என்ற பெயர் பெற்றவை. பசியின்மை, சுறுசுறுப்பின்மை, ருசியின்மை இவற்றைப் போக்கும். பரபரப்பு, சிடுசிடுப்பு, அமைதியின்மை இதனைச் சீராக்கும். பால் ஜீரணமாகாமல் வெளுத்து மலம் போவது, கீரிப்பூச்சி, உப்புசம், வயிற்றுவலி, மார்பில் கபச்சேர்வை இவற்றைப் போக்கும். உடல் சீராக வளர உதவும்.
.
#கார_மருந்து என இதற்குப் பெயர்.
.
அதனால் உரைத்த மருந்தை #சிறுகச்சிறுகபுகட்ட_வேண்டும். தேன் சேர்த்து இனியதாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

சிறு சிசுவிற்கு 10 – 15 உரைப்பு வரை தேவைப்படும்.

 மூளைக்கும் குடலுக்கும் நல்ல செயல் திறனைத் தரும் இம்மருந்தை குழந்தைகளுக்கு ஏழு அல்லது எட்டு வயது முடியும் வரை தொடர்ந்து கொடுத்து வரலாம்.!
.

லெமன் ஜூஸ்----உடல்நலம் மருத்துவம்


உங்க நாக்குல வெள்ளையா இருக்கா? அது ஆபத்தா? எப்படி சுத்தப்படுத்தலாம்?



நாக்கில் வெள்ளைப்படலம் தென்படுவது பாக்டீரியா பெருக்கத்தால் ஏற்படுகிறது. இதை சில இயற்கை முறைகளை கொண்டு நாம் போக்கலாம். நாக்கு நமது உடலில் உள்ள மிக முக்கியமான உறுப்பும் கூட. இது தான் உணவின் சுவையை உணர்வதற்கு நமக்கு உதவுகிறது. எனவே அதை சுத்தமாக வைப்பது என்பது நமது கடமை. இந்த பாக்டீரியாக்கள் பெருகி அந்த இடத்தில் இறந்த செல்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் இந்த வெள்ளைப்படலம் தோன்றுகிறது.



இதை அப்படியே விட்டு விட்டால் நாக்கு முழுவதும் படர்ந்து பின்னாளில் பற்சொத்தை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்த கூடிடும். எனவே இதை இயற்கை முறைகளைக் கொண்டு போக்கி பயன் பெறலாம்.

   

புரோபயோடிக்ஸ்

புரோபயோடிக்ஸ் உணவுகள் நாக்கில் இருக்கும் இந்த கெட்ட பாக்டீரியாக்களை எதிர்த்து போரிடுகிறது. இது அழற்சியை போக்கி வெள்ளைபடலத்தை உருவாக்கும் மைக்ரோபஸ்யை அழிக்கிறது.


உணவுகள்

புரோபயோடிக் உணவான யோகார்ட் (தயிர்) போன்றவற்றை தினமு‌ம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். புரோபயோடிக் மாத்திரைகளை கூட நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

   

கிளிசரின்

உங்கள் நாக்கு இந்த வெள்ளை படலத்தால் அதிகமாக பாதிகுகப்பட்டு இருந்தால் ஒரு நாளைக்கு இரண்டு முறை கிளிசரின் அப்ளே செய்து கொள்ளுங்கள்.
ஒரு சினன டூத் பேஸ்ட்டை கொண்டு கிளிசரினை அப்ளே செய்யுங்கள்.
2 நிமிடங்கள் பல் துலக்கவும், பிறகு வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீர் கொண்டு நாக்கை சுத்தம் செய்யுங்கள்.

   

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்யில் ஆன்டி பாக்டீரியல் தன்மை உள்ளது. இது வாயில் பெருகி உள்ள கெட்ட பாக்டீரியாக்களை கொல்லும். எனவே உங்கள் நாக்கை சுத்தம் செய்ய தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தி கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
1 டீ தேங்காய் எண்ணெய் (5 கிராம்)
ஒரு சின்ன பிரஷ்
பயன்படுத்தும் முறை
காலையில் எழுந்ததும் உங்கள் வாயை தேங்காய் எண்ணெய் கொண்டு கொப்பளியுங்கள்.
நாக்கையும், பற்களையும் சுத்தம் செய்ய 3-4 நிமிடங்கள் பிரஷ் செய்யுங்கள்.
பிறகு குளிர்ந்த நீரில் கழுவி பற்பசையை கொண்டு எப்பொழுதும் போல பல் துலக்குங்கள்.

   

கற்றாழை ஜூஸ்

கற்றாழை ஜூஸில் பூஞ்சை எதிர்ப்பு பொருள், ஆன்டி பாக்டீரியல் மற்றும் அழற்சியை எதிர்ப்பு பொருள் உள்ளது. இது நாக்கில் உள்ள வெள்ளை படலத்தை போக்குகிறது.
பயன்படுத்தும் முறை
2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜூஸைக் கொண்டு வாயை சுத்தப் படுத்தி கொள்ளுங்கள்.
பிறகு எப்பொழுதும் போல் பற்பசையை கொண்டு பல் துலக்கி கொள்ளுங்கள்.


பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா நாக்கில் உள்ள வெள்ளை படலத்தை போக்க உதவுகிறது. இது நாக்கின் pH அளவை நடுநிலையாக்குகிறது.
இதனால் பாக்டீரியா மேற்கொண்டு வளர்வது தடுக்கப்படுகிறது.
இதனுடன் லெமன் ஜூஸ் உங்கள் நாக்கில் இருக்கும் புண்களை ஆற்றுகிறது.
தேவையான பொருட்கள்
1 டீ ஸ்பூன் பேக்கிங் சோடா (5 கிராம்)

   

லெமன் ஜூஸ்--

பயன்படுத்தும் முறை
பேக்கிங் சோடா மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்து குழைத்து கொள்ளுங்கள்.
இந்த பேஸ்ட்டை பிரஷ்ஷில் வைத்து 2 நிமிடங்கள் நாக்கை சுத்தம் செய்யுங்கள்.
பிறகு குளிர்ந்த நீரில் கழுவி டூத் பேஸ்ட் கொண்டு எப்பொழுதும் போல் பிரஷ் செய்யுங்கள்.


கடல் உப்பு

கடல் உப்பும் இதற்கு ஒரு சிறந்த தீர்வை தருகிறது. கடல் உப்பு நாக்கில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது.
கடல் உப்பில் உள்ள ஆன்டி செப்டிக் பொருள் பாக்டீரியாவை கொல்லுகிறது.
சிறுதளவு கடல் உப்பை எடுத்து உங்கள் நாக்கில் தடவிக் கொள்ளுங்கள். 3 நிமிடங்கள் நாக்கை நன்றாக சுத்தம் செய்யுங்கள். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

   

மஞ்சள்

மஞ்சளில் உள்ள ஆன்டி பாக்டீரியல் பொருள் நாக்கில் உள்ள வெள்ளை படலத்தை போக்குகிறது.
இதனுடன் சிறுதளவு லெமன் ஜூஸ் கூட சேர்த்து கொள்ளலாம். இது உங்களுக்கு ப்ரஷ் பண்ண எளிதாக இருக்கும்.
பயன்படுத்தும் முறை
1 டீ ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறுதளவு லெமன் ஜூஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.
3 நிமிடங்கள் ப்ரஷ் செய்து பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.


டிப்ஸ்கள்

ஒரு நாளைக்கு 3 முறை ப்ரஷ் செய்யும் வழக்கத்தை வைத்து கொள்ளுங்கள். இருந்தாலும் அதிகமாக நீண்ட நேரம் ப்ரஷ் செய்வது அல்லது மதிய வேளைகளில் ப்ரஷ் செய்வதை தவிர்த்து விடுங்கள்.
மேலே குறிப்பிட்டுள்ள எதாவது ஒரு இயற்கை முறையைக் கொண்டு பலன் பெறுங்கள்.

அதிகமான தண்ணீர் குடியுங்கள். இது நாக்கில் உள்ள ஈரப்பதத்தை காத்து பாக்டீரியா பெருக்கத்தை குறைக்கும்.