யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

16/12/18

Income Tax SlabRates Income Tax Slab Rates




For Male and Female,
Up to 2,50,000-Nil
2,51,000-5,00,000- 5%
5,00,001-10,00,000- 20%
10lakh and above- *30%


Education has revised as Health and Education Cess and Cess is 4% now.
Previously it was 3%
80 C Deduction-1.5 lakhs
Home loan interest deduction- 2 lakhs
80D-Mediclaim,NHIS deduction raised to 1lakh.
Previously it was 30,000


Standard Deduction என்னும் புதிய பிரிவின் மூலம் 40,000 ரூபாயை ஒட்டுமொத்த சம்பளத்தில் கழித்துக் கொள்ளலாம். போக்குவரத்து மற்றும் மருத்துவச் செலவுகளுக்காக இவ்விலக்கு அளிக்கப்படுகிறது. இதற்காக ரசீதுகள் சமர்ப்பிக்கத் தேவையில்லை.
மற்றபடி வேறெந்த மாற்றமுமில்லை

பள்ளிக் கல்வித்துறையின் கல்வித் தொலைக்காட்சி பொங்கல் திருநாளில் தொடக்கம்! பள்ளிக் கல்வித்துறையின் கல்வித் தொலைக்காட்சி பொங்கல் திருநாளில் தொடக்கம்!



தமிழகத்தில் பள்ளிக் கல்வி தொடர்பான விஷயங்களைஒளிபரப்புவதற்காக கல்வித் தொலைக்காட்சி பொங்கல் திருநாளில் தொடங்கப்படவுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிக்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசுமேற்கொண்டு வருகிறது. குறிப்பாக புதிய பாடத்திட்டம், ரேங்க் முறை ரத்து,எஸ்சிஇஆர்டி யூடியூப்-

சேனல் போன்ற திட்டங்களுக்கு பொதுமக்கள்மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறையின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லவும்,பொதுத்தேர்வுகள், கல்வி உதவித்தொகை தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள்தொடர்பாக மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கவும் புதியதொலைக்காட்சி அலைவரிசை தொடங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறைஅமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.


இதையடுத்து இதற்கான பணிகளை மேற்கொள்ள பள்ளி கல்வி இயக்குநர்வி.சி. ராமேஸ்வர முருகன், மாநிலகல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிநிறுவன இயக்குநர் க.அறிவொளி, ஒருங்கிணைந்த கல்வி திட்டஇயக்குநர்சுடலைகண்ணன் மற்றும் இணை இயக்குநர்கள் கொண்ட குழுஅமைக்கப்பட்டது.கல்வித் தொலைக்காட்சி அலைவரிசைக்கானதொழில்நுட்பப் பணி மற்றும் தொலைக்காட்சிக்கான முன்தயாரிப்புகாட்சிகளைப் பதிவு செய்யவும் தனியாக ஒரு குழுவும்ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதே போன்று கேமராக்கள், தொழில்நுட்பக்கருவிகள்வாங்கும் பணிகளும் தொடங்கியுள்ளன.இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியது:இந்தியாவில் கேரளம் உள்ளிட்ட ஒருசிலமாநிலங்களில் மட்டுமே கல்விக்கென பிரத்யேக தொலைக்காட்சி சேனல்உள்ளது. இது போன்ற அலைவரிசையை தமிழக மாணவர்களுக்காகதொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்.... கல்வித் தொலைக்காட்சிக்கானபடப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப தளம் (ஐய்ற்ங்ஞ்ழ்ஹற்ங்க்உக்ன்ஸ்ரீஹற்ண்ர்ய்ஹப் இட்ஹய்ய்ங்ப் இங்ய்ற்ழ்ஹப்ண்ள்ங்க் நற்ன்க்ண்ர்)சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் 8 ஆவதுதளத்தில் அமையவுள்ளது. பள்ளிக் கல்வி செயல்பாடுகளைப் பதிவுசெய்வதற்காக வழக்கமான கேமராக்களுடன் ஆளில்லா பறக்கும்கண்காணிப்பு ("ட்ரோன்') கேமரா வாங்கப்படும். இந்தப் பணிகளுக்காகமுதல் கட்டமாக ரூ.1.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

என்னென்ன அம்சங்கள்?:

 கல்வித் தொலைக்காட்சி அரசு கேபிளில் 200 ஆவது அலைவரிசையில்ஒளிபரப்பாகும். புதிதாக தொடங்கப்படவுள்ள எல்.கே.ஜி. வகுப்புகள் முதல்பிளஸ் 2 வகுப்பு வரை பள்ளிக் கல்விக்காக அரசு செயல்படுத்தும்திட்டங்கள், கல்வி உதவித் தொகைகளுக்கு விண்ணப்பிக்கும் முறை, நீட்உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கான விளக்கங்கள், புதுமையான முறையில்கற்பிக்கும் ஆசிரியர்களின் நேர்காணல், அரசுப் பள்ளி மாணவர்களின்கண்டுபிடிப்புகள், பள்ளிகளுக்கான முக்கிய சுற்றறிக்கைகள்,கல்வியாளர்களின் கலந்துரையாடல் என பல அம்சங்கள் இடம்பெறும்.

இதன் மூலம் கல்வித்துறை சார்ந்த அனைத்து செயல்பாடுகளையும்மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளமுடியும். பொங்கல் திருநாளில் கல்வித்தொலைக்காட்சி ஒளிபரப்பைதொடங்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

TAMIL UNIVERSITY UNAPPROVAL REGARDING - RTI LETTER



2012&13&14 TET ல் தேர்ச்சி பெற்றவர்களது பணிநியமனத்தில் முறைகேடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பாணை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி வழக்கு !

2012&13&14 ஆசிரியர் தகுதிதேர்வு தேர்வு தேர்ச்சி பெற்றவர்களின் பணி நியமனத்தில் முறைகேடு. மேலும் குறிப்பாக 2017 ஆண்டு வெளியிடபட்ட 1114 பணியிடங்கள் நிரப்ப வெளியிடபட்ட இறுதிபட்டியலில் தேர்வு வாரியத்தால் நிராகரிக்கபட்ட பலர் தற்போது பணிபுரிகின்றனர். இந்த அறிவிப்பாணையில் பல்வேறு முறைகேடுகளை ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டது.

14/12/2018 அன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்கள் திரு.K.Kசசிதரன்
P.D ஆதிகேசவலு
முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 
வழக்கறிஞர் S.Sதேசிகன்  வாதாடினார். 
 இந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனர் ஆகியோருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ் அனுப்பியது. 


மேலும் 2013 ஆசிரியர் தகுதிதேர்வில்  தேர்ச்சி பெற்ற நலசங்கத்தின் மாநில தலைவர் இளங்கோவன் என்பவர் தொடர்ந்த இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 7ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இது குறித்து வழக்கு தொடர்ந்த இளங்கோவனிடம் கேட்ட போது ஆசிரியர் தேர்வுவாரிம் தொடர்ந்து   முறைகேட்டில் ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்தது. இவ்வழக்கில்  முறைகேடு சார்ந்த 52 ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாகவும் மேலும் ஆசிரியர்  முறைகேடு சார்ந்த கூடுதல்  ஆவணங்கள் , ஆதாரங்கள் இருப்பின் ஆசிரியர் பெருமக்கள் அளித்தால் முறைகேடுகளை முற்றிலுமாக களையலாம், சம்மந்தபட்ட அத்துணை பேர்மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க இயலும் என தெரிவித்தார். தொடர்பு எண்கள் 9994994339

கற்றல் இனிது 1 ... ப-ப-ப, ப-கோ -ப , கோ-ப-கோ, செ-க-ப என்ன வேறு மொழியில திட்ற மாதிரி இருக்குங்களா ? இல்ல இல்ல இது கணக்கு பாடம். இந்த வார்த்தைகள் பெயரிட்டு கூறினாலே மாணவன் கணிதத்தை விட்டு தூர ஓடி விடுவான்.

கற்றல் இனிது 1 ...

ப-ப-ப, ப-கோ -ப , கோ-ப-கோ, செ-க-ப என்ன வேறு மொழியில திட்ற மாதிரி இருக்குங்களா ? இல்ல இல்ல இது கணக்கு பாடம்.
இந்த வார்த்தைகள் பெயரிட்டு கூறினாலே மாணவன் கணிதத்தை விட்டு தூர ஓடி விடுவான்.

Concept புரிஞ்சிடுச்சுனா 1000 கணக்கு தந்தாலும் அசத்தலா போட்டுடலாம்.

கணிதத்தில் அடுத்த நாள் நடத்தும் பாடத்திற்கான _ Surprise செயல்பாடுகளை வழங்குவதால் பாடம் சார் புரிதல் மேம்படும் என்ற கோணத்தில் இப்பயணம்.

பிள்ளைகளுக்கு கணிதம் புரியாமல் போவதற்கு காரணம் ... வாழ்வியலோடு தொடர்பற்ற கணக்கிடலே.

5 x 20 எவ்வளவு ? பதில் தராத மாணவனும் 5 பேர் கிட்ட 20 சாக்லேட் இருக்கு மொத்தம் என்றவுடன் 100 சார் என சொல்லும் மெல்ல மலரும் அரும்பின் குரலில் துளிர்க்கிறது - கணிதம் உயிர்ப்புடன்...

எனவே பாடம் நடத்தும் முந்தைய நாளில் சில களப்பயணம் - அவை தொடர்ந்து பாட விளக்கம்...

இன்றைய தேடல் - சர்வ சம முக்கோணம் ...

சர்வ சம உருவம் முதல்ல புரிய சொல்லி தந்து தலைப்பை வெளிபடுத்தலாம்.

போர்டும் டஸ்டரும்,
ஜன்னலும் சுவரும்,
கொடி கம்பமும் சிறு செடியும் ,
ஜாமென்றி பாக்ஸ்யும்  5 ரூ அப்சரா ரப்பரும், சாப்பிடும் தட்டும்
டிபன் பாக்ஸ் மூடியும் ...

இதெல்லாம் கிட்ட திட்ட சர்வ சம உருவங்கள்

அதாவது வடிவம் ஓரே மாதிரியான உருவங்கள் - அவற்றிலிருந்தே சர்வ சமம் தோன்றுகிறது .. என்ன அதற்கு கொஞ்சம் ரூல்ஸ் இருக்கு...

முதல்ல இன்று நாம சர்வ சம முக்கோணம் பற்றி பார்ப்போம்.

வழியில் வரும் போது கண்ட பொருட்களில் எல்லாம் கணிதம் இருந்தது. அவையே இதற்கான செயல்பாடுகளாயின...

1.ஒரு பிரட் துண்டை கொண்டு வர செய்து மூலை விட்டம் வழி கட் செய்யும் போது கிடைக்கும் உருவத்தை உற்று நோக்குக..

2. 5 ரூ Dairy Milk சாக்லெட் யை மூலைவிட்டம் வழியாக கட் செய்து வரும் உருவம் எப்படி உள்ளது என பார்க்க ?

3. அமரும் தரையின் டைல்ஸ் மூலை விட்டங்களை சாக்பீஸ் கொண்டு வரைவோம் நிகழ்வது என்ன ?

4. மணல் கடிகாரம் வைத்து மணல் இறங்கும் போது உண்டாகும் முக்கோணம் போன்ற உருவத்தில் புரிவது என்ன ?

5. அஞ்சல் கடித 4 மடிப்புகளை மடித்து உற்று நோக்குக. என்ன உருவம் வருகிறது?

6. வீட்டில் பட்டம் தயார் செய்து குறுக்கே குச்சிகளால் ஒட்டும் போது தோன்றும் வடிவம் பார்த்து வா ?

7. கத்தரிக்கோல் திறக்கும் போதும் மூடும் போதும் உண்டாகும் உருவம் பார்?

8. கடைக்கு சென்று கயிறுதராசின் இரு புறமும் உண்டாக கூடிய முக்கோணத்தை நன்கு கவனி

9. தென்னம் பிஞ்சுகளை கொண்டு தேர்களை உருவாக்கி கொண்டு வா ? உருவத்தில் உணர்வது என்ன?

10. வீட்டின் கூரையின் இருபுறமும் பார் - மனதில் தோன்றுவது யாது ?

12. மின்னோட்டத்தை கொண்டு வரும் Tranform கம்பத்தின் உச்சிகளின் வடிவத்தை பார்த்து உணர்வதை எழுதி வா

13. பாலங்களில் உள்ள கம்பிகளிலும், பழைய  கட்டிடத்தின் மேல் தள இரும்பு கம்பிகளையும் பார் தோன்றும் உருவம் என்ன ?

14. காக்கா முட்டை பீட்சா போன்று தோசையை 8 சம பாகமா பிரிக்க என்ன உருவம் வருகிறது என பார் ?

15. மோகன் பர்த்டேக்கு வட்ட வடிவ கேக் வெட்டும் போது உருவாகும் வடிவத்தை பார்?

மேற்கூறிய அனைத்து நிகழ்வுகளிலும் சர்வ சம முக்கோணங்களை பயன்படுத்தி வாழ்ந்து வருகிறோம்.

சின்ன வயசுல செய்த காகித காமிராவிலும் - கத்தி கப்பலிலும் கூட வடிவொத்த முக்கோணங்கள் இருக்கு .. சர்வ சமம் இருந்தா கப்பல் அழகா வரும் இல்லனா அது... உடைஞ்ச கப்பலாயிடும்...

இதை களப்பயணமாக வழங்கி விட்டு பின் - சர்வ சம முக்கோணம் நடத்தினால் இறக்கும் வரை கணித Concept மறக்காது.

இது போன்ற நிகழ்வுகளை உற்று நோக்கிய பின் ப-ப-ப
கோ - ப_ கோ
ப-கோ - ப
ஆகியற்றை கூறினால் - நிச்சயம் கணிதமும் இனிக்கும்.

தெரியாத விஷயம் ஒன்றை கூறவா ? என்றதும் மாணவர் விழிகள் உற்று நோக்கும் போது

டாவின்சி னு ஒருத்தரு வரைந்த மோனலிசா ஓவியமும் பல்வேறு சர்வ சம முக்கோணங்களை இணைத்து வரையப்பட்ட ஓவியமாம்...

எகிப்த்தில் மம்மிஸ் புதைச்சு வச்சுருக்க பல ஆயிரம் பிரமிட் உருவங்கள் சர்வ சம முக்கோணங்கள் தானாம் .. இதற்காக தேல்ஸ் என்பவர் பல வருஷம் ஆராய்ச்சி செய்திருக்காராம்...

வாவ்... ஆச்சரியத்துடன் கணிதத்திலும் ஆராய்ச்சி பண்ணலாமா சார் ?

ஆமாம் டா தம்பி ... புரிஞ்சதா எல்லாருக்கும் ? (உண்மையாகவே )புரிஞ்சது சார் எனும் போது - ஆசிரியம் வெற்றி பெறுகிறது.

 சிந்திக்கும்
பிள்ளைகளுடன் சங்கமிப்போம்

அடுத்த தேடலில் சந்திப்போம்...


கனவுப்பள்ளி பிரதீப்.

தமிழகத்தில் பள்ளிக் கல்வி தொடர்பான விஷயங்களை ஒளிபரப்புவதற்காக கல்வித் தொலைக்காட்சி பொங்கல் திருநாளில் தொடங்கப்படவுள்ளது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வி தொடர்பான விஷயங்களை ஒளிபரப்புவதற்காக கல்வித் தொலைக்காட்சி பொங்கல் திருநாளில் தொடங்கப்படவுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் மாணவர்கள்,  ஆசிரியர்கள்,  பள்ளிக் கட்டமைப்பு மேம்பாட்டுக்கான பல்வேறு நடவடிக்கைகளை
தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.  குறிப்பாக புதிய பாடத்திட்டம்,  ரேங்க் முறை ரத்து,  எஸ்சிஇஆர்டி யூடியூப்-சேனல் போன்ற திட்டங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


 இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறையின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லவும்,  பொதுத்தேர்வுகள், கல்வி உதவித்தொகை தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் தொடர்பாக மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கவும் புதிய தொலைக்காட்சி அலைவரிசை தொடங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.
இதையடுத்து இதற்கான பணிகளை மேற்கொள்ள பள்ளி கல்வி இயக்குநர் வி.சி. ராமேஸ்வர முருகன், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் க.அறிவொளி, ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குநர் சுடலைகண்ணன் மற்றும் இணை இயக்குநர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
கல்வித் தொலைக்காட்சி அலைவரிசைக்கான தொழில்நுட்பப் பணி மற்றும் தொலைக்காட்சிக்கான முன்தயாரிப்பு காட்சிகளைப் பதிவு செய்யவும் தனியாக ஒரு குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  அதே போன்று கேமராக்கள், தொழில்நுட்பக் கருவிகள் வாங்கும் பணிகளும் தொடங்கியுள்ளன.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியது:

இந்தியாவில் கேரளம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் மட்டுமே  கல்விக்கென பிரத்யேக தொலைக்காட்சி சேனல் உள்ளது. இது போன்ற அலைவரிசையை தமிழக மாணவர்களுக்காக தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்.... கல்வித் தொலைக்காட்சிக்கான படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப தளம் (ஐய்ற்ங்ஞ்ழ்ஹற்ங்க் உக்ன்ஸ்ரீஹற்ண்ர்ய்ஹப் இட்ஹய்ய்ங்ப் இங்ய்ற்ழ்ஹப்ண்ள்ங்க் நற்ன்க்ண்ர்) சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் 8 ஆவது தளத்தில் அமையவுள்ளது. பள்ளிக் கல்வி செயல்பாடுகளைப் பதிவு செய்வதற்காக வழக்கமான கேமராக்களுடன் ஆளில்லா பறக்கும் கண்காணிப்பு ("ட்ரோன்') கேமரா வாங்கப்படும்.  இந்தப் பணிகளுக்காக முதல் கட்டமாக ரூ.1.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. என்னென்ன அம்சங்கள்?:  கல்வித் தொலைக்காட்சி அரசு கேபிளில் 200 ஆவது அலைவரிசையில் ஒளிபரப்பாகும்.   புதிதாக தொடங்கப்படவுள்ள எல்.கே.ஜி.  வகுப்புகள் முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பள்ளிக் கல்விக்காக அரசு செயல்படுத்தும் திட்டங்கள்,  கல்வி உதவித் தொகைகளுக்கு விண்ணப்பிக்கும் முறை,  நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கான விளக்கங்கள்,  புதுமையான முறையில் கற்பிக்கும் ஆசிரியர்களின் நேர்காணல்,  அரசுப் பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்புகள்,  பள்ளிகளுக்கான முக்கிய சுற்றறிக்கைகள்,  கல்வியாளர்களின் கலந்துரையாடல் என பல அம்சங்கள் இடம்பெறும்.
இதன் மூலம் கல்வித்துறை சார்ந்த அனைத்து செயல்பாடுகளையும் மாணவர்கள்,  ஆசிரியர்கள், பொதுமக்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும்.  பொங்கல் திருநாளில் கல்வித்தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்றார்

நாடு முழுவதும் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது...ஏடிஎம் சேவை முடங்கும் அபாயம்...!

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதிலும் உள்ள வங்கி ஊழியர்கள் வரும் 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக, அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள வங்கி ஊழியர்கள் தங்களது ஊதியத்தை உயர்த்தவும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஐந்து நாட்கள், அதாவது டிசம்பர் 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 26ஆம் தேதி இது தொடருமா என்பது பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
வேலை நிறுத்தம் காரணமாக, ஏடிஎம் சேவை முடங்கும் அபாயமும் உள்ளதால், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பணத்தை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

FLASH NEWS : G.O Ms 770 - தற்காலிக கணினி ஆசிரியர்கள் நியமனம் செய்ய அரசாணை வெளியிடு..




EMIS SCHOOL PROFILE FORMAT FOR GOVT/AIDED PRIMARY/ MIDDLE SCHOOLS ONLY

பிளஸ் 2 தேர்வில் பாடங்களை குறைத்து செயல்படுத்துவது பற்றி அரசு பரிசீலனை : அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு : வரும் நிதியாண்டு முதல் பிளஸ் 2 தேர்வில் பாடங்களை குறைத்து செயல்படுத்துவது பற்றி அரசு பரிசீலனை செய்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மாணவர்களுக்கு கூடுதல் சுமை, நாட்கள் போதவில்லை என கோரிக்கைகள் வந்துள்ளதால் அரசு பரிசீலனை செய்து வருகிறது என்று அவர் தகவல் அளித்துள்ளார்.

மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் - CEO PROCEEDINGS

உயர் நீதிமன்றம் மதுரை கிளை யில்4-12-2018 மற்றும் 10-12-2018 வழக்கு நடந்த நிகழ்வுகள் பற்றி ஜாக்டோ ஜியோ விளக்கக் கூட்டம்*

காலை 10  மணி முதல் மதியம் 1 மணிவரை*
*இடம்:- பெரியார் மன்றம் தருமபுரி*
*அன்பிற்கினிய தோழர்களுக்கு வணக்கம்*
*தருமபுரி மாவட்ட ஜாக்டோ ஜியோ சார்பில் Cpsஐ இரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த கோருதல் உள்ளிட்டு 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி  4-12-18 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் 12 இலட்சம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்புடன் மிகவும் சக்தியாகவும் எழுச்சியாகவும் நடத்த திட்டமிடபட்டிருந்தது.*



*நாம் நடத்த இருந்த ஜாக்டோ-ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடர்பாக  மீண்டும்  பொது நல வழக்கு மதுரை  உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு  வழக்கு நடைபெற்று வருகிறது இது சம்மந்தமான நிகழ்வுகளை அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில்  விளக்கக் கூட்டதத்தினை மாநிலம் முழுக்க மாவட்டட தலைநகரில் 16-12-18 அன்று   நடத்துவது என ஜாக்டோ ஜியோ  முடிவு செய்துள்ளது.*

 *ஜாக்டோ ஜியோ மாநில முடிவின்படி தருமபுரி மாவட்டத்தில் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான  ஜாக்டோ ஜியோ விளக்க கூட்டம் 16-12-18 அன்று காலை 10  மணியளவில் தருமபுரி  பெரியார் மன்றத்தில் எழுச்சியாக நடைபெறவுள்ளது*

 *இந்த மாவட்ட அளவிலான விளக்கக் கூட்டத்தில்  ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர். மு.அன்பரசு (மாநில பொதுச்செயலாளர்,தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்) அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளார்.*


*தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர் சங்கங்களின் மாநில மாவட்ட வட்டார நிர்வாகிகள் மற்றும் அனைத்து நிலையிலான ஆசிரியர்கள்  ,தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் இணைப்பிலுள்ள அனைத்து துறை சங்கங்களின் மாநில மாவட்ட,வட்ட கிளை நிர்வாகிகள் உள்ளிட்டு அனைத்து அரசு ஊழியர்கள்,தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தின் மாநில மாவட்ட வட்டார நிர்வாகிகள் மற்றும் அனைத்து  பணியாளர்கள் அனைவரும் 100%  தருமபுரியில் நடைபெறும் ஜாக்டோ ஜியோ விளக்க கூட்டத்தில் பங்கேற்குமாறு  கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.*

*ஒன்றுபடுவோம் போராடுவோம் வெற்றிபெறுவோம் இறுதி வெற்றி நமதே*



*நம்மால் முடியாதது வேறுயாராலும் முடியாது*


*வேறுயாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்*




இவண்
 B.M.கௌரன்
 *மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
*ஜாக்டோ ஜியோ*
*தருமபுரி*

15/12/18

ஆசிரியர்களுக்கு ஆதார் அடிப்படையிலான பயோ மெட்ரிக் வருகைப் பதிவு சாத்தியமா?



தற்போது சிம் கார்டு வாங்க ஆதார் நகல் அல்லது வேறு எந்த புகைப்படத்துடன் கூடிய ஆவணத்தின் நகல்,  அதை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி சரி பார்க்கும் வேலை தேவையில்லை. 

ஆதார் எண்ணைச் சொன்னாலே போதும். செல்போன் நிறுவனங்களின் அலுவலகப் பணியாளர்கள் தங்கள் கையில் உள்ள கைபேசியில், அந்த செல்போன் நிறுவனத்தின் செயலியை Open செய்து, கையடக்க விரல் ரேகை Scanner ஐ பொருத்தி, நமது ஆதார் எண்ணை உள்ளீடு செய்து, மிகச் சிறிய விரல் ரேகை Scanner ல், நமது விரலை வைக்கச் சொல்கிறார்கள்.

 அடுத்த நொடியே நம் புகைப்படத்துடன் கூடிய நம்மைப் பற்றிய அனைத்து தகவல்களும், சம்மந்தப் பட்ட செல்போன் நிறுவனத்தின் கைபேசியில் வருகிறது.

இதன் பின், சிம் கார்டு எண், அந்த சிம் கார்டுக்கான பத்து இலக்க மொபைல் எண்ணை பதிவு செய்து, செல்போன் நிறுவனத்தின் Terms and Conditions ல் டிக் செய்து, இதற்கு ஒப்புக் கொள்கிறேன் என்ற விதத்தில் மீண்டும் மிகச் சிறிய விரல் ரேகை ஸ்கேனரில் விரலை வைக்கச் சொல்கிறார்கள்.

நாம் அந்த செல்போன் நிறுவனத்தின் கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொண்டு விட்டோம், என்பதை உணர்த்த அந்த நிறுவனத்தின் செயலி உள்ள கைபேசியில் பச்சைக் கலரில் டிக் வந்து விடுகிறது. 

அந்த நொடியே, புதிய சிம் கார்டு செயலாக்கம் செய்தாகி விட்டது. உடனே நீங்கள் பயன்படுத்தலாம் என்று கூறுகிறார்கள். அதுபோலவே உடனே சிம் கார்டு செயல்படுகிறது.

இதற்கு தேவை, தொடு திரை கைபேசி, விரல் ரேகை ஸ்கேன் செய்யும் கருவி, இவை செயல்படும் விதத்தில் வடிவமைக்கப்பட்ட மொபைல் செயலி மற்றும் இணைய தள இணைப்பு. அவ்வளவு தான். 

இப்போது ஆசிரியர்களின் ஆன்லைன் வருகைப் பதிவுக்கு இதை நடைமுறை படுத்த முடியுமா? எனப் பார்ப்போம்.

ஆசிரியர்களின் வருகைப் பதிவுக்கு, தலைமை ஆசிரியரின் கைபேசியில் ஆன்லைன் வருகைப் பதிவுக்கான செயலியை பதிவிறக்கம் செய்து, தலைமை ஆசிரியரிடம் கைவிரல் ரேகையை ஸ்கேன் செய்யும் கருவியை வழங்கி, அதனை தலைமை ஆசிரியரின் கைபேசியில் இணைத்து விட்டால், ஆசிரியர்களுக்கான ஆன்லைன் வருகைப் பதிவு தயார்.

இதற்கு அதிகபட்சம் ரூ,1000 தான் செலவாகும் என கூறப்படுகிறது.

பள்ளிக்கு வந்ததும் தலைமை ஆசிரியரின் கைபேசியில் ஆன்லைன் வருகை பதிவுக்கான செயலியை Open செய்து, நமது ஆதார் எண்ணை பதிவு செய்து, மொபைலுடன் இணைக்கப்பட்ட ஸ்கேனரில் விரல் ரேகை வைத்தால், நாம் பள்ளிக்கு வந்து விட்டோம் என பதிவாகும்.

எந்த நேரம் வருகையை பதிவு செய்தோம், எந்த இடத்திலிருந்து பதிவு செய்தோம் என்பது உள்ளிட்ட விவரங்கள் எமிஸ் இணையதள சர்வரில் பதிவாகி விடும்.

இம்முறை பதிவை, காலை 9.00 மணி, மதியம் 12.40 மணி, மதியம் 1.30 மணி மற்றும் மாலை 4.00 மணி என நான்கு வேளை பதிவு செய்ய வேண்டும் என கல்வித்துறை கட்டளையிட்டால், OP அடிக்கும் ஆசிரியர் களின் நிலை படு திண்டாட்டமாகி விடும்.

இது போன்ற முறை விரைவில் நடைமுறை படுத்த அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே கூறப்படுகிறது.

எது வந்தாலும் சந்திக்க தயாராகவே இருப்போம்!

இனி வெள்ளி தோறும் CEO, DIET, BEO தலைமையில் "Team Visit" - Proceedings :

TN Schools App - ஆன்லைன் வருகைப் பதிவு பற்றிய சில ஆலோசனைகள்:

TN schools செயலியில், ஒவ்வொரு ஆசிரியரும் எந்த வகுப்பிற்கு கற்பிக்கிறார் என்பது பல பள்ளிகளில் ஏற்கனவே பதிவு செய்திருப்பதால், சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியர், அவர் வகுப்பிற்கு மட்டும் ஆன்லைன் வருகையை பதிவேற்றம் செய்ய வேண்டும். கூடுமானவரை, ஒரே கைபேசியிலிருந்து அனைத்து வகுப்புகளுக்கும் ஆன்லைன் வருகை பதிவு செய்வதை தவிர்ப்பது நல்லது.

ஆசிரியர்கள் பெயர், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, கற்பிக்கும் வகுப்பு போன்ற அனைத்து விவரங்களும் EMIS இணைய தளத்தில் பதிவு செய்திருப்பதால், சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியர் அவர் வகுப்பிற்கு மட்டும், அவரின் சொந்த கைபேசி மூலம் மாணவரின் ஆன்லைன் வருகை பதிவு செய்வதால், அன்றைய தினம் அவர் பள்ளிக்கு வருகை தந்துள்ளார் என்பது உறுதி செய்யப்படுகிறது.

அனைத்து வகுப்பாசிரியர்களும் முற்பகல் மற்றும் பிற்பகல் ஆன்லைன் வருகை பதிவு செய்துள்ளனரா?

பச்சை கலர் டிக் அனைத்து வகுப்புகளுக்கும் காண்பிக்கிறதா? என்பதை தலைமை ஆசிரியர் தினமும் இரண்டு வேளைகளிலும் (மு.ப. / பி.ப)  சரி பார்ப்பது நல்லது.

ஆன்லைன் பதிவு நேரம்  முற்பகல் 9.30 மணி மற்றும் பிற்பகல் 1.30 மணி.

 ஏதேனும் ஆசிரியர் சரியாக பதிவிடா விட்டால், தலைமை ஆசிரியரும் பொறுப்பேற்க நேரிடும் என்பதால், தலைமை ஆசிரியர்கள் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.

விரைவில் ஆசிரியர்களுக்கு ஆதார் எண் அடிப்படையிலான பயோ மெட்ரிக் வருகைப் பதிவு நடைமுறை படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.

காலை 9.30 க்கு மேல் மதியம் 11.55 வரை தாமதமாக வரும் மாணவர்களையும் பதிவு செய்ய இயலும். ஆனால் ஆசிரியர் மறதியாக 10 மணிக்கு பதிவு செய்தால், அனைத்து மாணவர்களும் தாமதமாக வந்ததாக கணக்கிடப்படும். மேலும் ஆசிரியர் தாமதமாக வருகை புரிந்தாரா? என்ற சந்தேகமும் எழ வாய்ப்புள்ளதால் மிகச் சரியாக காலை 9.30 மணிக்கு பதிவு செய்வது நல்லது.

ஆனால் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஒரே நேரத்தில் ஆன்லைன் வருகைப் பதிவு செய்வதால் சர்வர் மெதுவாக வேலை செய்கிறது. இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, சர்வரின் திறன் மேம்படுத்தப்பட்டால், இந்த சிக்கலுக்கு தீர்வு காண இயலும்.

பள்ளி பாட திட்டம் குறைக்க மத்திய அரசு திட்டம்

பள்ளி பாடத் திட்டங்களை பாதியாக குறைக்க, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், தேசிய கல்வி கொள்கை, தேசிய அளவிலான பள்ளி, கல்லுாரி பாடத் திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த வகையில், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ. ஆர்.டி., சார்பில், ஒருங்கிணைந்த பள்ளி பாடத் திட்டம் அமலில் உள்ளது.இதன் அடிப்படையில், மாநிலங்கள், தங்கள் பாடத் திட்டங்களை உருவாக்குகின்றன. சி.பி.எஸ்.இ., என்ற, மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகளில், என்.சி.இ.ஆர்.டி., பாட புத்தகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.இவற்றில், மாணவர்களுக்கு அதிக சுமை தரும் பாடங்கள் உள்ளதாக, பல்வேறு தரப்பிலும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, என்.சி.இ. ஆர்.டி.,யின் பாடத் திட்டத்தை பாதியாக குறைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மாணவ - மாணவியர், வெறும் பாட புத்தக படிப்பு மட்டுமின்றி, திறன் வளர்க்கும் முயற்சிகளி லும் ஈடுபடுவதற்காக, இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

100 அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி :

நீலகிரி மாவட்டத்தில், இரண்டு ஆண்டுகளில், 100 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி களில், ஆங்கில வழி கல்வி துவக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார் தாலுகாக்களை உள்ளடக்கி, 200க்கு மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.


நுாற்றாண்டு பழமை வாய்ந்த இந்த பள்ளிகளில், ஆரம்பம் முதல் தமிழ் வழியில் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தன.சில ஆண்டுகளாக, ஆங்கில வழி கல்விக்காக, பெற்றோர் தனியார் பள்ளிகளை நாடியதால், அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தன. சில அரசு பள்ளிகளில், சொற்ப அளவிலான மாணவர்கள் மட்டுமே இருந்ததால், அவற்றை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி துவக்கி, தரமான கல்வி அளிக்கும் வகையில், பள்ளி தலைமையாசிரியர், பி.டி.ஏ., உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் ஒருங்கிணைந்த குழு அமைக்கப்பட்டது.தொடர்ந்து மாணவர்கள் சேர்க்கைக்காக, வீடு, வீடாகச் சென்று ஆங்கில வழி கல்வி துவக்குவது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

உதவி தொடக்க கல்வி அலுவலர் கார்த்திக் கூறியதாவது:

மாவட்டம் முழுவதும், இரண்டு ஆண்டுகளில், 100 பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி துவக்கப்பட்டுள்ளது. தரமான கல்வியின் பிரதிபலிப்பாக, இனி வரும் ஆண்டுகளில், மாணவர்களின் எண்ணிக்கை உயரும் என, எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

BT TEACHERS - Staff Fixcation Details reg Proceedings!

பதவி உயர்வு பெற்றவர்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்கு அளிக்க இயலாது: தேர்ச்சி பெற வரும் மார்ச் 31 வரை கால அவகாசம்

த்துணவு, அங்கன்வாடி பணியாளர்களில் இருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க இயலாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 302 சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு செய்ய கடந்த 2010ம் ஆண்டு சிறப்பு போட்டி எழுத்து தேர்வு நடத்தப்பட்டது.சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் மூலம் பணியாற்றி வந்த 243 சத்துணவு பணியாளர்கள், 59 அங்கன்வாடி பணியாளர்கள உட்பட மொத்தம் 302 பி.எட். பட்டதாரிகளை சிறப்பு தேர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க சிறப்பு போட்டி எழுத்துதேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டிருந்தது. பின்னர் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டிருந்தது.இந்தநிலையில் சிறப்பு தேர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் வழங்கப்பட்டவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் விலக்கு அளிக்க இயலாது என்று பள்ளி கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அனைத்து மாவட்டமுதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அவர் அனுப்பி வைத்துள்ள சுற்றிக்கையில் கூறியிருப்பதாவது: 2011-12ம் ஆண்டில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தி அதில் தெர்வு செய்யப்பட்டு பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் விலக்கு அளிப்பது தொடர்பாக தெளிவுரை கோரப்பட்டது. இதனை தொடர்ந்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களில் 2011-12ல் நடைபெற்ற சிறப்பு தேர்வின் மூலம் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரும் கருத்துரு அரசின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுதொடர்பான அரசின் கடிதத்தில் விலக்கு அளிக்ககோரும் கோரிக்கையை நிராகரித்தும் அவர்களுக்கு தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான கால அவகாசம் வரும் மார்ச் 31ம் தேதி வரை உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தவிவரத்தை சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.  இவ்வாறு இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மாவட்ட வாரியாக, தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் நீண்டநாள் விடுப்பில் உள்ள ஆசிரியர்கள், அடிக்கடி விடுப்பு எடுப்போர் பட்டியல் அனுப்புமாறு, இயக்குனர் கருப்பசாமி, சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு:

தொடக்க கல்வித்துறையில் நீண்டநாள் பள்ளிக்கு வராமல் விடுப்பில் உள்ள ஆசிரியர்களின் பட்டியல் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், 1,200க்கும் மேற்பட்ட அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. சில பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக வகுப்பு எடுப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.வாசித்தல், எழுதுதல், அடிப்படை கணக்குகளுக்கு தீர்வு காணுதல், உள்ளிட்ட திறன்களில், அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பின்தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
சில ஆசிரியர்கள் முறையாக பள்ளிக்கு, வராததே இதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதற்காக, மாவட்ட வாரியாக, தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் நீண்டநாள் விடுப்பில் உள்ள ஆசிரியர்கள், அடிக்கடி விடுப்பு எடுப்போர் பட்டியல் அனுப்புமாறு, இயக்குனர் கருப்பசாமி, சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன், ''நீண்டநாள் விடுப்பில், மூன்று ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பெயர் பட்டியலை, இயக்குனரகத்துக்கு அனுப்ப முடிவெடுத்துள்ளோம்,'' என்றார்