யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/11/15

'மழை சேதத்தை கணக்கிடுங்கள்':அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு

சென்னை:மழை சேதங்களை கணக்கிடும்படி, அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கனமழை காரணமாக, பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் சேதமடைந்துள்ளன. சாலைகள், பாலங்கள், அரசு கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. கால்நடைகள் உயிரிழந்துள்ளன. பலர் வீடுகளை இழந்துள்ளனர்.

எனவே, அனைத்து மாவட்டங்களிலும், மழையால் ஏற்பட்டுள்ள சேதத்தை கணக்கிட்டு, உடனுக்குடன் தெரிவிக்கும்படி, அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மழை சேதத்தை கணக்கிட, தாலுகா வாரியாக, அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மண்டல வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக