யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/12/15

12 நாட்களுக்கு பின் 13 பக்க ஆங்கில அறிக்கை

சென்னை:செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, அதிக அளவு தண்ணீர் திறந்தது தொடர்பாக,
12 நாட்களுக்கு பின், 13 பக்க ஆங்கில அறிக்கை மூலம், தமிழக அரசின் தலைமைச் செயலர் ஞானதேசிகன் விளக்கம் அளித்துள்ளார்.


தமிழகத்தில், நவ., மாத இறுதி முதல், இடைவிடாது மழை கொட்டித் தீர்த்தது. டிச., 1ம் தேதியும் விடாது மழை கொட்டியது. ஏரிகள் நிரம்பி, உபரி நீர் திறந்து விடப்பட்டதால், சென்னை வெள்ளக்காடாக மாறியது. அடுக்குமாடிகளில், முதல் தளம் வரை தண்ணீர் சென்றது; உயிர் இழப்புகளும் ஏற்பட்டன.

'பெரும் பாதிப்பு ஏற்பட்டதற்கு, சரியான திட்டமிடல் இன்றி, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, டிச., 1ம் தேதி நள்ளிரவு, வினாடிக்கு, 30 ஆயிரம் கன அடி நீர், திடீரென திறந்து விடப்பட்டதே காரணம்; அரசு முன்னெச்சரிக்கையாக இருந்திருந்தால், பெரும் வெள்ளப் பாதிப்பை தடுத்திருக்கலாம்' என, நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். பல்வேறு தரப்பிலும் தமிழக அரசுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், 12 நாட்களுக்கு பின், நேற்று இரவு, 7:00 மணிக்கு, தமிழக அரசின் தலைமைச் செயலர் ஞானதேசிகன், 13 பக்கம் கொண்ட, விளக்க அறிக்கை ஒன்றை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக