யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

13/12/15

அரையாண்டு விடுமுறை உண்டா? ஆசிரியர்களிடையே குழப்பம்.

அரையாண்டு விடுமுறை விடப்படுமா என்ற கேள்விகளுக்கு, பதில் கிடைக்காமல், ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.சமீபத்திய மழையால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில், ஒரு மாதமாக, பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு, அரையாண்டு தேர்வை, தமிழக அரசு ரத்து செய்தது.


மழையால் பாதிக்கப்படாத பல்வேறு மாவட்டங்களில், அரையாண்டு தேர்வுக்கு பதில், முன்மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தேர்வு முடிந்தவுடன், பள்ளி இயங்கும் அல்லது விடுமுறை விடப்படும் என்ற அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இதனால், விடுமுறை விடுவது குறித்து,ஆசிரியர்களிடையே குழப்பம் நீடிக்கிறது.

ஆசிரியர்கள் கூறியதாவது: 

அரசு, அரையாண்டு தேர்வை ரத்து செய்து, அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்வுக்கு பின் அறிவிக்கப்பட்டுள்ள விடுமுறையை ரத்து செய்வது குறித்து, எந்த அறிவிப்பும் இல்லை. இதனால்,அரையாண்டு விடுமுறையை அனுமதித்தால், தமிழக அரசை எதிர்ப்பதாக கருதப்படுமோ என்ற அச்சம்,கல்வித்துறை அலுவலர்களிடம் உள்ளது. அத்துறை அலுவலர்களுக்கும் தெளிவு இல்லாததால், பதில் கூற தயங்குகின்றனர். இதனால், குழப்பம் நீடிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக