யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

13/12/15

தமிழகம் முழுவதும் தேர்தல் அலுவலர்கள் நியமனம்: வாக்கு எண்ணும் மையங்கள் ஆய்வு

வரும் சட்டப்பேரவை தேர்தலில் சேலம் தெற்கு தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை தியாகராஜர் தொழில்நுட்ப கல்லூரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மையத்தை மாநகராட்சி ஆணையாளர் செல்வராஜ் நேற்று ஆய்வு செய்தார்தமிழக சட்டப்பேரவை தேர்தலுக் காக தமிழகம் முழுவதும் தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள் ளனர். 


வாக்கு எண்ணும் மையங் களில் ஆய்வு செய்து உள்கட்ட மைப்பு வசதிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவை தேர்தலை துல்லியமாக நடத்திடும் வகையில், தமிழகத்தின் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத் தும் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.இதன்படி ஒவ்வொரு மாவட் டத்திலும் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, துணை ஆட்சியர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட் டுள்ளனர். மேலும், வட்டாட்சியர் கள் உதவி தேர்தல் நடத்தும் அலு வலராகநியமிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்த பட்டியல்கள் ஒவ் வொரு மாவட்டத்தில் இருந்தும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வாக்கு எண்ணிக்கை மையங்களை தேர்வு செய்யும் பணியும் நடைபெற்றது.தற்போது வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஆய்வு செய்து அங்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வாக்கு எண்ணிக்கையின்போது தேர்தல் பார்வையாளர்கள்,வேட் பாளர்கள் மற்றும் முகவர்கள் அமர்வதற்கான இடவசதிகள், தொலைத் தொடர்பு வசதிகள் மற்றும் மீடியா மையம் அமைப்பது குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது.மேலும், வாக்குசாவடிகளில் சர்வேயர்களைக் கொண்டு, ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தி, வாக்குச் சாவடிகளை கூகுள் வரைபடத்தில் இடம்பெறச் செய்யும் பணியும் முடிக்கப்பட் டுள்ளன.

மேலும், வாக்குச்சாவடிகளில் இருந்தவாறே பணிகளை மேற் கொள்ளும் வகையில்,வாக்குச் சாவடி அதிகாரிகளுக்காக, செல் போனில் பயன்படுத்தும் பிஎல்ஓ நெட் என்ற செயலியும் (ஆப்ஸ்) உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டி லேயே முதன்முறையாக, தமிழக சட்டப்பேரவை தேர்தலில், பிஎல்ஏ நெட் செயலி பயன்படுத்தப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.இதுதவிர, ஒவ்வொரு மாவட்டத் திலும் உள்ளூர் விடுமுறை அறி விக்கப்படும்கோயில் பண்டிகை கள் குறித்த விவரமும் தயாரிக் கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.பள்ளி பொதுத்தேர்வுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேர் தல் தேதியைஅறிவிக்க தீர் மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தலுக் கான அடிப்படை பணிகளை டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளன.தொடர்ந்து, ஜனவரியில் தேர்தல் அதிகாரிகள், உதவி தேர்தல் அதிகாரிகள், வாக்குச்சாவடி அதிகாரிகள் ஆகியோருக்கு பயிற்சி அளிக்கும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகளை ஒருங்கிணைக் கும் வகையில் மாவட்ட தேர்தல் அதிகாரிகளான மாவட்ட ஆட்சி யர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரி களான துணை ஆட்சியர்கள் ஆகி யோர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தி னார். இனி வாரந்தோறும் வெள்ளிக் கிழமைகளில் இதுபோன்று தேர் தல் ஆய்வுப் பணி தொடர்ந்து நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக