யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/12/15

நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள வருவாய்த்துறை ஊழியர்கள் தவிப்பு: அரசு அலட்சியம் என குற்றச்சாட்டு

திண்டுக்கல்:வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஊரக வளர்ச்சித் துறையினரைப் போல, வருவாய்த்துறையினரும் அடிப்படை வசதியின்றி அல்லல்படுவதாக மனம் குமுறுகின்றனர்.தமிழகத்தில் 21 மாவட்டங்களில் தலா 200 பேர் என 4 ஆயிரத்து 200 வருவாய்த்துறை ஊழியர்கள் பேரிடர் மீட்பு கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த டிச. 6 மாலை 6 மணிக்கு அரசு பிறப்பித்த உத்தரவில், 'நான்கு நாட்களுக்கு தேவையான உடைகளுடன் வர வேண்டும்' என அரசு உத்தரவிட்டது. அதன்படி வருவாய்த்துறை ஊழியர்கள் சென்னை, கடலுார், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மீட்புப் பணிகளுக்கு சென்றனர்.

டிச.,7 முதல் டிச. 15 வரை எட்டு நாட்கள் முடிவுற்ற நிலையில், உடுத்துவதற்கு மாற்று உடை இல்லை. இயற்கை உபாதைகளை கழிக்க போதியளவில் கழிப்பறைகள் இல்லை. இதுதொடர்பாக அரசு துரித நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனவும் தமிழ்நாடு வருவாய்த்துறை 
அலுவலர்கள் சங்கம், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம், நில அளவை ஊழியர்கள் கூட்டமைப்பினர் அரசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.அதில், 'தற்போது பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை திரும்பப் பெற்று, மற்றொரு குழுவினரை மீட்புப்பணிகளுக்கு அனுப்ப வேண்டும், என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாநிலச் செயலாளர் மங்களபாண்டியன் கூறியதாவது: சென்னையில் பணி முடிந்த ஊழியர்களை திரும்ப ஊர்களுக்கு அனுப்பிவிட்டு, புதிய குழுவினரை மீட்பு பணிகளில் களமிறக்கலாம். அதை விடுத்து 4 நாட்களாக மாற்று உடைகூட இல்லாமல் தவிக்கும் ஊழியர்களை வேறு இடத்தில் பணிசெய்ய வலியுறுத்துகிறார்கள். அதனால்தான் அரசிடம் முறையிட்டுள்ளோம், என்றார்.


ஒரு தோசை ரூ.80

வருவாய்த்துறை மாவட்டச் செயலாளர் சுகந்தி கூறியதாவது: அரசு மீட்புப்பணியில் ஈடுபட்டவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.250 வழங்குகிறது. ஆனால் 
சென்னையில் ஒரு தோசை ரூ.80க்கும், ஒரு இட்லி ரூ.20க்கும் விற்கிறது. இந்த சூழ்நிலையில் எவ்வாறு மீட்புப்பணியை கவனிப்பது. அரசு விரைவில் மாற்று குழுவை மீட்புப்பணியில் அனுமதிக்க வேண்டும், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக