யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/12/15

தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: 'காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த நான்கு நாட்களுக்கு, லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:குமரி கடல் மற்றும் இலங்கை அருகே கடல் மட்டத்தில் இருந்து, 1.5 கி.மீ., உயரத்தில், காற்று மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு உள்ளதால் இன்று முதல், 18ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஒருசில இடங்களில் மழை அல்லது 

இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது; கனமழைக்கு வாய்ப்பு இல்லை.சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். வெயில் அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ்; குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் என, இருக்கும்.
நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக, கோவை மாட்டம் வால்பாறை - 3; ஈரோடு மாவட்டம், தாளவாடி, நீலகிரி மாவட்டம் தேவலா - 1 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக