யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

24/1/16

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1மெயின் தேர்வு முடிவு தாமதம்

தமிழகத்தில் குரூப்-1 மெயின் தேர்வு முடிந்து ஆறுமாதமாகியும், முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாததால் எழுதியவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் -1 முதல் நிலை தேர்வு கடந்த ஓராண்டுக்கு முன்பு நடந்தது. டி.எஸ்.பி., டி.இ.ஓ., சப்கலெக்டர், வணிகவரித்துறை ஆணையர், நகராட்சி கமிஷனர் உட்பட பல பதவிகளுக்கு 79 காலியிடங்களுக்கான தேர்வாக நடந்தது.

இந்த தேர்வை 2 லட்சம் பேர் எழுதினர். இதில் 4 ஆயிரம் பேர் மெயின் தேர்வுக்கு தேர்வாகினர். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜூனில் நடந்தது. தேர்வு முடிந்து 6 மாதமாகியும் இன்னும் முடிவுகள் வெளியாகவில்லை. தேர்தல் வரும் நேரத்தில் தேர்வு முடிவுகள் கிடப்பில் போடப்படுமோ என்ற அச்சம் எழுதியவர்கள் மனதில் தொற்றிக் கொண்டுள்ளது.

நத்தத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் கூறியதாவது: 

குரூப்-1 தேர்வை கனவுகளோடு எழுதினோம். ஒரு மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றனர். ஆனால் ஆறுமாதமாகியும் வரவில்லை. தேர்தல் வருவதால் முடிவுகள் நிறுத்தப்படுமோ என்ற அச்சம் உள்ளது. விரைவில் வெளியிட்டால் நல்லது, என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக