யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

20/8/16

ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் 21,609 பேர் விண்ணப்பிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நேற்று துவங்கிய நிலையில், 650 பணியிடங்களுக்கு, 21 ஆயிரத்து, 609 இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டரங்கில், சென்னை ராணுவ ஆள்சேர்ப்பு இயக்குனரகம் மூலம், வரும், 31ம் தேதி வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடக்கிறது. பொதுப்பணி, டெக்னிக்கல், நர்சிங் அசிஸ்டென்ட், டிரேட்ஸ் மேன், ஆகிய பணிகளுக்கு ஆட்கள் தேர்வு
செய்யப்படுகின்றனர். இதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த, 21 ஆயிரத்து, 609 இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர். விண்ணப்பித்த இளைஞர்கள், எந்த நாளில் முகாமில் பங்கேற்க வேண்டும் என்ற விபரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று துவங்கிய முகாமை, பார்வையிட்டனர். அப்போது, ராணுவ பிரிகேடியர் தால்வி, நிருபர்களிடம் கூறியதாவது: ராணுவத்தின் பல்வேறு பணியிடங்களுக்காக, 21 ஆயிரத்து, 609 இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில், 650 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். முதலில், உடற்தகுதி தேர்வு நடத்தப்பட்டு, இதில் தேர்வு பெறுவோருக்கு மருத்துவத் தேர்வு, எழுத்துத் தேர்வு இறுதியாக நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக