யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

30/8/16

தமிழக அமைச்சரவையில் மாற்றம்: பள்ளிக் கல்வி அமைச்சராகிறார் மாஃபா பாண்டியராஜன்

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது; பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக மாஃபாகே.பாண்டியராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை(ஆக. 30) நடைபெறும்
நிகழ்ச்சியில் அமைச்சராக மாஃபா பாண்டியராஜன் பொறுப்பேற்றுக்கொள்கிறார்.

மேலும்அமைச்சர் சண்முகநாதனிடம் இருந்த பால்வளத் துறைஅமைச்சர் பொறுப்பு கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் அளிக்கப்பட்டுள்ளது.
முதல்வர்ஜெயலலிதாவின் பரிந்துரையை ஏற்று, இந்த மாற்றங்கள்செய்யப்படுவதாக ஆளுநர் கே.ரோசய்யாதெரிவித்துள்ளார். இது குறித்து ஆளுநர்மாளிகை திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
பால் வளம்-பால் பண்ணைகள்மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்தஎஸ்.பி.சண்முகநாதன், அமைச்சரவையில்இருந்து விடுவிக்கப்படுகிறார். ஆவடி சட்டப் பேரவைத்தொகுதி உறுப்பினராக உள்ள கே.பாண்டியராஜன், பள்ளிக் கல்வி-விளையாட்டு-இளைஞர்நலத் துறை அமைச்சராக நியமிக்கப்படுகிறார்.
இலாகாக்கள்மாற்றம்:
அமைச்சரவையில்இரண்டு அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. ஊரக தொழில்கள் துறைஅமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு, பால் வளம்-பால்பண்ணைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும், பள்ளிக்கல்வி-விளையாட்டு-இளைஞர் நலத் துறைஅமைச்சராக இருந்த பி.பென்ஜமினுக்குஊரகத் தொழில்கள் துறை பொறுப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
பதவியேற்புவிழா:
புதிய அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள கே.பாண்டியராஜன், ஆளுநர்மாளிகையில் செவ்வாய்க்கிழமை (ஆக. 30) மாலை 4.35 மணிக்குநடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொள்கிறார். அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசியகாப்பு உறுதிமொழியையும் ஆளுநர் கே.ரோசய்யாசெய்து வைக்கிறார்.
பொறியியல்பட்டதாரி:
புதிய அமைச்சராக பொறுப்பேற்க உள்ள கே.பாண்டியராஜனின்சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம்விளாம்பட்டி ஆகும். 1959- ஆம் ஆண்டு ஏப்ரல்26- இல் பிறந்தார். பொறியியல் பட்டதாரியான அவர், எம்.பி.ஏ., பட்டமும் பெற்றுள்ளார். மனிதவள மேம்பாட்டு நிபுணராக இருக்கும் அவர், கடந்த 2011- 16 ஆம்ஆண்டில் தேமுதிக சார்பில் விருதுநகர்சட்டப் பேரவைத் தொகுதியில் இருந்துதேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன் பின், அதிமுகவில் இணைந்தஅவர் கடந்த சட்டப் பேரவைத்தேர்தலில் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்டப் பேரவைத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
முதல் முறையாக மாற்றம்:

இரண்டாவதுமுறையாக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்த நிலையில், இப்போது முதல் முறையாக அமைச்சரவையில்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக, அமைச்சரவைவிரிவாக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக