யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

30/8/16

பணி நிரவல் செய்யப்பட்ட ஆசிரியை - தொடக்க கல்வி அலுவலகத்தில் தற்கொலை முயற்சி

சேலம் மாவட்ட தொடக்க கல்விஅலுவலகத்தில், ஆசிரியை, துாக்க மாத்திரை சாப்பிட்டு, மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் டவுனை சேர்ந்தவர்தனலட்சுமி, 42; சேலம், தேர்வீதி அரசுநடுநிலைப்
பள்ளியில், இடைநிலை ஆசிரியையாக பணிபுரிந்தார்.

ஆக., 13ம் தேதி, பள்ளிகளில் மாணவர்எண்ணிக்கை அடிப்படையில், உபரி ஆசிரியர் பணியிடங்கள்கணக்கெடுக்கப்பட்டு, பணி நிரவல் நடந்தது. இதில், காடையாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள பள்ளிக்கு, தனலட்சுமிபணி மாறுதல் செய்யப்பட்டார். அங்குசெல்ல விருப்பம் இல்லாததால், தன் பணி மாறுதல்உத்தரவை ரத்து செய்ய கோரிவந்தார்.

இந்த நிலையில், நேற்று, சேலம் மாவட்டதொடக்கக் கல்வி அலுவலகத்துக்கு வந்து, தன் உத்தரவை ரத்து செய்யவலியுறுத்தினார். அதற்கு வாய்ப்பு இல்லைஎன, அதிகாரிகள் கூறிய நிலையில், அங்கேயே, தர்ணா நடத்த முயன்றார். போலீசார்சமாதானப்படுத்தி, அவரை அனுப்பி வைத்தனர். பின், கழிப்பறை சென்று வந்த அவர், மாடிப்படி அருகில், திடீரென மயங்கி விழுந்தார். அவரை, சேலம் அரசு மருத்துவமனையில்சேர்த்தனர். அதில், பணி மாறுதலைரத்து செய்யாததால், துாக்க மாத்திரைகள் சாப்பிட்டதாக, தனலட்சுமி தெரிவித்தார். இது குறித்து, போலீசார்விசாரிக்கின்றனர்.


மாவட்டதொடக்கக்கல்வி அலுவலர் தங்கராஜ் கூறுகையில், ''பணி நிரவல் பட்டியல், ஏற்கனவேஅனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைத்தோம். அதில்குறைபாடு இருப்பின் தெரிவிக்கலாம் என, சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. 100 சதவீதம், முறையாக பணி நிரவல்நடந்த நிலையில், தற்போது, அதை ரத்து செய்வதுசாத்தியமில்லை,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக