யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

27/8/16

அரசுப் பள்ளிக்கு ஆசிரியர்கள் நியமனம்: மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

தகொளத்தூர் அருகே அரசுப் பள்ளிக்கு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டதால், மாணவர்களின் போராட்டம் புதன்கிழமை முடிவுக்கு வந்தது.சேலம் மாவட்டம், கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், கத்திரிப்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் இரண்டு ஆண்டுகளாக ஆசிரியர்கள் இல்லை என்று கூறப்பட்டது.
இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. இதுகுறித்து பெற்றோர்கள், கல்வித் துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் இல்லாத பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்பாமல் திங்கள்கிழமை முதல் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் புதன்கிழமை இரண்டு ஆசிரியர்களை நியமிக்க மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ஒப்புதல் அளித்தார். மேலும் கூடுதலாக ஒரு ஆசிரியரை கிராம மக்களே நியமித்து கொள்ளத் திட்டமிட்டுள்ளனர். இதனால் கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு மாணவ, மாணவியரை பள்ளிக்கு அனுப்பிவைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக