யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

23/9/16

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அமல் ஆசிரியர் கூட்டமைப்பு முதல்வருக்கு நன்றி

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, புதிய சம்பளம் வழங்கப்படும் என அறிவித்த முதல்வருக்கு, புதுச்சேரி யூனியன் பிரதேச பள்ளி ஆசிரியர்கள்கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.கூட்டமைப்பு தலைவர் துளசி வெளியிட்டுள்ள அறிக்கை:மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்தசம்பளம் கடந்த மாதம் அமல்படுத்தப்பட்டது. 
புதுச்சேரியில் நிதி நிலைமை சீரமைத்த பிறகு ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரை அமல்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார்.இந்நிலையில், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை சிறப்பு அறிவிப்பு மூலம், பட்ஜெட் கூட்டம் முடிவதற்குள் சட்டசபையில்அறிவிக்க வேண்டும் என, புதுச்சேரி யூனியன் பிரதேச பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டது. அதனை ஏற்ற முதல்வர் நாராயணசாமி, அனைத்து அரசு ஊழியர்களுக்கும் செப்., மாதத்தில் பதிய சம்பளம் வழங்கப்படும் என அறிவித்தார்.இதற்காக, கூட்டமைப்பு சார்பில், கவர்னர் மற்றும் முதல்வர் நாராயணசாமி, கல்வி அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக