யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

23/9/16

உள்ளூரில் தேர்தல் பொருட்கள் கொள்முதலில் புதிய நடைமுறை

சிவகங்கை: உள்ளூரில் தேர்தல் பொருட்களை கொள்முதல் செய்வதற்கு, சில விதிறைகளை கடைபிடிக்க வேண்டுமென, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனு பெறுவதில் இருந்து, ஓட்டுப்பதிவு முடியும் வரை, 72 வகையான பொருட்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதில் படிவங்கள், உறைகள் போன்றவை மாநில தேர்தல் ஆணையமே அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது. மேலும் ஜெம் கிளிப், குண்டூசி, பிளேடு, சணல் கயிறு, துணி, மை குப்பி வைக்கும் கோப்பை, தள்ளுகோல், தாள், சுவரொட்டி, முத்திரை மை என, 40க்கும் மேற்பட்ட பொருட்களை உள்ளூரில் கொள்முதல் செய்யப்பட உள்ளன. இதில் கடந்த காலங்களில் விலை நிர்ணயத்தில் மாறுபாடுகள் காணப்பட்டன. இதனால் அவற்றை கொள்முதல் செய்வதில் சில நடைமுறைகளை கடைபிடிக்க தேர்தல் நடத்தும் அலுவலர்களை அறிவுறுத்தியுள்ளது. கொள்முதல் செய்யும் பொருட்களின் அதிகபட்ச விலையை கலெக்டர், ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், மாவட்ட கருவூல அலுவலர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) ஆகியோர் அடங்கிய குழுக்களே நிர்ணயிக்க வேண்டும். இந்த தொகைக்கு மிகாமல் தேர்தல் பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும்; இதில் எந்த குழப்பமும் இருக்க கூடாது என, ஆணையம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக