யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

24/9/16

ஓய்வூதியத்தை வழக்காடிப் பெற்றிட இயலுமா?*

📮நாடு முழுவதும்நிலுவையில் உள்ள குடிமையியல் & குற்றவியல்வழக்குகள் *2.7 கோடி*
📮10 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ளவழக்குகள் *20 லட்சம்*
📮5 - 10 ஆண்டுகள் நிலுவை - *35 லட்சம்*

📮2 - 5 ஆண்டுகள் நிலுவை - *59 லட்சம்*
📮2 ஆண்டுகளுக்கும் குறைவாகநிலுவையில் உள்ளவை *82 லட்சம்*
*📮மூத்த குடிமக்கள்சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 5,84,273*
_ம.பி மற்றும் டெல்லிமாநில விவரங்கள் தேசிய தகவல் தொகுப்புக்குமாற்றப்பட்டு வந்ததால் அந்த விவரங்கள் இதில்இடம்பெறவில்லை. இது சென்ற ஆண்டுநிலை மட்டுமே_ (தி இந்து)
*📮ஏப்ரல் (2016) = 2.18 கோடி.* (இந்தியன்எக்ஸ்பிரஸ்)
மேற்கண்டதரவுகளின் படி மட்டுமல்ல, நீங்கள்நாள்தோறும் கேள்விப்படும் அரசு சார் வழக்குகளிலும், தீர்ப்பு அரசின் கொள்கை முடிவில்தலையிட முடியாது என்றோ; நீதிமன்றத் தீர்ப்பைஅரசே புறம் தள்ளுவதாகவோ தான்இருக்கும் (சாலைப்பணியாளர், மக்கள் நலப் பணியாளர்கள், ஆசிரியப் பயிற்றுநர்கள் வழக்கு போன்று). இவைஎல்லாவற்றையும் தாண்டி அத்தி பூத்தாற்போல்சில தீர்ப்புகள் நடைமுறைப் படுத்தப்டுகிறது என்பதும் மறுப்பதற்கில்லை.
ஆனால், இன்றைய சூழலில் *நாம் துய்த்து வரும்பலன்கள், 100% நமது முன்னவர்களின் வலுவானபோராட்டங்களின் பயனே!* நமக்கான முறையானஉரிமை தொடர்பான முன்மொழிவுகள், மீட்புகள் உள்ளிட்ட அனைத்துமே போராட்ட வீச்சின் அடிப்படையில்ஆட்சியாளர்களிடம் இருந்து பெறப்பட்டவையே.
எனவே, *கோடிக்கைகள் ஒன்றிணைந்தால் தான் கோரிக்கைகள் வென்றிடமுடியும்.*
ஆனால், ஓய்வூதியப் போராட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் பங்கெடுப்பு மிகக் குறைவாகவே இருந்துவந்துள்ளது. இந்நிலை மாற,
*உரிமைபறிபோன வழியையும்*
*உடைமைபலியான வலியையும்*
*உற்றவர்உணர்ந்தாக வேண்டும்.*
எப்படியெனில்,
_வாசித்தல், அறிய வைக்கும்!_
_அறிதல், தெளிய வைக்கும்!_
_தெளிதல், உணர வைக்கும்!_
_ உணரல், வினவ வைக்கும்!_
_வினவல், கூட வைக்கும்!_
_கூடல், கோர வைக்கும்!_
_கூடிக்கோரல், அதிர வைக்கும்!_
_அதிர்வுறலே, கொடுக்க வைக்கும்!_
_எனவே, *பறித்திட்ட ஓய்வூதியத்தை*க்_
_கொடுக்கவைக்கும் நோக்கில்,_
_*கானலானஓய்வூதியம்* நூலினை_
_வாசிப்போம்! *வாசிக்க வைப்போம்!!*_

*66 பக்கங்களுக்கானஅச்சுக்கூலி ரூ.25/-*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக