யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

24/10/16

ஆறு ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் கணினி ஆசிரியர்கள் கோரிக்கையை தமிழக முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் கணினி ஆசிரியர்கள் சங்கத்தினர் வேண்டுகோள்

மடிக்கணினிஎல்லாம் கொடுத்து அரசுப்பள்ளி மாணவர்களை ஹைடெக்காகமாற்ற நினைக்கும் அரசு பாராட்டுக்குரியதுதான். ஆனால்,மாணவர்களுக்குக்கணினி கொடுத்த அரசு கணினிவழிக் கல்வியைக் கற்றுக் கொடுக்க ஆசிரியர்களைநியமிக்காமல் இருப்பது
ஏன்? இதனால், கணினிவழிகல்விபோதிக்கும் பல பட்டதாரி ஆசிரியர்களின்வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது என்று வேதனையுடன் கூறுகிறார்கள்கணினி வழிக் கல்வி ஆசிரியர்கள்.தனியார் பள்ளிகளுக்கு நிகராகஅரசுப்பள்ளி மாணவர்களும் உயர வேண்டும் என்றுசமச்சீர் கல்வி முறையை 2011ஆம்ஆண்டு அறிமுகப்படுத்தியது அரசு. அதில்,ஒன்றாம்வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை கணினி அறிவியல் புத்தகங்கள்கொடுக்கப்பட்டிருக்கிறது. 

முதல் இரண்டு வருடம்மட்டும் புத்தகங்கள் கொடுக்கப்பட்டு, அதுவும் நிறுத்தப்பட்டு விட்டது.ஆனால், கடந்த ஆறுவருடங்களாக கணினி அறிவியலில் பி.எட். படித்தஆசிரியர்களை பணிநியமனம்செய்யவில்லை.கடந்த 15 ஆண்டுகளாக கணினி அறிவியல் பட்டதாரிகள்பலர் வேலையில்லாமல் தவிக்கின்றனர். இந்தப் பட்டதாரிகள் ஒருங்கிணைந்து2014-ஆம் ஆண்டு கணினி அறிவியல்வேலையில்லாபட்டதாரிகள் சங்கத்தை ஆரம்பித்திருக்கின்றனர். இச்சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர்குமரேசன் கூறுகையில், 1992-ஆம் ஆண்டுல இருந்தேகம்ப்யூட்டர் சயின்ஸ் பி.எட். இருக்கு. நான் படிச்சது பி.எட். ஆனா, டெக்ஸ்டைல்லவேலை பாத்துட்டு இருக்கேன். 

இதுவரைக்கும் கிட்டத்தட்ட 39,019 கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரிகள் வேலைஇல்லாமஇருக்காங்க.ஒரு படிப்புனு இருந்தாஅதுக்கான வேலை வாய்ப்பு இருக்கணும். வருஷாவருஷம் ஆயிரக்கணக்கான பேர் படிச்சுட்டு வெளியேவராங்க. ஆனா,ஏற்கெனவே படிச்சுவேலைவாய்ப்பு அலுவலகத்தில பதிவு செய்திருக்கிறயாருக்குமே வேலை இல்லை. 

பின்ன ஏன் இந்தப்படிப்ப இன்னும்வச்சிருக்காங்கன்னு புரியல" என்று குமுறுகிறார்.கம்ப்யூட்டர்சயின்ஸ்ல பி.எட். படிச்சநாங்க பலவகையில நசுக்கப்பட்டவங்க. மற்ற ஆசிரியர்பயிற்சி முடித்தவர்கள்  கலந்துகொள்ளும்  டெட், டிஆர்பி எக்ஸாம் போன்றவற்றில் கூடகலந்துகொள்ள எங்களுக்கு அனுமதி கிடையாது" என்றுவிரக்தியுடன் பேசுகிறார்கள் கணிப்பொறி ஆசிரியர்கள்.2006-ஆம் ஆண்டுக்குப் பிறகுதரம்உயர்த்தப்பட்ட அரசுப் பள்ளிகள் எதிலும்கணிப்பொறி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.கடந்த வருடத்தில் கூட407 பள்ளிகள்தரம் உயர்த்தப்பட்டதாக எம்.எல்.ஏபெஞ்சமின் கூறியிருக்கிறார்.ஆனால் அந்தப் பள்ளிகள்எதிலும் கணிப்பொறி வழிக் கல்வி கிடையாது.கம்யூட்டர் சயின்ஸ் டீச்சர் இல்லாமல்தான்பல பள்ளி மாணவர்கள் தானாகவேகற்றுக்கொள்கிறார்கள்.

2011 இல்சமச்சீர் கல்வி கொண்டு வந்தார்கள்அதில் கணினி அறிவியல் பாடத்திட்டம்இருந்தது.ஆனால்,அந்த
புத்தகங்களும்அரசு அலுவலகங்களில் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.மாணவர்களுக்கு கொடுக்கப்படவில்லை.பட்டதாரி ஆசிரியர்களுக்கும் வேலை வழங்கவில்லை.வருடந்தோறும்மத்திய அரசு கோடி கணக்கில்நிதி ஒதுக்கி வருகிறது.வருடத்திற்க்கு250 கோடி ரூபாய் வருகிறது.2011-இல்முதல்கட்டமாக 43கோடி ரூபாய் கொடுத்தார்கள்.ஆனால் எதையும் செயல்படுத்தாமல்வீணாக்குகிறார்கள்"என்று மாநில செயலாளர்குமரேசன் வருத்தத்துடன் பேசுகிறார்.

தமிழ்நாட்டில்27 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டமும் போராட்டமும் நடத்தியிருக்கிறோம்.ஒவ்வொரு மாவட்ட ஆட்சியிர்அலுவலகத்திலும் கருணை மனு கொடுத்திருக்கிறோம்.
47முறைசென்னைக்கு வந்து மனு செய்திருக்கிறோம்.
அரசு அதிகாரிகள் அரசியல் தலைவர்கள் பலரையும்சந்தித்து எங்கள் கோரிக்கையை முன்வைத்திருக்கிறோம்.
எல்லா இடங்களிலும் சொல்லி வைத்தது போல்அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டதுஎன்ற பதில்தான் வருகின்றது.

தனியார்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதலேகணினி வழிக்கல்வி இருக்கிறது.அதை இன்னும் மேம்படுத்தஅரசும் ஊக்குவிக்கிறது.ஆனால் அரசுப் பள்ளிகளில்ப்ளஸ் ஒன்,ப்ளஸ் டூக்குமட்டுமே அதுவும் பாதி பள்ளியில்ஆசிரியர்கள் இல்லாமல் படிக்கிறார்கள்" என்கிறார் சங்கத்தின் மாநில செய்தி தொடர்பாளர்வேல்முருகன்.

****
படித்ததுகணினி அறிவியல் பிடிப்பது கசாப்புக் கத்தி!

"2010இல்பி.எட் முடிச்சேன். அப்ப்கூட வாரத்துல ஒருநாள் மட்டன் கடையில்வேலை பாக்குறேன்.எனக்கு கல்யாணமாகி ஒருகுழந்தை இருக்கு.இப்ப வரைக்கும்எவ்வளவோ போராட்டம் பண்ணிருக்கோம்.எத்தனையே இடத்துல மனு கொடுத்தும்ஒண்ணும் நட்க்கல.நாங்க நாற்தாயிரம்ஆசிரியர்கள் வேலையில்லாமல் இருக்கிறோம் .அங்கு பள்ளிகளில் பிள்ளைகளுக்குஆசிரியர்கள் இல்லை.ஸ்கூலுக்கு ஒருடீச்சருக்கு வேலை கிடைச்சிருந்தாலும் படிச்சவங்கபாதிபேரு வேலைக்குப் போயிருக்கலாம் என்று ஆதங்கப்படுகிறார் தமிழ்நாடுபி.எட் கணினி அறிவியல்வேலையில்லா பட்டதாரிகள் ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத்துணைத்தலைவர் கார்த்திக்.

*ரங்கநாயகி, அந்தியூர்*

பி.எட் முடிச்சிட்டு ஒருபனியன் கம்பெனிக்கு வேலைக்குப் போய்ட்டிருக்கேன் சூப்பர்வைசரா இருந்தாலும் எல்லா வேலையும் பாக்காணும்.படிச்ச படிப்புக்கேத்த வேலையில்லாம,குறைஞ்ச கூலிக்கு கிடைத்தவேலையைச் செஞ்சிட்டிருக்கேன். பொண்ணுப்பாக்க வர்றவங்க பி.எட் கம்ப்யூட்டர்சயின்ஸ்னா வேலை கிடைக்கிறது கஷ்டம்னுசொல்லிட்டு போய்டுறாங்க.

*ஆரிஃபா, ஈரோடு*

எங்க வீட்ல அஞ்சு பொண்ணுங்க.பி.எட் முடிச்சிட்டுஒரு கம்பெனிக்கு வேலைக்குப் போய்ட்டு இருக்கேன்.எங்கப்பாவால வேலை செய்யமுடியாது.நாங்கவேலை செஞ்சுதான் குடும்பத்தக் காப்பாத்தானும்.வேலை கிடைக்காததால கல்யாணம்தள்ளிப்போய்ட்டு இருக்கு.

*லலிதா, கொள்ளிமலை*

அம்மாவோடகூலி வேலைக்குப் போய்டுருக்கேன்.வீட்டில இருக்கிற ஆடுமாடு அப்பா பாத்துக்கிறாங்க.இவ்ளோதூரம் படிச்சிட்டு கூலி வேலைக்குப் போறதுரொம்ப கஷ்டம இருக்கு.பி.எட் படிச்சிருந்த வேலைவாங்கித் தந்துடுவோம்னு சொல்லி பொண்ணு பாக்கவந்தாங்க .கம்ப்யூட்டர் சயின்ஸ்னு தெரிஞ்சதும் அதுக்கு எப்போ கிடைக்கிறதுனுரிஜெக்ட் பண்ணிட்டாங்க....

*கிருத்திகா, கோவை*

எனக்குகுடும்பத்தில பல சிக்கல்.அரசுவேலைதான் என்னை மீட்டெடுக்காணும் என்னுடையரெண்டு பெண் குழந்தைகளோட  எதிர்காலம் பத்தி ரெம்பக் கவலையாஇருக்கு.வாழ்க்கைய நகர்த்துறதுறதே பெரிய போராட்டம இருக்கு...
****
*சாய்  ஜானு, கரூர்*

நான் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகவேலை செய்கிறேன்.
என்க்குசில கேள்விகள் இருக்கு.

--->
வேலைகேட்டுபோராடும்போது அரசுக் கொள்கை முடிவுக்குஉட்பட்டதுன்னு சொல்றாங்க.அப்படினா அரசு கொள்கை பி.எட் முடிச்சவங்களுக்கு வேலைதரக்கூடாது என்பதா?

--->
அரசு வேலைக்கு எடுக்க முடியாத நிலையில்ஏன் இந்தப் படிப்ப நீக்காமவைச்சிருக்கங்கா?

--->
சபீதா மேடம் மத்திய அரசுகம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திட்டுத்துக்காக கொடுத்த பணத்தைஏன் திருப்பிக் கொடுத்தார்கள்?

இதுக்கெல்லாம்என்ன பதில் வைத்திருக்கிறது அரசு?
என கேள்விகளை அடுக்குகிறார் சாய்ஜானு.

சுமார்40,000 வேலையில்லா பட்டதாரிகள் 27,000 பேர் பெண்கள் .இவர்களின்வாழ்க்கைக் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.தாயுள்ளம் கொண்ட தமிழக இவர்களின்மீது கருணை கண் காட்டுமா??

திரு வெ.குமரேசன்,
9626545446,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடுபி.எட் கணினி அறிவியல்வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் 655/2014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக