யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

24/10/16

மேதகு வேண்டாம்; மாண்புமிகு போதும்'

சென்னை:'மேதகு என்பதற்கு பதிலாக, மாண்புமிகு என்ற வார்த்தையை பயன்படுத்தினாலே போதும்' என, தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில், மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களை, அவர்களது பெயருக்கு முன், மாண்புமிகு எனக்கூறி கவுரவப்படுத்துவர். அதே நேரத்தில், கவர்னரை அழைக்கும் போது, 'மேதகு ஆளுனர்' என, கவுரவமாக அழைப்பர்.

இந்நிலையில், தமிழக கவர்னரின் முதன்மை செயலர் ரமேஷ் சந்த் மீனா, நேற்று வெளியிட்ட அறிவிப்பு:அரசு விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில், தமிழக கவர்னரை இதுவரை, 'மேதகு ஆளுனர்' என, குறிப்பிட்டு அழைத்து வந்தனர். இனி, 'மாண்புமிகு ஆளுனர்' என அழைத்தால் போதும் என்று, கவர்னர் வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார். அதே நேரம், கவர்னரை, வெளிநாட்டு பிரதிநிதிகள் சந்திக்கும் போது, மேதகு ஆளுனர் என்றழைப்பது கடைபிடிக்கப்படும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக