யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

9/11/16

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத ஆதார் எண் கட்டாயம் : தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவு

தமிழகத்தில்10, 12ம் வகுப்பு மாணவர்கள் ஆதார்எண் இருந்தால்தான் பொதுத்தேர்வை எழுத முடியும் என்றுஅரசு தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 2016-2017 பொதுத்தேர்வு வருகிற மார்ச்
மாதம்நடக்க உள்ளது. இந்த பொதுத்தேர்வில்பல்வேறு புதிய மாற்றங்கள் கொண்டுவருவதாக தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் அரசு தேர்வுத்துறை இயக்ககம்கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பிஉள்ளது.
அதில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களைஅரசு தேர்வுத்துறை இயக்ககம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும்போது, மாணவர்களின் ஆதார் எண்ணையும் கட்டாயமாகபதிவு செய்ய வேண்டும். இதைவைத்துதான் இந்த ஆண்டு பொதுத்தேர்வில்பல்வேறு புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படும். ஆதார் எண் இருந்தால் மட்டுமேபொதுத்தேர்வை மாணவர்கள் எழுத முடியும். எனவேஇந்த மாதத்திற்குள் மாணவர்களிடம் ஆதார் எண்ணை வாங்கவேண்டும்என கூறப்பட்டுள்ளது.


இதனால்தனியார் மற்றும் அரசு, அரசுநிதியுதவி பள்ளிகளில் பொதுத்தேர்வு மாணவர்கள் எத்தனை பேர்? இன்னும்எத்தனை பேர் ஆதார் எண்எடுக்கவில்லை என்று கணக்கெடுத்து, அந்தபள்ளிகளுக்கு ஆதார் எடுக்கும் சிறப்புமுகாம் அமைத்து, ஆதார் அட்டை வழங்ககல்வி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த பணியை இந்தமாதத்திற்குள் முடிக்கவும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக