யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

9/11/16

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பது முதல் முறை அல்ல...!

ஃபேஸ்புக், ட்விட்டர் என சமுகவலைதளங்களின் ஆதிக்கம்ஊடுருவியுள்ள இந்த டிஜிட்டல் காலத்திலும்1000,  500 ரூபாய்நோட்டுகள் செல்லாது என்பதை  பிரதமர்மோடியின் அரசு ரகசியமாக வைத்திருந்துஇன்று அறிவித்துள்ளது. 2017-ம் ஆண்டு புத்தாண்டுதொடக்கத்தில்
மக்களிடம் பழைய, ரூ 500, ரூ1,000 நோட்டுகள் புழக்கத்தில் இருக்காது.
திடீரெனஇப்படி ரூபாய் நோட்டுகள் செல்லாதுஎன மத்திய அரசு அறிவிப்பதுதற்போதைய தலைமுறைக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால், இதற்கு முன்புஇதே போல இரண்டு அதிர்ச்சிசம்பங்களை இந்தியா சந்தித்துள்ளது.

''ஊழல்மற்றும் கறுப்பு பணம், வறுமை, பயங்கரவாதம் ஆகியவை நம்  நாட்டை பின்நோக்கி இழப்பதைநான் உணர்ந்தேன்" .1000,500 ரூபாய் நோட்டுகள் செல்லாதுஎன பிரதமர் மோடி அறிவித்தபோது, கூறிய உணர்வுப்பூர்வமான வார்த்தைகள்இவை.  மோடியின்இந்த  முயற்சியால், கருப்புப்பண முதலைகள் ஆட்டம் கண்டுள்ளன. ரூபாய்நோட்டுகள் செல்லாது என அரசு திடீரெனஅறிவிப்பது புதிதல்ல. இதற்கு முன் இந்தியாவில்ஆட்சி செய்த பிரிட்டிஷ் அரசும், அதற்குப் பின் மொரார்ஜி தேசாய்அரசும் இதை செய்து இருக்கின்றன.

1946 ஆம்ஆண்டு, இந்திய ரிசர்வ் வங்கியின்கணக்கில் வராத  பணங்களைதடுக்கும் நோக்கில் ரூ1,000 மற்றும் ரூ10,000 ரூபாய் நோட்டுகளை தடை செய்தது. இந்தியாசுதந்திரம் அடைந்த பிறகு 1954-ல்மக்களில் வசதிகளுக்காக  5,000 ரூபாய்நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன. ஆனால், மீண்டும் அரசுக்குதலைவலியே மிஞ்சியது, கடத்தல்காரர்கள் லட்ச லட்சமான பணத்தைச்சுலபமாகக் கடத்க்ச் சென்றனர். வேறு வழியின்று 1978-ல்5000 ரூபாய் நோட்டுகளுக்கும் தடை விதிக்கப்பட்டன. அதன்பிறகுதற்போது தான் ரூபாய் நோட்டுகளுக்குமத்திய அரசு தடை விதித்துள்ளது.

 தற்போது எடுக்கப்பட்ட நடவடிக்கையின்பிண்ணனியில் மோடி அரசின், நம்பகத்தன்மைஅடங்கியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.  1946 மற்றும்1978-ல் இந்தியவின் வளர்ச்சியை தடுக்கும் மலையளவு  கருப்புபணம் இல்லை. ஆனால் 1990க்குபிறகு கருப்புப்பணம் பதுக்கல் என்பது புதுப் பரிமாணத்துடன்வளர்ந்தது.  ஆட்சிக்குவந்தவுடன் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப்பணத்தைமீட்டு, ஒவ்வொரு இந்தியருக்கும் 15 லட்சம்வழங்குவோம் என்கிற வாக்குறுதியை 2014-ம்ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மோடி முன்வைத்தார். மோடிஅரசின் மிக முக்கியமான வாக்குறுதியாககருதப்பட்டது இது. ஆனால், ஆட்சிக்குவந்த பிறகு இந்த வாக்குறுதியைமோடி மறந்துவிட்டார் என்று நாடு முழுவதிலும்விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் அதிரடிநடவடிக்கையால், தனது செல்வாக்கை மீட்டிருக்கிறார்மோடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக