யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/11/16

அச்சப்பட தேவையில்லை : அருண் ஜெட்லி விளக்கம்:

அச்சப்பட தேவையில்லை : அருண் ஜெட்லி விளக்கம்:
தங்கள் கையிருப்பில் உள்ள ரொக்கத்தை, பொதுமக்கள் தைரியமாக வங்கிகளில் வரவு வைக்கலாம். 2.5 லட்சம் வரையிலான தொகையை, 'டிபாசிட்' செய்யும் நபர்கள், வருமான வரி குறித்து அச்சப்படத் தேவையில்லை,'' என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, மத்திய நிதி அமைச்சர் ஜெட்லி கூறியதாவது: நாட்டில், கறுப்பு பண பதுக்கல் மற்றும் கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கவே, பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறித்து, பொதுமக்கள் பீதியடைய வேண்டாம். மக்கள், தங்கள் கைவசம் உள்ள அனைத்து நோட்டுகளையும், வங்கிக் கணக்கில் செலுத்தி வரவு வைத்துக் கொள்ளலாம். கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் மற்றும் ஊழல்வாதிகள் மட்டுமே இந்த அறிவிப்பால் பீதி அடைய வேண்டும். ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் நேர்மையாக பணம் சம்பாதிப்போருக்கு, இது வரப்பிரசாதமே. தவிர, 2.5 லட்சம் ரூபாய் வரையிலான டிபாசிட்டுகள் குறித்து, வருமான வரித்துறைக்கு தகவல் அளிக்கப்படாது. அதுகுறித்து, வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தவும் மாட்டார்கள். உங்கள் பணம் உங்களுடையதே; பொதுமக்கள் அச்சப்பட தேவைஇல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக