யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

26/11/16

'EMIS' சர்வரை மேம்படுத்த வேண்டும்: தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை.

கல்வி தகவல் மேலாண்மை முறைக்கான (எமிஸ்) இணையதள சர்வரை மேம்படுத்த வேண்டும் என அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை,மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் சாமி.சத்தியமூர்த்தி கூறியது:
தமிழகத்தில் அரசு, தனியார் பள்ளிகளில் உள்ள மாணவர்களின் விவரங்களை தொகுத்திடும் வகையில், கல்வி தகவல் மேலாண்மை முறை (எமிஸ்) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்படி, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் ஒவ்வொருவர் குறித்து 47 வகையான விவரங்கள் குறிப்பிட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும்.இதில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. எமிஸ் சர்வரின் வேகம் மிகக் குறைவாக உள்ளது. மாணவரின் ஜாதி உட்பிரிவுகளைக் குறிப்பிடுவதற்கான வழிகள் இல்லை. மேலும் எடை, உயரம் உள்ளிட்ட மாறுபடக் கூடிய தேவையற்ற விவரங்களையும் தெரிவிக்குமாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தப் பணியை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், தலைமை ஆசிரியர்கள் வழக்கமான கல்வி, பள்ளி நிர்வாகப் பணிகளை கவனிக்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை உருவாகியிருக்கிறது. எனவே, இந்த முறையில் தேவையற்ற விவரங்களைக் கேட்பது தவிர்க்கப்படவேண்டும் என்பதோடு, "எமிஸ்' சர்வர் வேகம் மேம்படுத்தப்பட வேண்டும் என்றார் அவர்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக