யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

17/12/16

டியூசன் நடத்தி 25 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் : அதிர்ச்சி தகவல் உஷார் பெற்றோர்களே

டியூசன் நடத்தி 25 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் : அதிர்ச்சி தகவல் உஷார் பெற்றோர்களே

தர்மபுரி:தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவகுமார்(25). தனது நண்பர்கள் ஈஸ்வரன்(26), மற்றொரு சிவக்குமார்(27) ஆகியோருடன் சேர்ந்து தர்மபுரி,
பாலக்கோட்டில் டியூசனுக்கு வந்த 25க்கும் மேற்பட்ட மாணவிகளை மிரட்டி பலாத்காரம் செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டனர்.

ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள சிவகுமார் தகுதி தேர்வில் தோல்வியடைந்ததால், ஆசிரியர் பணியில் சேர முடியாததையடுத்து தர்மபுரி அரசு மகளிர் பள்ளி அருகில், துளிர் என்ற பெயரில் டியூசன் சென்டர் தொடங்கினார்.

அவரது நண்பர் ஈஸ்வரனும், டியூசன் சென்டருக்கு கீழே ெசல்போன் கடை வைத்துள்ள மற்றொரு சிவகுமாரும், அடிக்கடி அங்கு வந்து சென்றனர்.

பின்னர் பாலக்கோட்டிலும், அதே பெயரில் டியூசன் சென்டர் ஆரம்பித்தார். இங்கு 8 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவிகள் அதிகம் சேர்ந்தனர்.

டியூசனுக்கு வந்த மாணவிகள் சிலருக்கு, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து சிவகுமாரும், அவரது நண்பர்களும் சில்மிஷத்தில் ஈடுபட்டனர். மேலும், அதை ஒருவருக்கொருவர் ெமாபைலில் படம் எடுத்து, அந்த வீடியோவை பார்த்து ரசித்து வந்தனர்.

இந்நிலையில் டியூசன் சென்டர் தொடங்கியபோது சேர்ந்த மாணவி ஒருவருக்கு சிவக்குமார் பாலியல் தொல்லை கொடுத்து அதை வீடியோவில் பதிவு செய்துள்ளார்.

பின்னர் அந்த மாணவியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சிவக்குமார் மிரட்டியுள்ளார். அந்த மாணவி அதற்கு சம்மதிக்கவில்லை.
இந்நிலையில் படிப்பை முடித்த அந்த மாணவிக்கு திருமணம் நடந்துள்ளது.

பழைய ஆபாச வீடியோ பதிவை காட்டி தனது இச்சைக்கு இணங்கும் படியும், இல்லையென்றால் இணையதளத்தில் வீடியோ பதிவை வெளியிடப்போவதாகவும் டியூசன் ஆசிரியர் சிவக்குமார் மிரட்டியுள்ளார்.

அந்த மாணவி தனது குடும்பத்தினர் துணையுடன் பாலக்கோடு போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாருக்கு பின்னர் தான் விஷயம் போலீசுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து பாலக்கோடு போலீசார் விசாரிக்க தொடங்கியபோது,

சிவக்குமார் மீது மேலும் ஒரு மாணவியின் பெற்றோர் கடந்த வாரம் புகார் அளித்துள்ளனர். அப்போது தான் 25 மாணவிகளை டியூசன் என்ற போர்வையில் சிவக்குமார் சீரழித்தது தெரியவந்தது.

இதற்கு உடந்தையாக சிவக்குமாரின் நண்பர்கள் ஈஸ்வரன், மற்றொரு சிவக்குமார் ஆகியோரும் இருந்தது தெரிந்தது. இதையடுத்து 3 பேரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

விசாரணை நடத்திய போலீசார் கூறுகையில், ‘‘ திருமணமான பின்னரும் ஒரு மாணவிக்கு மிரட்டல் விடுத்தபோதுதான் சிக்கி கொண்டனர்.

ஆபாச வீடியோக்களை பறிமுதல் செய்துள்ளோம். அவரது டியூசன் சென்டரில், மெமரி கார்டு ஒன்று சிக்கியது.

அதில் மேலும் பல மாணவிகள் ஆபாசமாக இருப்பது போன்ற படங்கள் உள்ளது. இதில் சில வீடியோக்கள் செல்போன் மூலம் வேறு நபர்களுக்கு வைரலாக பரப்பப்பட்டுள்ளது.

இவை வேறு ஏதேனும் சமூக வலைதளங்களில் பதிவு செய்திருக்கலாம் எனவும் தெரிகிறது. இதுகுறித்து விசாரிக்கிறோம்,’’ என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக