யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

17/12/16

புதிய பணத்தை கொடுங்க; அப்புறம் எடுங்க'

மக்களிடம் தேங்கியுள்ள புதிய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டிபாசிட் செய்வது அதிகரித்தால் தான், வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்' என, நிதி அமைச்சக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, செல்லாததாக அறிவிக்கப்பட்ட, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை, 'டிபாசிட்' செய்வது அதிகரித்துள்ளது. இதற்கான காலக்கெடு இம் மாதத்துடன் முடிவடைய உள்ளது.
பணத் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுப்பதற்காக, வங்கி களில் இருந்து, வாரத்துக்கு அதிகபட்சம், 24 ஆயிரம் ரூபாயும், ஏ.டி.எம்.,களில், ஒரு நாளில் அதிகபட்சம், 2,500 ரூபாயும் மட்டுமே எடுக்க முடியும் என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள் விதிப்பு : இதற்கான கட்டுப்பாடு எப்போது விலக்கி கொள்ளப்படும் என்பது குறித்து, மத்திய நிதி அமைச்சக உயர் அதிகாரிகள் கூறியதாவது: 

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியிடு வதற்கு முன், 200 கோடி எண்ணிக்கை உடைய, புதிய, 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப் பட்டன.இந்த, நான்கு லட்சம் கோடி ரூபாய் தான், முதலில் புழக் கத்தில் விடப்பட்டது. அதைத் தொடர்ந்து, புதிய, 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன.

ஏ.டி.எம்., மற்றும் வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் பீதியடைந்த மக்கள், புதிய நோட்டுகளை அதிக அளவில் கையில் இருப்பு வைக்கத் துவங்கி யுள்ளனர். தற்போது, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், பணத் தட்டுப்பாடு குறைந்துள்ளது. வங்கிகள், ஏ.டி.எம்.,களில் கூட்டம் குறைந்துள்ளது. 

டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மக்கள் மாற துவங்கி யுள்ளதால், கையில் ரூபாய் நோட்டுகள் வைத்துக் கொள்வது குறைந்துள்ளது. இதனால், புதிய ரூபாய் நோட்டுகளை தங்கள் வங்கிக் கணக்கில் மக்கள் டிபாசிட் செய்து வருகின்றனர். 

தற்போதைய கணக்கின்படி, புழக்கத்தில் விடப் பட்ட, புதிய ரூபாய் நோட்டுகளில், 50 சதவீதம் நோட்டுகள், வங்கிகளில் டிபாசிட் செய்யப் பட்டுள் ளன. இது, 80 சதவீதத்தை தாண்டும் போது தான், 
Advertisement
வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப் பதற்கு உள்ள கட்டுப்பாடுகள் படிப்படியாக விலக்கி கொள்ளப்படும்.
டிபாசிட் அதிகரிக்கும் :

முதல்கட்டமாக, கூட்டுறவு வங்கிகளுக்கும், பின்னர் மற்ற வங்கிகளுக்கும் இந்தக் கட்டுப் பாடு தளர்த்தப்படும். தேவைக்கேற்ப, புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி, தீவிர மாக நடந்து வருகிறது. இம்மாத இறுதிக்குள், பணத் தட்டுப்பாடு முழுமையாக குறைந்து, மக்கள் பணத்தை டிபாசிட் செய்வது அதிகரிக் கும். அடுத்த மாத துவக்கத்தில் இருந்து, பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என, எதிர்பார்க்கலாம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக