யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

13/1/17

பாஸ்போர்ட் தொலைத்தால் அபராதம்!

மலேசியாவில் பாஸ்போர்ட்டை தொலைப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மலேசியா அரசு தெரிவித்துள்ளது.

மலேசியாவில் பல நாட்டைச் சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதுமட்டுமல்லாமல், சுற்றுலாவுக்காக லட்ச கணக்கானோர் மலேசியாவுக்கு வந்து செல்கின்றனர்.

இப்படி மலேசியாவுக்கு வரும் வெளிநாட்டினர் தங்களது பாஸ்போர்ட்டை தொலைக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது.

இதுகுறித்து துணைப்பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மத் சாஹித் ஹமிடியும், மலேசிய குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஶ்ரீ முஸ்தாபார் அலியும் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து,மலேசிய குடிநுழைவுத்துறைத் தலைமை இயக்குநர் டத்தோ ஶ்ரீ முஸ்தாபார் அலி கூறுகையில், அவரவர் பாஸ்போர்ட்டை பத்திரமாக வைத்து கொள்ள வேண்டும். இதுவரை பாஸ்போர்ட்டை தொலைத்தவர்களுக்கென அபராதம் ஒன்றும் விதிக்கப்படவில்லை. மலேசியாவில், முதல் முறை அடையாள அட்டையைத் தொலைத்தவர்களுக்கு 100 ரிங்கிட்டு (1527.97ரூ), அபராதமும், இரண்டாவது முறை தொலைத்தால் 300 ரிங்கிட்டும் (4583.92ரூ) அபராதமும், மூன்றாவது முறை தொலைத்தால் 1,000 ரிங்கிட்டும் (15280.76ரூ) அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

இதே முறையில்,பாஸ்போர்ட்டை தொலைப்பவர்களுக்கும் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பாஸ்போர்ட்டை தொலைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

கடந்த ஆண்டில் மட்டும் 44, 528 பாஸ்போர்ட்கள் தொலைந்ததாக புகார்கள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக