யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/2/17

சசிகலாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் திடீர் வழக்கு

24 மணி நேரத்திற்குள் சசிகலாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் திடீர் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எம்.எல்.சர்மா என்பவர் இந்த வழக்கைப் போட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் போட்டுள்ள வழக்கில், சசிகலாவுக்கு போதிய எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது. இதுதொடர்பான பட்டியலையும் அவர் ஆளுநரிடம் ஏற்கனவே ஒப்படைத்து விட்டார். ஆனாலும் ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்காமல் மெளனம் காத்து வருகிறார்.

பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கும் சசிகலாவை ஆட்சியமைக்க ஆளுநர் காலம் தாழ்த்தக் கூடாது. 24 மணி நேரத்திற்குள் சசிகலாவை ஆட்சியமைக்க அழைக்குமாறு ஆளுநருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அந்த மனுவில் வழக்கறிஞர் சர்மா கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்கனவே சுப்பிரமணியம் சாமி, இன்றைக்குள் ஆளுநர் ஆட்சியமைக்க அழைக்காவிட்டால் வழக்குத் தொடர வாய்ப்புண்டு என்று டிவீட் போட்டிருந்தார். இந்த நிலையில் சர்மா என்பவர் வழக்குப் போட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக