யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/2/17

நீட் தேர்வைப் போல, பொறியியல் படிப்புகளுக்கும் வருகிறது நுழைவுத் தேர்வு!

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வைப் போல, பொறியியல் படிப்புகளுக்கும் தேசிய பொது நுழைவுத் தேர்வை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 
அதன்படி, வருகின்ற 2018-19 கல்வியாண்டு முதல் நாடு முழுவதும் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கு, ஒற்றை நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, நுழைவுத் தேர்வு நடத்துவதற்கான விதிமுறைகளை வகுக்க, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலுக்கு (ஏ.ஐ.சி.டி.) மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில், இளநிலை பொறியியல் படிப்புகளுக்கு, ஒரே நுழைவுத் தேர்வை நடத்த, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக