![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqTfmoBkCNlXT7-vaul7HuyE3C97YASEC11P9r1y0hcmuh4wDrr5unmKTz4gewLohvu-sux-W1nyV1WcO-sMXjzBbXcLZJYLJJAlekfQ33LmieMuBn9CgTfrx5XrLVakJx-xJP0Pniu1Q/s320/400x400_IMAGE63986440.jpg)
சென்னை மெரீன் கடற்கரை முழுவதுமே 144 தடை சட்டத்தைப் பிரயோகித்து யாரையுமே அந்தப் பக்கம் போக விடக் கூடாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கிட்டத்தட்ட உத்தரவிடுவது போல கூறியுள்ளார் சு.சாமி.
எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏதோ அரசாங்க உத்தரவிடுவது போல உள்ளது சாமியின் டிவீட். அதில் அவர் கூறியிருப்பதாவது:
பழனிச்சாமி அரசு உடனடியாக சென்னை உயர்நீதிமன்றம் முதல் மெரீனாவில் உள்ள கலங்கரை விளக்கம் வரை 144 தடை உத்தரவை பிறப்பிக்க வேண்டும். மேலும் இங்கு கூடுவோர் மீது குண்டர் சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டத்தைப் பிரயோகித்து கைதாவோரை குறைந்தது 1 மாதம் சிறையில் அடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் சாமி.
முன்பு சசிகலாவுக்கு ஆதரவாக பேசி எழுதி வந்த சாமி தற்போது சசிகலாவால் நியமிக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக கிளம்பியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக