யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

16/2/17

CPS NEWS: புதிய ஓய்வூதியத் திட்டத்தில் மாத ஓய்வூதியம் இல்லாததால் 01.04.2003க்கு பிறகு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர், அரசு ஊழியர்களின் கவனத்திற்கு.....

`CPS NEWS:```

ஆளேயில்லாத கடைல டீ ஆத்துறதக் கூட பொறுத்துக்கலாம்.


ஆனா,

பால். . . டீத்தூள். . . . சுடு தண்ணீ. . . அட கிளாஸே இல்லாம டீ ஆத்துனா பொறுத்துக்க முடியுமா?

அத ஊத்தித்தரேன் குடிடானா குடிச்சுற முடியுமா?

முடியாதுல. . .

ஆனாநாம குடிப்போம்னு ஆட்சியாளர்கள் நம்புறாங்க. அதுனாலதேன் அவுக டீ ஆத்துறதா நம்பவச்சிக்கிட்டே இருக்காங்க. நாமலும் நம்பித் தொலஞ்சுக்கிட்டே இருக்கோம். . .

எப்படீங்கிறீங்களா❓

👇🏼இப்படித் தான்👇🏼

*ஓய்விற்குப் பின் சல்லிப் பைசா ஊதியமே வழங்காத* புதுமையான *ஓய்வூதியத் திட்டத்தில்*நம்மைச் சிக்க வைத்து சீரழித்து வருகின்றனர்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் மாத ஓய்வூதியம் இல்லாததால் 01.04.2003க்கு பிறகு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர், அரசு ஊழியர்களின் ஓய்வுக்குப் பின்னர்

❌ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதி (ரூ.50,000) ,

❌ஓய்வூதியர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (ரூ.2,00,000)

❌பணிக்கொடை,

❌தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978

ஆகியவை பொருந்தாது.


தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வழித் தகவல் : *திண்டுக்கல் எங்கெல்ஸ்.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக