யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

23/3/17

மாணவனுக்கு சித்ரவதை: கல்வி நிறுவனத் தலைவர் கைது!

கல்லூரி வளாக அறையில் அடைத்துவைத்து எட்டு நாள்கள் மாணவனை சித்ரவதை செய்ததாக கோவை நேரு கல்வி குழுமத்தின் தலைவர் கிருஷ்ணதாஸ் கேரள மாநிலம் திருச்சூரில் கைது
செய்யப்பட்டார்.

கோவையில் பிரபலமான நேரு கல்வி குழுமம் இயங்கிவருகிறது. இந்தக் கல்வி குழுமத்தின் தலைவராக கிருஷ்ணதாஸ் உள்ளார். இந்தக் கல்வி குழுமத்துக்குச் சொந்தமான கல்லூரிகளில் மாணவர்கள் தொடர்ந்து துன்புறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நேருகல்வி குழுமத்தில் திருச்சூர் எருமப்பட்டியைச் சேர்ந்த சக்கீர் சவுகத் என்கிற மாணவன் பயின்று வந்துள்ளார். இவரை, சில காரணங்களுக்காக கல்லூரி வளாகத்தில் உள்ள அறையில் எட்டு நாள்களுக்கும் மேலாக அடைத்துவைத்து சித்ரவதை செய்துள்ளனர்.

இதனையடுத்து, தப்பி வந்த மாணவனின் புகாரின் பேரில் நேரு கல்வி குழுமத்தின் தலைவர் கிருஷ்ணதாஸ் மற்றும் கல்வி நிறுவன நிர்வாகிகள் சிலரை திருச்சூர் எருமப்பட்டி காவல்துறையினர் கைது செய்தனர். கோவையில் பிரபலமாக செயல்படும் நேரு கல்விக்குழுமத்தின் தலைவர் கிருஷ்ணதாஸ் கைது செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக