யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/4/17

3 மணி நேரத்தில் விற்று தீரும் 'அம்மா குடிநீர்' பாட்டில்கள்

வெயில் தாக்கம் காரணமாக, 'அம்மா மினரல் வாட்டர்' பாட்டில்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. மூன்று மணி நேரத்தில் விற்று தீர்ந்து விடுவதால், பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.அரசு போக்குவரத்து கழகம் சார்பில், பஸ் ஸ்டாண்ட், சாலையோர உணவகங்கள் என, 324 இடங்களில், அம்மா மினரல் வாட்டர் பாட்டில்கள், காலை, 6:00 மணி முதல், இரவு, 10:00 மணி வரை விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது, 2.90 லட்சம் முதல், 3.10 லட்சம் பாட்டில்கள், கும்மிடிப்பூண்டியில் தயாரிக்கப்பட்டு, விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. ஒரு லிட்டர் பாட்டில், 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பஸ் ஸ்டாண்ட் ஸ்டால்களில், மூன்று மணி நேரத்தில், பாட்டில்கள் விற்று தீர்ந்து விடுகின்றன.

விற்பனை ஊழியர்கள் கூறியதாவது: முக்கிய நகரங்களில் உள்ள பஸ் ஸ்டாண்ட்களில், இரண்டு ஸ்டால்கள் மட்டுமே செயல்படுகின்றன. பல ஆயிரம் பயணிகள் வந்து செல்லும் நிலையில், தேவைக்கு ஏற்ப பாட்டில்கள் வருவது இல்லை. சாலையோர உணவகங்கள், தேவையின்றி செயல்படும் ஸ்டால்களுக்கு அனுப்பும் பாட்டில்களை, பஸ் ஸ்டாண்ட் ஸ்டால்களுக்கு அனுப்புவதன் மூலம், பயணிகளின் தேவையை ஓரளவு பூர்த்தி செய்ய முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர். 
அதிகாரிகள் கூறியதாவது: மார்ச் மாதத்தை விட, ஏப்ரல் மாதத்தில், பாட்டில்களின் எண்ணிக்கையை அதிகரித்து விட்டோம். இருந்த போதிலும், பயணிகள் மத்தியில் தேவை அதிகரித்து விட்டதால், தட்டுப்பாடு நிலவுகிறது. கூடுதல் பாட்டில்கள் அனுப்ப, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். 
'சும்மா' இருக்கும் ஊழியர்கள் : குடிநீர் விற்பனை ஸ்டால் ஒன்றுக்கு, இரண்டு ஊழியர் என்ற வகையில், 648 பேர் பணியில் உள்ளனர். இப்பணிகளை, அண்ணா தொழிற்சங்கத்தை சார்ந்தவர்களே மேற்கொண்டு வந்தனர். பாட்டில்களில் ஏற்படும் சேதத்தை ஊழியர்கள் தலையில், அதிகாரிகள் சுமத்தியதால், பலர் இந்த பணியில் இருந்து வெளியேறி விட்டனர். தற்போதைய நிலையில், வயதான டிரைவர், கண்டக்டர்களே பணியில் உள்ளனர். மூன்று மணி நேரத்தில், வாட்டர் பாட்டில்கள் விற்று தீர்ந்து விடுவதால், இந்த ஊழியர்கள், 'சும்மா' இருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக