யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

21/5/17

பள்ளிகளிள் அதிக கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் நடவடிக்கை - செங்கோட்டையன்

ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு
அளித்த பேட்டியில்,

தனியார் பள்ளிக்கூடங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து முன்னாள் ஐகோர்ட்டு நீதிபதி மாசிலாமணி தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் கடந்த ஒரு மாதங்களாக தனியார் பள்ளிக்கூடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். ஆய்வின் போது அதிக கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசுபள்ளிக்கூடங்களில் யோகா, விளையாட்டு, சாலை விதிகள், தேசப்பற்று ஆகியவை குறித்து மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ளும் வகையில் சிறப்பு வகுப்புகள் நடந்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் திறப்பது குறித்து மாணவ-மாணவிகளின் பெற்றோர்களை அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறோம். தமிழகத்தில் காலச்சூழ்நிலை அறிந்து பள்ளிள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு கூறினார்

அடுத்த கல்வியாண்டு முதல், மாணவர்களின் சீருடையில், அவர்கள் படிக்கும் வகுப்புகளின் அடிப்படையில் மாற்றம் செய்யப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

தமிழக கல்வித் துறையில், அடுத்த கல்வியாண்டிலிருந்து,

1ம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரை;


6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை;

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு,


தனித்தனி நிறத்தில், மூன்று விதமாக பிரித்து சீருடை வழங்கப்படும்.

அடிக்கடி விடுமுறை எடுக்கும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: பள்ளி கல்வி இயக்குனர் எச்சரிக்கை

அடிக்கடி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று
பள்ளி கல்வி இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து பள்ளி கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முதன்மை கல்வி அலுவலர்கள் ஆண்டாய்வை மேற்கொள்ள வேண்டும்.

ஜூன்மாதம் 6, ஜூலை மாதம் 6, ஆகஸ்ட் 6, செப்டம்பர் 2, அக்டோபர் 5, நவம்பர் 5, டிசம்பர் 2, ஜனவரி 4, பிப்ரவரி 2 பள்ளிகளில் ஆய்வு செய்ய வேண்டும்.முதன்மை கல்வி அலுவலர்கள் ஆண்டாய்வின் போது, ஆசிரியர்கள் வருகை பதிவேட்டினை ஆய்வு செய்து நீண்ட நாட்கள் விடுப்பில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அடிக்கடி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பள்ளிகளின் கட்டமைப்பு வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, பள்ளியின் தளவாட பொருட்கள் கணினி, தொலைக்காட்சி மற்றும் நூலக பயன்பாடு சார்ந்தும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் திறந்தவெளி கிணறுகள், உயர் அழுத்த மின்கம்பங்கள், பழுதடைந்துள்ள கட்டிடங்கள் போன்றவை மாணவர்களுக்கு பாதுகாப்பற்றதாக ஆய்வின் போது கண்டறியப்பட்டால் அதனை ஆய்வறிக்கையில் குறிப்பிட்டு உடனடியாக அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


மேல்நிலை அறிவியல் பாடங்களுக்கான செயல்முறைகள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். பள்ளிகளில் பராமரிக்கப்படும் மாணவர் சேர்க்கை பதிவேடு, ஆசிரியர் வருகைபதிவேடு, அரசு வழங்கும் நலத்திட்ட பொருட்கள் அனைத்தும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதற்கான பதிவேடு, இருப்பு பதிவேடு மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் மூலமாக வழங்கப்பட்ட பொருட்கள் மற்றும் மானியங்கள் குறித்த பதிவேடுகள் அனைத்தையும் ஆய்வின் போது பரிசீலிக்க வேண்டும். ஆண்டாய்வு மேற்கொள்ளும் போது ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அக்குறைபாடுகளை களைய சார்ந்த பள்ளிக்கு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்க வேண்டும். கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்த பின் மீண்டும் ஒருமுறை அப்பள்ளியை பார்வையிட்டு ஆய்வின் போது குறிப்பிட்ட குறைபாடுகள் களையப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்தல் வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 3 நிறங்களில் சீருடைகள்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் 3 நிறங்களில் சீருடைகள் அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த 635 தனியார் மெட்ரிக். பள்ளிகளுக்கு தாற்காலிக அங்கீகாரச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது.இதற்கான சான்றிதழ்களை வழங்கி, செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் மூன்று நிறங்களில் சீருடைகள் வழங்கப்படும். இதனால், அரசு, தனியார் பள்ளி மாணவர்களிடையே ஏற்றத் தாழ்வுகள் இருக்காது.

எந்தவித அழுத்தமும் இன்றி தேர்வுகள்: 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்ற தமிழக அரசின் முடிவு மாணவர்களுக்கு கடினமாக இருக்கும் என கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. எந்தவித அழுத்தமும் இன்றி தேர்வு நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்,
11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், அரியர்ஸ் முறையில் 12-ஆம் வகுப்பில் தேர்வு எழுதலாம்.
ஐஏஎஸ் தேர்வுக்கு பயிற்சி மையங்கள்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஐஏஎஸ் தேர்வு எழுத பயிற்சி வழங்குவதற்காக மாவட்டங்கள்தோறும் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும். ஆறாம் வகுப்பு முதல் கணினி வழியாக பாடங்கள் போதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

"நீட்' தேர்வை தமிழகத்துக்குக் கொண்டு வரக் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. மத்திய அரசு நடத்தும் பல்வேறு தேர்வுகளைச் சந்திப்பதற்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறந்த கல்வி வல்லுநர்களைக் கொண்டு வாரத்தில் மூன்று நாள்கள் பயிற்சி வழங்கப்படும்.

கல்வித் துறையில் விரைவில் மாற்றம்: ஆசிரியர் பற்றாக்குறை என்பது இல்லை. தென் மாவட்டங்களில் கூடுதலாக ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அதுகுறித்து பட்டியல் தயாரிக்கப்படும்.

பள்ளிக் கல்வித் துறையில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்து உயர்நிலைக் குழு கலந்து ஆலோசித்து, இன்னும் இரண்டு தினங்களில் முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில், சமூக நலத் துறை அமைச்சர் வி.சரோஜா, மின் துறை அமைச்சர் பி.தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பள்ளிகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்!' - அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பள்ளிகள் திறப்பது குறித்து அவர் கூறியதாவது...

'தனியார் பள்ளிக்கூடங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து முன்னாள் ஐகோர்ட்டு நீதிபதி மாசிலாமணி தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்தக் குழுவினர் கடந்த ஒரு மாதமாக தனியார் பள்ளிக்கூடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். ஆய்வின்போது அதிக கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பள்ளிக்கூடங்களில் யோகா, விளையாட்டு, சாலை விதிகள், தேசப்பற்று ஆகியவை குறித்து மாணவ - மாணவிகள் தெரிந்து கொள்ளும் வகையில் சிறப்பு வகுப்புகள் நடந்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.


கோடைவிடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் திறப்பது குறித்து மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறோம். தமிழகத்தில் காலச்சூழ்நிலை அறிந்து பள்ளிக்கூடங்கள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.' என்றார்.

அரசு நிர்ணயம் செய்த கட்டண விபரம்

LKG கட்டணம்                    -  3750
UKG கட்டணம்                    -  3750
1-ம் வகுப்பு கட்டணம்       -  4550
2-ம் வகுப்பு கட்டணம்       -  4550

3-ம் வகுப்பு கட்டணம்       -  4550
4-ம் வகுப்பு கட்டணம்       -  4550

5-ம் வகுப்பு கட்டணம்       -  4550
6-ம் வகுப்பு கட்டணம்       -  5050
7-ம் வகுப்பு கட்டணம்       -  5050
8-ம் வகுப்பு கட்டணம்       -  5050
9-ம் வகுப்பு கட்டணம்       -  6300
10-ம் வகுப்பு கட்டணம்      -  6300

10-ம் வகுப்பு வரை மேற்படி கல்வி கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்துள்ளது. மேற்படி கல்வி கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் கேட்கும் பள்ளி நிர்வாகத்தின் மீது கீழ்க்கண்ட அதிகாரிகளிடம் புகார் அளியுங்கள்:-

மாவட்ட ஆட்சியர்,
பள்ளிகல்வி இயக்குனர்,
மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர்,
மெட்ரிகுலேசன் பள்ளிகள் இணை இயக்குனர்,
மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர்,
முதன்மை கல்வி அலுவலர்,
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்,
மாவட்ட கல்வி அலுவலர்,
உதவிதொடக்கக் கல்வி அலுவலர்

மேற்படி அதிகாரிகளுக்கு புகார் அனுப்புங்கள். புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யுங்கள்.


மேலும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009, சட்டப் பிரிவு 12(1)(சி) -ன் கீழ் 2017-2018 ம் கல்வியாண்டில் 25% இட ஒதுக்கீடடின் கீழ் மேற்படி பள்ளியில் 30 மாணவர்களை LKG  யில் சேர்த்துகொள்ள மேற்படி பள்ளியில் அரசு இடம் ஒதுக்கியுள்ளது.

6-ம் வகுப்பு முதல் கணினி வழியாக கல்வி கற்பிக்க திட்டம்: செங்கோட்டையன் பேட்டி

அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் கணினி வழியாக கல்வி கற்பிக்க திட்டம் என செங்கோட்டையன் கூறியுள்ளார். 2 நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வெளியிடப்படும் என செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார். 11-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத பாடத்தை 12-ம் வகுப்பு படிக்கும் போது எழுதலாம் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளியில் மாணவர்சேர்க்கையை அதிகரிக்க...முதலில் ஆசிரியர்களாகிய நம்மை தான் சீர்படுத்திக்கொள்ளவேண்டும் இதை படியுங்கள்.!!

‘அரசு பள்ளியில் மாணவர்சேர்க்கையை அதிகரிக்க...
முதலில் ஆசிரியர்களாகிய நம்மை தான் சீர்படுத்திக்கொள்ளவேண்டும் இதை 

படியுங்கள்.

ஓர் ஆசிரியரின் பயணக்குறிப்பு

நாளை சமுகத்தின்
இன்றைய சிற்பிகள் நாம்...
ஆண்டி முதல்
அரசியல்வாதி வரை...
ஆசிரியரால் உருவாக்கப்படுபவர்கள்...
இச்சமூகத்தில்
நல்ல மாற்றங்களை
நம்மால்
ஏற்படுத்த முடியும்...
என்று முதலில்
உங்கள் மீது நல்ல
நம்பிக்கை வையுங்கள்...

2. ஒற்றுமையே உயர்வு

ஊர்கூடி தேர் இழுப்பது போன்றுதான் - உங்கள்
செயல் என்றாலும்...
உங்கள் கருத்துக்களை
மற்றவர்களும் பின்பற்றவேண்டும் - என்று
உடனே உங்கள் கருத்துக்களை
அவர்களிடம் திணிக்காதீர் - இது
உங்கள் நண்பர்களையும்
பகைவர்கள் ஆக்கும்
உறவினராயினும் பின்
உறவ கசக்கும்...

3. முதல் பயணம்...

அப்படி என்றால் தனி ஒரு நபராய்
நான் மட்டும் எப்படி? - என்ற கேள்வி
உங்களை பின்னுக்கு இழுக்கும்..
புறம்தள்ளுங்கள் அதை முதலில்
பின் உங்கள் தன்னம்பிக்கையை மட்டும்
துணைக்கு அழைத்துக்கொண்டு பயணியுங்கள்
உங்கள் காலின் நடைபாதைக்கு மட்டும் வெளிச்சம் கிட்டும்...
அது வேறுஎதுவும் அல்ல
உங்கள் தன்னம்பிக்கை

4. விளக்கு எரிய...

நல்ல மாற்றங்கள்
நம்மிடம் இருந்து பிறக்கப்போகிறது - என்று
உங்களை நீங்களே அவ்வப்பொழுது
பாரட்டிக்கொள்ளுங்கள்
இந்த சுயபாரட்டு - நம்மை
எத்தனை இடர்பாடுகள் வந்தாலும்
சோர்வடையசெய்யாது...
இது உங்கள் தன்னம்பிக்கை விளக்கிற்கு
வார்க்கும் எண்ணெய்...

5. தடை ஓட்டப் பயணம்..

உங்கள் நெடும்பயணத்தில்
கேலிகள் வேலிபோடும்
இலக்கை அடைவதுதான் நம் நோக்கம்
வேலியை உடைப்பது நம் இலக்கல்ல
கோபம் கொண்டு உடைக்க முற்படாதீர்...
அதில் நம் சக்தியை விறையமாக்க வேண்டாம்
புத்திசாலியாய் தாண்டி செல்லுங்கள்...

6. கழி கிடைக்கும் கண்டிப்பாய்...

உங்கள் விடாமுயற்சிக்கும்
தன்னம்பிக்கைக்கும் சிறிய பரிசு காத்திருக்கும்
அந்த இருட்டு பயனத்தில்
இன்னொரு ஓளி
ஆம் உங்களை போன்றே
உங்கள் முன்னோ பின்னோ
ஒருவர் வந்து கொண்டிருப்பார் - அல்லது
சென்றுகொண்டிருப்பார்...
உங்கள் பயணப்புகழ் பகிராதீர்..
அவரைப்பார்த்து புன்னகை மட்டும் சிந்துங்கள்...
நீங்கள் விழும் நேரத்தில் கழியாய் இருப்பார்...

7. தோள் கொடுத்து தொடருங்கள்

இரண்டு கால்களின் பயணம் நான்காகும்
இரண்டு விளக்குகளின் வெளிச்சம்
உங்கள் பாதையை இன்னும் தெளிவாக்கும்
தோள் கொடுத்து தொடருங்கள்
தோல்வி பயம் பட்டுபோகும்
தற்போது மெல்ல வெற்றி
வெளிச்சம் போட்டுக்காட்டும்
உங்களின் பயணப்பாதையை...

8.உங்கள் வெற்றி இதுவல்ல

இது உங்களின் வெற்றியல்ல
உங்கள் தன்னம்பிக்கயின் வெற்றி
அதிராமல் ஆரவாரமில்லாமல் அமைதியாய்
நீங்கள் வந்த பாதையை
சற்று திரும்பி பாருங்கள்
ஒரு கூட்டமே
ஒளிப்பிழம்பாய் வந்துகொண்டிருக்கும்
இதுதான் உங்களின் வெற்றி...

- இது ஓர் ஆசிரியரின் பயணக்குறிப்பு

அரசு பள்ளியில் மாணவர்சேர்க்கையை அதிகரிக்க...

1. தற்பொழுது இருக்கும் மாணவர்களை தமிழ், ஆங்கில வாசிப்புதிறனில் 
சீர்படுத்துங்கள்.

2. மாணவர்கள் தங்கள் முந்திய வகுப்பு வரை எதுவும் தெரிந்துகொண்டு 
வருவதில்லை என்று குறைகூறாமல் உங்கள் திறமைக்கு அளிக்கப்பட்ட 
சவாலாய் எடுத்துக்கொண்டு செயல்படுங்கள்...

3. எழுத்தே கூட தெரியாமல் இருப்பார்கள் அவர்களை இனம் கண்டு அவர்களுக்கு அட்டைதாளில் எழுதப்பட்ட எழுத்துக்கள் கொண்டு தினமும் வாய்விட்டு படிக்கசொல்லி பயிற்சி கொடுங்கள்..

4. தினமும் க - வரிசை ங - வரிசை என்று ஒவ்வொரு வரிசையாய்
பழைய தமிழ் செய்திதாள்களை கொடுத்து எழுத்துக்களை வட்டமிட்டு 
வரச்செய்யுங்கள் இப்பயிற்சி எழுதுக்களின் உருவங்களை அவர்கள் மனதில் 
நிலைநிறுத்த பயன்படும்.

5. ஒரு சொல்வார்த்தை இரு சொல்வார்த்தை என தினமும் 10 வார்த்தைகள் (சொல்வதை எழுதுதல்) டிக்டேஷன் வைத்து பளு இல்லாமல் வலு சேருங்கள்

6. வாசிப்பில் எழுத்துக்களின் சேர்ப்பை தெளிவான ஒலிநடையுடன் மெதுவாய் கற்பித்து அவர்களின் வாசிப்பிற்கு கருகொடுங்கள்...

7. கருவை வலுப்படுத்த தினமும் நீங்கள் வாசித்து அவர்களையும் வாசிக்கவைத்து ஒழுங்குபடுத்தி வாசிக்க செய்து பயிற்சி கொடுங்கள்...

8. தொலைக்காட்சி செய்திவாசிப்பை மாணவர்களிடம் இதுதான் வாசிப்பு என்று உதாரணப்படுத்துங்கள்.

9. அதுபோன்று வாசிக்கும் மாணவர்களுக்கு மற்ற மாணவர்கள் முன்னிலையில் அவர்களை முன்னிலைப்படுத்தி பாராட்டுகளை பெற்றுக்கொடுங்கள்..

10. பரிசுகளை வழங்குங்கள்.

விதை முளைவிட்டு, துளிர்விட்டு, இலைவிட்டு, நோய்பட்டோ, 
மீண்டும்துளிர்விட்டோ, இலைவிட்டு, கிளைபடர்ந்து, மலர்மலர்ந்து, 
காய்விட்டே கனியாகிறது...

இதே போல தான் மாணவர்கள் உங்களுக்கு எந்தநிலையிலும் எந்த
கலவையிலும் உங்கள் வகுப்பிற்குள் வந்து சேர்வார்கள்...
விரக்தியும், விதண்டாவாதத்தையும் விட்டுவிட்டு...
நீர் ஊற்றுவதும், உரமிடுவதும், நோய்வராமல் பாதுகாப்பதும் நம்கடமை என்று எண்ணி பயணத்தை துவக்குங்கள்...

நம் முதல் பயணம் வெற்றிபெற நம்மை நாமே வாழ்த்திக்கொண்டு புறப்படுவோம்..

அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?

வருமான வரிதானே... பிப்ரவரி மாதம் வரட்டும்; பார்த்துக்கொள்ளலாம்’ என்று எண்ணிக் கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது. காரணம், அப்போது வருமானம் குறைவு. எனவே, வரி செலுத்தவேண்டிய கட்டாயம் பலருக்கும் இல்லை. ஆனால் இப்போது கால ஓட்டமும், ஊதிய நிலைகளில்
ஏற்பட்ட மாற்றமும் சேர்ந்து, பணியாளர்களுக்கான சம்பளத்தைக் குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்த்தியுள்ளதால், வரி கட்ட வேண்டிய நிலைக்கு பலரும் உயர்ந்துள்ளனர்.

அரசுஊழியர்களில் பலர் இப்போது வருமான வரி கட்டுபவர்களாக மாறியிருக்கிறார்கள்.  தமிழக அரசு ஊழியர்களுக்குப் பரிசீலனையில் உள்ள ஊதியச் சீரமைப்புக்குழு அறிக்கை நடைமுறைக்கு வரும்போது, இன்னும் பலர் வரி வட்டத்துக்குள் வந்துவிடக்கூடும். முன்பு ஆண்டுக்கொருமுறை கட்டிய வருமான வரியை தற்போது மாதம்தோறும் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிலைக்கு வந்துவிட்டோம். 

ஊதியமும் ஓய்வூதியமும் ஒன்றே

வருமான வரிக் கணக்கீட்டைப் பொறுத்தவரை, ஊதியமும், ஓய்வூதியமும் ஒன்றுதான். மூத்தக் குடிமக்களுக்கான வருமான வரி வரம்பு வேறுபடும். அதுவும் ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியத்துக்கு வரி விகிதம் ஒரே மாதிரியே இருக்கும்.

பணியில் உள்ள ஊழியருக்கு, அவருக்குச் சம்பளம் வழங்கும் அலுவலர் ஒவ்வொரு நிதியாண்டுக்கான வருமான வரியைக் கணக்கிட்டு டிடிஎஸ் பிடிப்பார். ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெற ஆரம்பித்தபிறகு, ஓய்வூதியம் வழங்கும் அலுவலர் வருமான வரியைக் கணக்கிட்டு வரி பிடிப்பார்.

சார்நிலைக் கருவூல அலுவலர், உதவிக் கருவூல அலுவலர், மாவட்டக் கருவூல அலுவலர் எனப் பதவிப் பெயர்கள் பலவாக இருப்பினும், சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் வேலையை இந்த அலுவலர்கள் செய்து வருகின்றனர். சென்னையைப் பொறுத்தவரை,  ஓய்வூதியம் வழங்குவதற்கென்றே அலுவலர் உள்ளார்.

 இருவகை வருமான வரிக் கணக்கீடு

டியூபேசிஸ் (Due basis)  மற்றும் டிரான் பேசிஸ் (Drawn basis) என இரு வகையாக வருமான வரி  கணக்கிடப்படக்கூடும். அதாவது, ஒரு நிதியாண்டு முழுக்க ஒருவர் பெறக்கூடிய அனைத்து வருவாய் இனங்களையும் கணக்கிட்டு, அதற்கான வருமான வரியை மார்ச் தொடங்கி பிப்ரவரி முடிய 12 மாத சமதவணைகளில் பிடித்தம் செய்வது டியூ பேசிஸ். வருமான வரியைக் கணக்கிட முடியாத இனங்கள், நிலுவை வரவுகள் போன்றவை முன்பே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாமல் இருந்தால், அவற்றைப் பட்டுவாடா செய்யும்போது வரியைப் பிடித்து விடுவது டிரான் பேசிஸ்.



டியூபேசிஸ் அல்லது டிரான் பேசிஸ் இவற்றுள் எது முன்போ, அப்போதே வரிப் பிடித்தம் செய்ய வேண்டும் என்பதே டிடிஎஸ் விதிமுறை.

இவ்வாறு செய்வதால், ஒரு குறிப்பிட்ட தேதியில் வரி செலுத்த வேண்டியவரிடமிருந்து பிடித்தம் செய்ய வேண்டிய வரி, நிலுவை இல்லாமல் அரசுக் கணக்கில் போய்ச் சேர்ந்துவிடும்.

 ஓய்வு பெறுவோர்

பணியிலிருந்து ஓய்வு பெறுவோர், 1. பணிக்கொடை, இறப்புப் பணிக்கொடை மற்றும் ஓய்வுப் பணிக்கொடை, 2.  ஓய்வூதியம் கணக்கீடு, 3. ஈட்டிய விடுப்பு ஒப்படை ஊதியம், 4. சொந்தக் காரணங்களுக்கான ஈட்டாத விடுப்பு ஊதியம் ஆகிய நான்கு பணப் பயன்களைப் பெறுவார்கள். இவற்றுள் முதல் மூன்று இனங்கள் வருமான வரி விலக்குப் பெற்றவை. நான்காவது இனமாக உள்ள மூன்று மாத கால ஈட்டாத விடுப்பு ஊதியம், வருமான வரிக்கு உட்பட்டது. எனவே, பணியிலிருந்து ஓய்வு பெறுவோருக்கான வருமான வரிக் கணக்கீடு பின்வருமாறு அமையும்.

ஊழியர் ஒருவர் 28.02.2018 அன்று ஓய்வு பெற உள்ளதாக வைத்துக்கொள்வோம். 2017-2018-க்கான இவரது வருமான வரியை மார்ச் 2017-லேயே  கணக்கிட வேண்டும். அந்தக் கணக்கீடு பின்வருமாறு இருக்கும்.

1. மார்ச் 2017 முதல் பிப்ரவரி 2018 வரை பெற உள்ள ஊதியம், 2. மார்ச் 2018 அன்று பெறத்தக்க மூன்று மாத கால ஈட்டாத விடுப்பு ஊதியம். மேற்கண்ட இரண்டு இனங்களின் கூட்டுத் தொகைக்கு வரியைக் கணக்கிட்டு, மார்ச் 2017 முதல் பிப்ரவரி 2018 முடிய சம்பளம் வழங்கும் அலுவலர் பிடிக்க வேண்டும்.

மார்ச் 2018 முதல் அவர் ஓய்வூதியம் பெற ஆரம்பித்துவிடுவார். அப்போது, 2018-19-ம் நிதியாண்டுக்கான வருமான வரியானது, அவர் பெறப்போகும் ஓய்வூதியத்தின் கூட்டுத்தொகைக்குக் கணக்கிடப்பட்டு, ஓய்வூதியம் வழங்கும் அலுவலரால் பிடித்தம் செய்யப்படும்.


இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம். இன்னொரு ஊழியர் 31.10.2017  ல் ஓய்வு பெறுவதாக வைத்துக்கொள்வோம். 2017-2018-ம் ஆண்டுக்கான இவரது வருமான வரிக் கணக்கீடு, பின்வரும் இனங்களின் கூட்டுத் தொகைக்குரியதாக இருக்கும்.

1. மார்ச் 2017 முதல் அக்டோபர் 2017 வரை பெறப்போகும் ஊதியம், 2. நவம்பர் 2017 முதல் பிப்ரவரி 2018 வரை பெற உள்ள ஓய்வூதியம், 3. 1.11.2017 அன்று பெறத்தக்க மூன்று மாத கால ஈட்டாத விடுப்பு ஊதியம். இதற்கான வருமான வரி, 12 சம தவணைகளில் மார்ச் 2017 ஊதியம் தொடங்கிப் பிடித்தம் செய்யப்படும்.

21.11.2017 அன்று அவர் பணியிலிருந்து விடுபட்டு செல்லும்போது, அக்டோபர் 2017 வரையிலான காலத்தில் அவரிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட வரி மற்றும் நிலுவையாக உள்ள வரி பற்றிய சான்று ஒன்றை சம்பளம் வழங்கும் அலுவலர் வழங்க வேண்டும். இந்தச் சான்றின் அடிப்படையில், மீதமுள்ள வருமான வரி இவரது ஓய்வூதியத்திலிருந்து, ஓய்வூதியம் வழங்கும் அலுவலரால் பிடித்தம் செய்யப்படும்.

தவிர்க்க முடியாத நிர்வாகக் காரணங்களினால் இவரது ஈட்டாத விடுப்பு ஊதியத் தொகையை முன்கூட்டியே கணக்கிட முடியாதபோது, விடுப்பு ஊதியம் தவிர்த்து மற்ற இடங்களின் மீதான வரியைக் கணக்கிட்டுப் பிடித்தம் செய்யப்படும். பின்னர், விடுப்பு ஊதியம் கணக்கிடப்பட்டு வரி சீரமைக்கப்படும். அல்லது காலம் தாழ்ந்து விடுப்பு ஊதியம் வழங்கப்படுமானால், அப்போதே வரி பிடித்தம் செய்யப்படும். விடுப்பு  ஊதியம் மூன்று மாதங்களுக்குக் குறைவாகவும் இருக்கலாம்.

 மறுவேலைவாய்ப்பு

ஆசிரியர்களுக்கு மறுவேலை வாய்ப்பு (Re-Employment) என்ற சலுகை உண்டு. அதாவது, ஓர் ஆசிரியரின் ஓய்வு பெறும் நாள்  31.12.2017 என்று வைத்துக் கொள்வோம். மற்ற அரசு ஊழியர் களைப் போல் ஓய்வுபெற்ற அன்றே ஆசிரியர், பணியிலிருந்து விடுவிக்கப் பட்டுச் சென்றுவிடுவது கிடையாது.

ஓய்வு பெறும் மாதம் எதுவாக இருந்தாலும், ஆசிரியர்கள் அந்த கல்வியாண்டின் கடைசி நாள் வரை பணியில் தொடர அனுமதிக்கப் படுகிறார்கள். கல்வியாண்டு என்பது ஜூன் முதல் நாள் தொடங்கி மே 31 வரை ஆகும். இதன்படி மேற்சொன்ன ஆசிரியர் 31.12.2017 அன்று ஓய்வு பெற்றிருந்தாலும் 01.01.2018 முதல் 31.05.2018 முடிய பணியில் தொடர்ந்து நீடிப்பார். இது அவரது மறுவேலை வாய்ப்புக் காலம் ஆகும்.

மறுவேலைவாய்ப்புக் கால ஊதியம் என்பது, அவர் ஓய்வுபெற்ற கடைசி மாதமான 2017 டிசம்பரில் பெற்ற ஊதியத்திலிருந்து, 01.01.2018 முதல் அவர் பெறப்போகும் ஓய்வூதியத்தைக் கழித்தால் கிடைப்பது. இன்னும் சுருக்கமாகச் சொல்வதென்றால், ஒருவர் ஜனவரி 2018-ல் பெறப்போகும் மறுவேலைவாய்ப்பு ஊதியமும், ஜனவரி 2018-ல் பெற உள்ள ஓய்வூதியமும் சேர்த்துதான் டிசம்பர் 2017-க்கான அவரது ஊதியம் ஆகும். அதன்படி 2017-2018 நிதியாண்டுக்கான அந்த ஆசிரியரின் வருமான வரி, பின்வரும் இனங்களின் கூட்டுத் தொகைக்குக் கணக்கிடப்பட வேண்டும்.

1. மார்ச் 2017 முதல் டிசம்பர் 2017 வரை பெறும் ஊதியம், 2. ஜனவரி 2018 முதல் பிப்ரவரி 2018 வரை பெறப்போகும் மறுவேலைவாய்ப்பு ஊதியம், 3. ஜனவரி 2018 பிப்ரவரி 2018 ஆகிய இரு மாதங்களுக்குரிய ஓய்வூதியம், 4. ஓய்வு பெற்ற மறுநாளுக்குப்பின் அவர் பெறத்தக்க மூன்று மாத கால ஈட்டாத விடுப்பு ஊதியம். இவற்றுக்கான வருமான வரி மார்ச் 2017 முதல் பிப்ரவரி 2018 வரை சம்பளம் வழங்கும் அலுவலரால் பிடித்தம் செய்யப்படும்.

இவர்31.05.2018 வரைமறுவேலை வாய்ப்பில் - பணியில்  தொடர்வதால் 2018-2019-க்கான வருமான வரிக் கணக்கீடும் இதே சம்பளம் வழங்கும் அலுவலரால் கணக்கிடப்படக்கூடும். அது பின்கண்டவாறு இருக்கும்.

1. மார்ச் 2018 முதல் மே 2018 முடிய பெற உள்ள மறுவேலைவாய்ப்பு ஊதியம், 2. ஏப்ரல் 2018 முதல் பிப்ரவரி 2019 வரை பெறப்போகும் ஓய்வூதியம்.

குறிப்பு: மறுவேலைவாய்ப்பு காலத்தில் வழங்கப்படும் ஓய்வூதியத்துடன்  அகவிலைப்படி வழங்கப்படாது.  மறுவேலை வாய்ப்பு முடிந்து, ஓய்வூதியம் மட்டும் பெறும் ஜூன் 2018 முதல் ஓய்வூதியத்துடன்  அகவிலைப்படி + மருத்துவப்படி சேர்த்துத் தரப்படும். வரிசை எண் 1 + 2-ல் கண்ட தொகைக்கு வரியைக் கணக்கிட்டு, அதை 12 சம தவணைகளாக்கி மார்ச் 2018 முதல் மே 2018 வரை, சம்பளம் வழங்கும் அலுவலரே பிடித்தம் செய்துவிடுவார். ஜூன் 2018 முதல் இவரது வருமான வரிக் கணக்கீடு, இவர் ஓய்வூதியம் பெற தேர்வு செய்துள்ள ஓய்வூதியம் வழங்கும் அலுவலரால் மேற்கொள்ளப்பட்டு, பிடித்தம் செய்யப்படும்.


ஊதியம்  +  ஓய்வூதியம்  +  மறுவேலை வாய்ப்பு ஊதியம் + விடுப்பு ஊதியங்களை வருமான வரிக்குக் கணக்கிட்டு, அதை 12 தவணைகளில் பிடித்தம் செய்ய வேண்டும் என்பதும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறை. அரசு ஊழியர்கள் இந்த வரிக் கணக்கீடுகளைப் புரிந்து கொண்டால்,  வரி கட்டுவது சுமையாக இருக்காது.

20/5/17

+2,SSLC- பொதுத் தேர்வுகளில் தமிழ் வழியில் படித்து அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு



 பிளஸ் 2, எஸ்எஸ்எஸ்சி பொதுத் தேர்வுகளில் தமிழ் வழியில்படித்து அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் கூறினார். 


சென்னை தலைமைச் செய லகத்தில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகை யில் தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.26,913 கோடிஒதுக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 36,830 அரசுப் பள்ளிகளுக்கு ரூ.12 ஆயிரம் மதிப்பில் கட்டிடங் கள், வகுப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. சில பள்ளி களில் இன்னும் சிறு சிறு தேவை கள் உள்ளன. முன்னாள் மாணவர்கள், தொழி லதிபர்கள், வசதிபடைத்தவர்கள், தொண்டு நிறுவனத்தினர், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் தங்கள் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு தேவைப்படும் வசதிகளை செய்துகொடுக்க முன்வருமாறு அன்போடு வேண்டு கோள் விடுக்கிறேன். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப் படும் 14 வகையான நலத்திட்டங் களுக்கு ரூ.2,300 கோடி ஒதுக் கப்பட்டுள்ளது. மேல்நிலைக் கல்வியில் கடந்த 12 ஆண்டுகளாக பாடத்திட்டம் மாற்றப்படவில்லை. தமிழக மாணவர்களை தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு களுக்கு தயார்படுத்தும் வகை யில் பாடத்திட்டத்தை மாற்ற வேண்டியுள்ளது.

பாடத்திட்ட மாற்றம் குறித்து ஏற்கெனவே, முன்னாள் துணை வேந்தர்கள், தலைமைச் செயலா ளர் உள்ளிட்டோர் அடங்கிய ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. பாடத்திட்ட மாற்றம் குறித்தும், பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்தும் 2 நாட்களில் கொள்கைமுடிவு எடுக்கப்படும். பள்ளிக்கல்வித் துறையில் மிகப் பெரிய அளவில் சீரமைப்பு, மாற் றங்கள் கொண்டுவரப்படுகின்றன. அதேபோல, விளையாட்டுத் துறை யிலும் மிகப்பெரிய அளவில் மாற்றம் கொண்டுவர திட்டமிட்டுள் ளோம். மாநில, தேசிய அளவில் விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கான திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

பள்ளிகளில் யோகா, சாலை பாதுகாப்பு விதிகள், தேசப்பற்று தொடர்பான பயிற்சி வகுப்புகளும் கொண்டுவரப்பட உள்ளன. பிளஸ் 2, எஸ்எஸ்எல்சிபொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர் களுக்கு அரசு கல்வி உதவித் தொகை வழங்குகிறது. இனிமேல், தமிழ்வழியில் படித்து அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.உதவித்தொகை திட்டத்தில் அவர் களுக்கு முன்னுரிமை அளிக்கப் படும். இவ்வாறு அமைச்சர் செங் கோட்டையன் தெரிவித்தார்.

அஞ்சல் துறை தேர்வு ரத்து: இணையதளத்தில் அறிவிப்பு

முறைகேடு நடந்திருக்கலாம் எனப் புகார் தெரிவிக்கப்பட்ட தபால் துறை தேர்வு ரத்து செய்யப்படுவதாக, தமிழ்நாடு அஞ்சல் வட்ட இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அஞ்சல் வட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட தபால்காரர் மற்றும் மெயில் கார்டு பணிக்கான தேர்வு 2016 டிசம்பர் 11-ஆம் தேதி நடத்தப்பட்டது. மெட்ரிக் அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கல்வித் தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த எழுத்துத் தேர்வில் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் எழுதினர். பொது அறிவு, கணிதம், ஆங்கிலம், தமிழ் என நான்கு பிரிவுகளிலும் தலா 25 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம்பெற்றிருந்தன.

தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 14 ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டன. தேர்வு எழுதியவர்களின் பதிவு எண்ணைக் கொடுத்து மதிப்பெண் விவரங்களைப் பெறும் வகையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருந்தது.

மதுரையில் தேர்வு எழுதிய இளைஞர்கள் சிலர் தங்களது பதிவு எண்ணுக்கு முன்பு, பின்பு உள்ள எண்கள் என உத்தேசமாக சில எண்களைப் பதிவு செய்து தேர்வு முடிவைப் பார்த்தபோது அவர்களுக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. ஹரியாணா உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்த பலரும் தமிழில் 25-க்கு 24 மதிப்பெண்கள், சிலர் முழு மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். தமிழ் முழுமையான அறிமுகம் இல்லாத மாநிலத்தைச் சேர்ந்த பலரும், தமிழ் இலக்கணத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது.

இதையடுத்து மதுரை மாநகராட்சி சூழல் பூங்கா மற்றும் காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து, தபால் துறை நடத்திய தேர்வில் சந்தேகம் இருப்பதாகவும், உண்மையாகத் தேர்வுக்குத் தயாராகி வரும் இளைஞர்களின் வாய்ப்புகள் பறிபோவதாகவும் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவிடம் மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இத் தேர்வு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த நிலையில், 2016 டிசம்பர் 11-இல் நடத்திய தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அஞ்சல் வட்ட இணையதளத்தில் (www.dopchennai.in) அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞரான மதுரையைச் சேர்ந்த ஆர்.கருப்பசாமி கூறியதாவது:

போட்டித் தேர்வுகளின் மூலம் அரசுப் பணிக்குச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் கடுமையாகப் பயிற்சி எடுத்து வருகிறோம். தற்போது தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்தாலும், முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும். இதுபோன்ற முறைகேடுகள் எங்களது கனவுகளைத் தகர்த்து விடுகிறது. முறைகேடுகளில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் அதுகுறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இதன் மூலம் இனி வரும காலங்களில் இத்தகைய முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க முடியும் என்றார்.

மாணவர் எண்ணிக்கை 10 கீழ் குறைந்தாலும் பள்ளி மூடப்படாது: தொடக்கக் கல்வித்துறை

தொடக்கப் பள்ளிகளில் 10 க்கும் குறைவான மாணவர்கள் இருந்தாலும், அவற்றை மூடாமல் இருக்க 3 ஆண்டுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் 10 க்கும் குறைவான மாணவர்கள் இருந்தாலும், அவற்றை மூடாமல் இருக்க 3 ஆண்டுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகள் வருகை, ஆங்கிலவழிக் கல்வி மோகம் போன்ற காரணங்களால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது.

ஐந்து ஆண்டுகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் மாநிலம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டன. 2016 ஆக., 1 கணக்கெடுப்பின் படி பல ஆயிரம் பள்ளிகளில் 10 க்கும் குறைவான மாணவர்களே உள்ளன. அரசுக்கு அவற்றை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மூடிய பள்ளியை மீண்டும் திறப்பது கஷ்டம். இதனால் அப்பள்ளி மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் மாணவர்களை இடமாற்றினாலும் பள்ளியை மூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பள்ளிகளில் கிராம முக்கியஸ்தர்கள் மூலம் அதிக மாணவர்களை சேர்க்க 3 ஆண்டுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சேருவதற்கு வாய்ப்பே இல்லாத பள்ளிகள் மட்டும் மூடப்படும் என, தொடக்கக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 தேர்ச்சி குறித்து விளம்பரம் செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: பள்ளிக் கல்வித்துறை

அரசாணையை மீறி பிளஸ் 2 தேர்ச்சி குறித்து விளம்பரம் செய்த தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பள்ளிக் கல்வித்துறையின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பொதுத்தேர்வுகளில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான தரப் பட்டியல் வெளியிடும் முறை கைவிடப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டது.


மேலும் தேர்ச்சி தொடர்பாக பள்ளிகள் சாதனைப் பட்டியலை வெளியிடக்கூடாது என்றும் கூறப்பட்டது. ஆனால் ஏராளமான தனியார் பள்ளிகள் நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் விளம்பரங்கள் கொடுத்து வருகின்றன.இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன்தனியார் தொலைக்காட்சியிடம் பேசும்போது,''அரசாணையை மீறி ப்ளஸ் 2 தேர்ச்சி விளம்பரம் செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

முதற்கட்டமாக அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.அரசாணையை மீறியது ஏன் என்று 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். அதிகபட்ச தண்டனையாக சம்பந்தப்பட்ட பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். விளம்பரங்கள் அளித்த அனைத்து பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறியுள்ளார்.

பாடவாரியாக ‘சென்டம்’ பெற்றவர்கள் எத்தனை பேர்?

இன்று வெளியிடப்பட்டுள்ள 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளின்படி, பாடவாரியாக 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை விபரம்:

மொழிப்பாடம்: 69 பேர்
ஆங்கிலம்: 0 
கணிதம்: 13,759 பேர்
அறிவியல்: 17,481 பேர்
சமூக அறிவியல்: 61,115 பேர்

2015-2017 ஆண்டு மதிப்பீடு 

பாடப்பிரிவு 2015 2016 2017
மொழிப்பாடம் 586 73 69
ஆங்கிலம் 644 51 0
கணிதம் 27,134 18,754 13,759
அறிவியல் 1,15,853 18,642 17,481
சமூக அறிவியல் 51,629 39,398 61,115

தேர்ச்சி குறைந்த பள்ளிகள்; செயல் திறன் அறிக்கை தயாரிக்க உத்தரவு

பிளஸ் 2 தேர்வில் குறைந்த தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், செயல்திறன் அறிக்கையை தாக்கல் செய்ய, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், 57 ஆயிரம் பள்ளிகள் செயல்படுகின்றன. அரசு மற்றும் தனியார் தரப்பில், 6,700 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. ஆண்டுதோறும், பள்ளிக்கல்வி வளர்ச்சிக்காக, 24 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 


ஆனால், பெரும்பாலான அரசு பள்ளிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளும், பிளஸ் 2 பொது தேர்வில் குறைந்த தேர்ச்சியை பெற்றுள்ளன. மாணவர்களின் சராசரி மதிப்பெண்ணும் குறைவாகவே உள்ளது. 

நுாற்றுக்கு நுாறு என்ற, ’சென்டம்’ எடுத்த மாணவர்களின், எண்ணிக்கையும் சரிந்துள்ளது. அரசின் நிதி செலவில் இயங்கும் பள்ளிகள், அவற்றை முறையாக பயன்படுத்தியதா; ஆசிரியர்கள் ஒழுங்காக பாடம் நடத்தினரா; மதிப்பெண் குறைவு, தேர்ச்சி சரிவு ஏன்; தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும், என, செயல்திறன் அறிக்கை தர, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. 

இந்த அறிக்கையின்படி, புதிய செயல் திட்டம் தயாரிக்கப்படும். மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கவும், மாணவர்கள், தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் பங்கு கொள்ளும் வகையில், கற்பித்தலை மாற்ற பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆய்வு கூட்டம், இன்று சென்னையில் நடக்கிறது.

மாவட்டம் வாரியாக தேர்ச்சி விகிதம்

98.5% பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. 
98.17% எடுத்து கன்னியாகுமரி  இரண்டாவது இடத்திலும் 
98.16% எடுத்து ராமநாதபுரம்  மூன்றாவது இடத்திலும் உள்ளது. 
97.97% எடுத்து ஈரோடு நான்காவது இடத்திலும், 
97.16% எடுத்து தூத்துக்குடி ஐந்தாவது இடத்திலும், 
97.10% எடுத்து தேனி  மாவட்டம் 6 வது இடத்திலும், 
97.06% எடுத்து திருப்பூர் ஏழாவது இடத்திலும் உள்ளது. 
97.02% எடுத்து சிவங்கங்கை எட்டாவது  இடத்தில் உள்ளது. 
96.98% எடுத் து திருச்சி 9 வது இடத்தில் உள்ளது. 
96.54 % எடுத்து நாமக்கல் 10 வது  இடத்தில் உள்ளது. 
96.42% எடுத்து கோவை 11 வது இடத்தில் உள்ளது. 
96.35% எடுத்து நெல்லை 12 வது இடத்தில் உள்ளது. 
96.16% எடுத்து புதுகோட்டை 13 வது இடத்தில் உள்ளது.
 புதுக்கோட்டை மாவட்டம் 14வது இடம் - 96.16% தேர்ச்சி
 தஞ்சாவூர் மாவட்டம் 15வது இடம் - 95.21% தேர்ச்சி
 கரூர் மாவட்டம் 16வது இடம் - 95.20% தேர்ச்சி
 ஊட்டி மாவட்டம் 17வது இடம் - 95.09% தேர்ச்சி
 பெரம்பலூர் மாவட்டம் 18வது இடம் - 94.98% தேர்ச்சி
 மதுரை மாவட்டம் 19வது இடம் - 94.63% தேர்ச்சி
 திண்டுக்கல் மாவட்டம் 20வது இடம் - 94.44 % தேர்ச்சி
 தருமபுரி மாவட்டம் 21வது இடம் - 94.25% தேர்ச்சி
 அரியலூர் மாவட்டம் 22வது இடம் - 93.33% தேர்ச்சி
 கிருஷ்ணகிரி மாவட்டம் 23வது இடம் - 93.12% தேர்ச்சி
 நீலகிரி மாவட்டம் 24வது இடம் - 92.06% தேர்ச்சி
 சென்னை மாவட்டம் 25வது இடம் - 91.86 % தேர்ச்சி
 விழுப்புரம் மாவட்டம் 26வது இடம் - 91.81% தேர்ச்சி
 திருவள்ளூர் மாவட்டம் 27வது இடம் - 91.65% தேர்ச்சி
 திருவாரூர் மாவட்டம் 28வது இடம் - 91.47% தேர்ச்சி
 நாகை மாவட்டம் 29வது இடம் - 91.40% தேர்ச்சி
 திருவண்ணாமலை மாவட்டம் 30வது இடம் - 91.26% தேர்ச்சி
 வேலூர் மாவட்டம் 31வது இடம் - 88.91% தேர்ச்சி
 காஞ்சிபுரம் மாவட்டம் 32வது இடம் - 88.85% தேர்ச்சி
 கடலூர் மாவட்டம் 33வது இடம் - 88.77% தேர்ச்சி

தமிழகத்தில் உள்ள கலந்தாய்வு மற்றும் மாணவர்கள் சேர்க்கை போன்ற அவசர பணிகாக மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு 20,21.05.2017 அன்று வேலை நாட்களாக அறிவிப்பு

1 முதல் 10ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் பாடம்..அரசுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை ...

Image may contain: 1 person

19/5/17

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிலை பற்றி தொடக்க கல்வித்துறையின் பணிவிதிகளில் திருத்தத்தினை செய்ய அரசுக்கு உத்தரவு..*தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு*

28.04.2017 அன்று பட்டதாரி ஆசிரியர்கள் நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியராக பதவிஉயர்வு தடையாணை பெற்றதை ஊடகத்தில் நமது தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வெளியிட்டு 02.05.2017 அன்று பள்ளிக்கல்வி அமைச்சர்
தலைமையிலான ஆசிரியர் பிரதிநிதிகள் கூட்டத்தில் அனைவரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம்.*_

✍ *பின் 05.05.2017 அன்று அத்தடையாணை மற்றும் AFFIDAVIT இரண்டினை பெற்று தொடக்ககல்வி இணை இயக்குனர் , பள்ளிக்கல்வி அமைச்சர் ஆகியோரிடம் வழங்கி தடையாணை நீக்க நடவடிக்கை எடுக்க  செய்தோம்.*

✍ _*தொடக்க கல்வி இணைஇயக்குனர் அவர்களும்  17.05.2017 அன்று வழக்குரிய பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு  தடையாணை நீக்குவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டது என்றும் நீதிமன்றத்தில் தடையாணை ரத்து செய்யப்பட்டுவிடும் என நமது மாநில பொறுப்பாளர்களிடம் 15.05.2017 அன்று கூறினார்.*_

✍ _*16.05.2016 அன்று நமது தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில தலைவர் திரு ஆனந்த கணேஷ் அவர்கள் தொடக்க கல்வி இயக்குனர் அவர்களை சந்தித்து வழக்கின் நிலை பற்றி தெரிவித்த போதும் இயக்குனர் அவர்கள் அரசு தரப்பில் தடையாணை விலக்க பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 17.05.2017 அன்று வழக்கு விசாரணைக்கு வரும்போது தடையாணை விலக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.*_

✍  *18.06.2017 இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது அரசின் பதில்மனு ஏற்று உயர்நீதிமன்ற கிளை கீழ்கண்ட உத்தரவினை பிறப்பித்துள்ளார்.*

1. மதுரை மாவட்டம் திருபரங்குன்றம் ஒன்றியம் தவிர மற்ற இடங்களில் கலந்தாய்வுக்கு நடைபெற தடையில்லை.

2. திருப்பரங்குன்ற ஆசிரியர் தொடத்துள்ள இந்த வழக்கு தனிவழக்காக தொடர்ந்து நடக்கும்.

3. பட்டதாரி ஆசிரியர்களுக்கான  பணி நிலை பற்றி தொடக்க கல்வித்துறையின் பணிவிதிகளில்  திருத்தத்தினை செய்ய அரசுக்கு உத்தரவு..

*தொடக்க கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி, பாதுகாப்பில் என்றென்றும் முனைந்து செயல்படும் இயக்கம் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு.*

தொடர் முயற்சி செய்த மாநில தலைவர் திரு. ஆனந்தகணேஷ்.
மாநில பொதுச்செயலாளர்
முனைவர். பேட்ரிக் ரெய்மாண்ட்.
மாநில பொருளாளர்.
திரு.செல்லையா

அனைவருக்கும்


பாராட்டுக்கள்.

FLASH NEWS:தொடக்கக் கல்வி துறை நடுநிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்வுக்கு வழங்கப்பட்டிருந்த தடையை நீங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

தொடக்கக் கல்வி துறையின் சார்பில் நடுநிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க கோரிய வழக்கில் மதுரை உயர்நீதி மன்றம் தடையை நீக்கியது.

அனைத்து சங்கங்களும் தடையை நீக்கக்கோரி வைத்த கோரிக்கையினை

தொடக்கக் கல்வி துறையின் சார்ப்பில்
தடையை நீக்கக்கோரி வழக்கு போடப்பட்டிருந்தது. இன்று மதியம் இவ்வழக்கு மதுரை உயர்நீதி மன்ற கிளையில் எடுத்துக்கொள்ளப்பட்டு

தடையை விலக்கியது.

பணிநிரவல் ஆசிரியர்களின் விவரம் மற்றும் காலிப்பணியிடங்களின் விவரம் கீழ்கண்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவு

பணிநிரவல் ஆசிரியர்களின் விவரம் மற்றும்  காலிப்பணியிடங்களின்
விவரங்களை http://www.deetn.com என்ற  இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தொடக்கக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது

TET - சிறுபான்மை பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயம் இல்லை - பள்ளிக்கல்வித்துறை | RTI

TET - அனைத்துவகை பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வு கட்டாயம் - NCTED | RTI

அனைவருக்கும் கட்டாயக் கல்வி சட்டம் - 25% இட ஒதுக்கீட்டில் சேர்க்க 26.05.2017 கால அவகாசம் நீட்டிப்பு.

மாணவர்கள் குறைந்தாலும் பள்ளிக்கு 3 ஆண்டு 'கிரேஸ்'

ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் 10 க்கும் குறைவான மாணவர்கள் இருந்தாலும், அவற்றை மூடாமல் இருக்க 3
ஆண்டுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகள் வருகை, ஆங்கிலவழிக் கல்வி மோகம் போன்ற காரணங்களால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது.
ஐந்து ஆண்டுகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் மாநிலம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டன. 2016 ஆக., 1 கணக்கெடுப்பின் படி பல ஆயிரம் பள்ளிகளில் 10 க்கும் குறைவான மாணவர்களே உள்ளன. அரசுக்கு அவற்றை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மூடிய பள்ளியை மீண்டும் திறப்பது கஷ்டம். இதனால் அப்பள்ளி மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் மாணவர்களை இடமாற்றினாலும் பள்ளியை மூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பள்ளிகளில் கிராம முக்கியஸ்தர்கள் மூலம் அதிக மாணவர்களை சேர்க்க 3 ஆண்டுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சேருவதற்கு வாய்ப்பே இல்லாத பள்ளிகள் மட்டும் மூடப்படும் என, தொடக்கக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் ஆசிரியர்களுக்கு அழைப்பு - ஆசிரியர் அதிருப்தி

தொடக்க கல்வி மாணவருக்கான நோட்டு, புத்தகம் பெற அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர் சாக்கு பைகளுடன் 'நோடல்'
அலுவலகம் வரவேண்டும்,' என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தாண்டு முதல் இலவச நோட்டு, புத்தகங்கள் வழங்குவதில் ஆசிரியர்களை அலைக்கழிக்காமல் நேரடியாக பள்ளிகளுக்கே வழங்கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதன்படி தற்போது சென்னையில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கு இலவச நோட்டு, புத்தகங்கள் கல்வித்துறை சார்பில் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. மதுரையில் 15 ஒன்றியங்களுக்கு உட்பட்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களும், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோட்டுக்களும் வந்து இறங்கி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை வைக்க போதிய இடவசதி இல்லாததால் பல உதவி பெறும் பள்ளிகளில் இறக்கி வைக்கப்பட்டுள்ளன.

தற்போது 'நோடல்' மையங்களில் இருந்து சம்பந்தப்பட்ட உதவி தொடக்க கல்வி அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. பள்ளி திறக்கும் நாளில் அனைத்து மாணவர்கள் கையிலும் புத்தகம், நோட்டு இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், 'புத்தகங்கள் எடுத்து செல்ல தலைமையாசிரியர்கள் சம்பந்தப்பட்ட ஏ.இ.ஓ., அலுவலக 'நோடல்' மையங்களுக்கு மறக்காமல் சாக்கு பைகளுடன் வர வேண்டும்,' என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து தொடக்க கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாவட்டத்தில் 15 ஏ.இ.ஓ., அலுவலகங்களுக்கும் தனித்தனியே 'நோடல்' மையங்கள் உள்ளன. ஏ.இ.ஓ.,க்களுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு புத்தகம், நோட்டுக்கள் இங்கு தான் உள்ளன. ஓரிரு நாங்களில் இவை பள்ளிகளுக்கே கொண்டு செல்லப்படும். ஒரு பள்ளிக்கு எத்தனை நோட்டு, புத்தகம் தேவை குறித்து அலுவலகம் வந்து தலைமையாசிரியர் தெரிவிக்க வேண்டும். அவர்கள் வரும்போது சாக்கு பைகளுடன் வந்து தேவையான புத்தகம், நோட்டுக்களை பெற்று பள்ளி முகவரியை எழுதி வைத்தால் அந்தந்த பள்ளிகளுக்கே கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்படும், என்றார்.

ஆசிரியர் அதிருப்தி
ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: புத்தகம், நோட்டுக்களை சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களே ஆட்டோ அல்லது வேன் மூலம் பள்ளிகளுக்கு எடுத்து சென்றனர். ஆனால் இந்தாண்டு முதல் கல்வி அலுவலர்கள் பள்ளிகளுக்கு புத்தகம், நோட்டுக்களை கொண்டு செல்ல ஏற்பாடு செய்கின்றனர்.


ஆனால் உதவிபெறும் பள்ளிகளில், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் சிலர் 'ஆப் தி ரெக்கார்டு' என கூறி ஆசிரியர்களையே புத்தகம், நோட்டுக்களை எடுத்து செல்ல வற்புறுத்துகின்றனர் அல்லது அதற்காகும் செலவை பள்ளி நிர்வாகங்கள் தலையில் கட்ட பேசி வருகின்றனர். எனவே இப்பணிகளை கலெக்டர் வீரராகவராவ் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்," என்றனர்.

ரேஷன் கார்டில் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்திருக்க வேண்டும்....ஆனால்..ரேஷன் கடையில் பதிவு செய்ய முடியாது..மேலும்தெரிந்து கொள்ள .....

தெரிந்து கொள்ள .....

ரேஷன் கார்டில் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்திருக்க
வேண்டும்..ஆனால்..ரேஷன் கடையில் பதிவு செய்ய முடியாது...

மண்டல அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என கடைக்காரர் கூறுவார்...ஆனால் அது தேவையில்லை...1967 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு ...தமிழுக்கு ஒன்றை அழுத்தவும் அடுத்து குடும்ப அட்டை வைத்திருப்பவரா என்பதற்கு 2ஐ அழுத்தினால்....சேவை அதிகாரி உங்களுடன் பேசுவார்..

அவர்உங்கள் ரேஷன் கார்டில் மேலே உள்ள எண்ணை கேட்பார்...எ.கா. 005/w/ 33657778 என்ற எண்ணை சொல்லவும்..

பின்னர் குடும்ப அட்டையில் உள்ள ஒருவரின் ஆதார் எண்ணை கேட்பார் ..அதையும் தெரிவிக்க வேண்டும்... நீங்கள் போன் செய்வதற்கு முன் ரேஷன் கார்டையும், ஆதார் கார்டையும் கையில் வைத்திருக்க வேண்டும்...

இரண்டு கேள்விகளுக்கும் பதில் சொன்னவுடன் நீங்கள் விரும்பிய மொபைல் நம்பரை பதிவு செய்யலாம்..அல்லது நம்பரை மாற்றலாம் ...அடுத்த 2 நிமிடங்களில் உங்கள் மொபைல் எண் ஆக்டிவேட் ஆகிவிடும்..

இதற்காக வேகாத வெயிலில் மண்டல அலுவலகம் சென்று நிற்க வேண்டாம்....இதை தெரிந்தவர்களுக்கு பகிருங்கள்..

இதேபோல, ரேஷன் கடையில் நீங்கள் ஆதார் அட்டை மட்டும்தான் பதிவு செய்திருப்பீர்கள்.....ஆனால் போட்டோ கொடுத்திருக்க மாட்டீர்கள்....அதனால் உங்களுக்கு ஸ்மார் கார்டு வராது..

போட்டோவை மொபைல் ஆப் மூலமாகவோ....அல்லது TNEPDS என்ற இணைதளம் மூலமாகவோ மட்டுமே அப்லோடு செய்ய முடியும்...அதன் பிறகுதான் ஸ்மார்ட் கார்டு பிரிண்ட் செய்வார்கள்...

தெரியாதவர்களுக்கு இந்த மெசேஜை பகிரவும்...

புதிதாகவும் ஸ்மார்ட் கார்டு ஆன் லைனில் அப்ளை செய்ய முடியும்...நன்றி


சந்தேகங்கள் இருந்தால் தொடர்பு கொள்ளவும்...99419 61802

வங்கியை போல் ஒரே படிவத்தில் பி.எப்., பணத்தை எடுக்கலாம்

வங்கிகளைப் போல், ஒரே படிவத்தை பூர்த்தி செய்து, பி.எப்., சந்தாதாரர்கள்
பணத்தை எடுத்துக் கொள்ள, புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கோவை மண்டல மத்திய, பி.எப்., கூடுதல் கமிஷனர் வர்கீஸ் கூறியதாவது:
வருங்கால வைப்பு நிதி எனும், பி.எப்., திட்டத்தில், நாடு முழுவதும், 17 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். முன்பணம், திரும்பப் பெறுதல், பென்ஷன் என மூன்று பிரிவுகளில், சந்தாதாரர்கள், தங்கள் கணக்கில் உள்ள பணத்தை எடுத்துக் கொள்ளலாம். முன், பலவகை படிவங்கள் நடைமுறையில் இருந்தன. தற்போது, ஒரே படிவத்தில் மேற்குறிப்பிட்ட, மூன்று பிரிவுகளிலும் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். பி.எப்., அலுவலக உதவி மையத்தில், படிவத்தை பெற்று, பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

தங்களின் வங்கி பாஸ்புக் முன்பக்க நகல் அல்லது ரத்து செய்யப்பட்ட காசோலை சமர்ப்பிக்க வேண்டும். இந்த மூன்று பிரிவுகளில், எந்த பிரிவுக்கு பணம் கேட்டு விண்ணப்பித்துள்ளனரோ, 20 நாட்களில், அவர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும். சந்தாதாரர்கள், சிரமமின்றி தங்களின் பணத்தை எடுத்துக் கொள்ள உதவுவதே, இத்திட்டத்தின் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.

தடை நீக்கி நீதிமன்றம் உத்தரவு : தொடக்க கல்வி கவுன்சலிங் திட்டமிட்டபடி நடக்கும் : கல்வித்துறை அறிவிப்பு

அரசுதொடக்க, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு
பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கவுன்சலிங் இன்று தொடங்கி 31ம் தேதி வரை நடக்கிறது.

இந்தகவுன்சலிங்கில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பதவி உயர்வு தொடர்பாக சில ஆசிரியர் சங்கங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 6 வாரத்துக்கு தடை ஆணை பெற்றனர்.

இந்ததடையை நீக்க வேண்டும் என்று தொடக்க கல்வித்துறை முறையீடு செய்தது. மேலும், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கமும் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் உயர் நீதி மன்றம் தடை ஆணையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, 30 மற்றும் 31ம் தேதிகளில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சலிங் திட்டமிட்டபடி நடக்கும் என்று தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இன்று 10ம் வகுப்பு தேர்வு 'ரிசல்ட்' : பள்ளி அளவிலும் 'ரேங்க்' கிடையாது

தமிழகத்தில், 10.38 லட்சம் பேர் பங்கேற்ற, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. மதிப்பெண் பட்டியல், மாணவர்களின் மொபைல்போனுக்கு எஸ்.எம்.எஸ்., ஆக வரும். பத்தாம் வகுப்பு 
மாணவர்களுக்கு, மார்ச்சில் நடந்த பொதுத் தேர்வில், 10.38 லட்சம் பேர் பங்கேற்றனர். இதன் முடிவுகள், இன்று காலை, 10:00 மணிக்கு, வெளியாகின்றன. தேர்வு முடிவு களை, www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in போன்ற இணையதளங்களில், பதிவு எண், பிறந்த தேதி, மாதம், ஆண்டை குறிப்பிட்டு, தெரிந்து கொள்ளலாம்.
முடிவுகள் வெளியான சில நிமிடங்களில், மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களின் மொபைல் போன் எண்ணுக்கு, மதிப்பெண் விபரம், எஸ்.எம்.எஸ்., ஆக வரும். மாவட்ட கலெக்டர் அலுவலக, தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நுாலகங்களிலும், தேர்வு முடிவுகளை கட்டணமின்றி பார்க்கலாம். இன்றைய தேர்வு முடிவில், மாநில, மாவட்ட, 'ரேங்க்' பட்டியல் வெளியிடப்படாது. அதேபோல், பள்ளிகளும், மாணவர்களுக்கு, 'ரேங்க்' போடக்கூடாது என, எச்சரிக்கப்பட்டுள்ளது.
'104'ல் சிறப்பு ஆலோசனை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாவதால், '104' மருத்துவ சேவை மையத்தில், மாணவர், பெற்றோருக்கு சிறப்பு உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. இதையொட்டி, '௧௦௪' மருத்துவ தகவல் மையத்தில், மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு, சிறப்பு மனநல ஆலோசனைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என்பதாலும், தோல்வி காரணமாகவும், மன அழுத்தத்தால், தவறான முடிவுகளை, மாணவர்கள் எடுத்து விடுகின்றனர். இதை தவிக்கவே, '௧௦௪' சேவை மையத்தில், சிறப்பு மனநல ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாணவர்கள் மட்டுமின்றி, பெற்றோரும் ஆலோசனை பெறலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
25ல் மதிப்பெண் சான்றிதழ் : பத்தாம் வகுப்பு தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, தேர்வுத்துறையின், www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், வரும், 25ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம். பள்ளிகளிலும், அன்றே சான்றிதழ் கிடைக்கும். தேர்வு முடிவில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காதோர், மறுகூட்டல் தேவைப்பட்டால், இன்று முதல், வரும், 22 மாலை, 5:45 மணி வரை, பள்ளிகளிலும்; தனித்தேர்வர்கள், தேர்வு மையங்களிலும்
விண்ணப்பிக்கலாம்.

ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் 10 க்கும் குறைவான மாணவர்கள் இருந்தாலும், அவற்றை மூடாமல் இருக்க 3 ஆண்டுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது

ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் 10 க்கும் குறைவான மாணவர்கள் இருந்தாலும், அவற்றை மூடாமல் இருக்க 3
ஆண்டுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகள் வருகை, ஆங்கிலவழிக் கல்வி மோகம் போன்ற காரணங்களால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது.

ஐந்து ஆண்டுகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் மாநிலம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டன. 2016 ஆக., 1 கணக்கெடுப்பின் படி பல ஆயிரம் பள்ளிகளில் 10 க்கும் குறைவான மாணவர்களே உள்ளன. அரசுக்கு அவற்றை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மூடிய பள்ளியை மீண்டும் திறப்பது கஷ்டம். இதனால் அப்பள்ளி மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் மாணவர்களை இடமாற்றினாலும் பள்ளியை மூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பள்ளிகளில் கிராம முக்கியஸ்தர்கள் மூலம் அதிக மாணவர்களை சேர்க்க 3 ஆண்டுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சேருவதற்கு வாய்ப்பே இல்லாத பள்ளிகள் மட்டும் மூடப்படும் என, தொடக்கக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும் பிளஸ் 2 செல்ல முடியும்!

பிளஸ் 1 பொதுத் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டாலும், அவர்கள் பிளஸ் 2 வகுப்புக்கு செல்ல முடியும் என தமிழக பள்ளிக் கல்வி சீரமைப்புக் குழு வல்லுநர்கள் தெரிவித்தனர். புதிய சலுகை: பத்தாம் வகுப்பு பொதுத்
தேர்வைப் போன்று, பிளஸ் 1 வகுப்புக்கும் நிகழாண்டு (2017-18) முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் புதன்கிழமை (மே 17) அறிவித்தார்.
எனினும், பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள்கூட, பிளஸ் 2 வகுப்புக்குச் செல்லலாம் என்ற முடிவை தமிழக அரசு விரைவில் அறிவிக்க உள்ளது. இதுதொடர்பாக தமிழக கல்வி சீரமைப்புக் குழுவைச் சேர்ந்த வல்லுநர்கள் சிலர் மேலும் கூறியது: தமிழகத்தில் ஆண்டுதோறும் பிளஸ் 1 தேர்வை எழுதும் சுமார் 9 லட்சம் மாணவர்களில், 50,000 முதல் 55,000 மாணவர்கள் வரையில் தேர்ச்சி பெறாத நிலை உள்ளது.
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் எண்ணிக்கை அதிகம். கல்லூரியைப் போன்று... பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், தொடர்ந்து பிளஸ் 2 வகுப்பில் அனுமதிக்கப்பட்டாலும்கூட, கல்லூரிகளைப் போன்று தேர்ச்சி அடையாத பாடங்களுக்கு ஜூன், செப்டம்பர் மாதங்களில் தேர்வு எழுதுவது அவசியமாகும்.
அக மதிப்பீட்டு மதிப்பெண்: தற்போது அறிமுகப்படுத்தப்படவுள்ள பிளஸ் 1 பொதுத் தேர்வில் வேதியியல், வணிகவியல் உள்ளிட்ட அனைத்து பிரதான பாடங்களுக்கும் 10 சதவீத அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் வழங்கப்படவுள்ளன. இந்த மதிப்பெண்கள் செய்முறைப் பயிற்சி உள்ள பாடங்களுக்கும் பொருந்தும். இதன் மூலம் மாணவர்கள் பாடங்கள் குறித்த கூடுதல் திறனறிவைப் பெறுவதுடன், பிளஸ் 1 வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறையும்.

போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள... ஜேஇஇ, நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை பிளஸ் 2 முடித்த மாணவர்கள் எழுதும் நிலையில், பிளஸ் 1 பாடத் திட்டங்களின் அடிப்படையில்தான் அவற்றில் பெரும்பாலான கேள்விகள் அமைவதை கடந்த சில ஆண்டுகளாக கல்வியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் நிலையில் மாணவர்களைத் தயார்படுத்தவும், பி.இ. படிப்புகளில் சேரும் நிலையில் கணிதம் உள்ளிட்ட பாடங்களில் மாணவர்கள் தேர்ச்சி அடையாமல் இருப்பதைத் தவிர்க்கவுமே பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 94.4 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி-தமிழில் 69 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள்

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்
வெளியிடப்படப்பட்டன; 94.4 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி

96.2% மாணவிகள் தேர்ச்சி

92.5% மாணவர்கள் தேர்ச்சி


*கடந்த ஆண்டைவிட தமிழகத்தில் தேர்ச்சி விகிதம் 0.8 சதவீதம் அதிகரிப்பு*


ரேங்க் முறை இல்லாமல் முதன்முறையாக முடிவுகள் வெளியீடு   


13, 500 பேர் கணக்கில் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர்   


10th Result -2017 :விருதுநகர் மாவட்டம் முதலிடம்
விருதுநகர் மாவட்டம் 98.55% பெற்று முதலிடம் பெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் இரண்டாவது இடம்

கடலூர் மாவட்டம் 84% பெற்று கடைசி இடம் பெற்றது.


தமிழில் 69 பேர்நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள்     

18/5/17

10ம் வகுப்பு தேர்வில் 'ரேங்க்' அறிவிக்க தடை

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு, நாளை மறுநாள் வெளியாகும் நிலையில், 'ரேங்க் அறிவிக்க கூடாது' என, பள்ளிகளுக்கு, கல்வித்துறை எச்சரித்துள்ளது. பிளஸ் 2 தேர்வில், பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த, 'ரேங்க்' முறை, இந்த ஆண்டு அதிரடியாக ஒழிக்கப்பட்டது. இதற்காக, பள்ளிக்கல்வி அமைச்சர், செயலர் மற்றும் இயக்குனருக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளன. தனியார் பள்ளிகளும், தங்கள் பள்ளிகளின், 'டாப்பர்ஸ்' பட்டியலை வெளியிடவில்லை.

இந்நிலையில், 10ம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகளை, பள்ளிக்கல்வித் துறை, நாளை மறுநாள் வெளியிடுகிறது. இதிலும், மாநில, மாவட்ட அளவில், 'ரேங்க்' பட்டியல் முறை கிடையாது என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சில பள்ளிகள், அதிகபட்ச மதிப்பெண் பெற்ற மாணவர்களை, 'டாப்பர்ஸ்' ஆக அறிவிக்க, முடிவு செய்துள்ளன. இதற்கு, தமிழக பள்ளிக்கல்வித் துறை தடை விதித்துள்ளது. மெட்ரிக் பள்ளி இயக்ககம் அனுப்பிய சுற்றறிக்கையில், 'எந்த தனியார் பள்ளியும், 10ம் வகுப்பில் தேர்ச்சி பெறும், தங்கள் மாணவர்களுக்கு, முதல் மூன்று, 'ரேங்க்' வைத்து, அவர்களின் பட்டியலை பிரபலப்படுத்தக் கூடாது; அரசின் அறிவிப்புக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசு திடீர் உத்தரவு சித்தா, ஆயுர்வேத படிப்புக்கும் அடுத்த ஆண்டு நீட் கட்டாயம்

எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ பட்டப்படிப்பிற்கு ‘நீட்’ தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இந்நிலையில் சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட இயற்ைக மருத்துவ படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு நடத்த வேண்டும் என்று ஆயுஸ் எனப்படும் மத்திய ஆயுர்வேதா, யோகா, நேச்சுரோபதி, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தாண்டு சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பில் ஆயுஸ் நடத்தும் பட்டப்படிப்புகள் சேர்க்கப்படவில்லை. மருத்துவக் கல்வியின் தரத்தை கருத்தில் கொண்டு ஆயுஸ் வழங்கும் மருத்துவ பட்டப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு அடிப்படையில் ஏற்கனவே உள்ள இன சுழற்சியின் படி மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். எனினும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நடைமுறை சிக்கல்கள் உள்ளதால் இந்த ஆண்டு ஆயுஸ் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் அந்தந்த மாநில அரசே பொது நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடத்தலாம்.

அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையிலேயே ஆயுஸ் வழங்கும் அனைத்து பட்டப்படிப்புகளுக்கும் மாணவர்களை சேர்க்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு கடந்த மாதம் 26ம் தேதியே அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை பாளையங்கோட்டை, சென்னையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. நாகர்கோவிலில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி உள்ளது. இதுகுறித்து ஆலோசனை நடத்த சித்தா, ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி முதல்வர்களின் கூட்டம் சென்னையில் 22ம் தேதி நடக்கிறது. அந்த கூட்டத்தில் இந்த உத்தரவு குறித்து விவாதிக்கப்படுகிறது.

பொறியியல் கல்லூரிகளுக்கும் 'நீட்' : மத்திய அரசு ஆலோசனை

மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லுாரிகளுக்கு, நாடு முழுவதும் ஒரே பொது நுழைவுத் தேர்வான, 'நீட்' கொண்டு வரப்பட்டதைபோல், பொறியியல் கல்லுாரிகளுக்கும் கொண்டு வர, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை, 'நீட்' எனப்படும் பொது நுழைவுத் தேர்வு மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டு இந்த நுழைவுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது.

தற்போது நாடு முழுவதும், 3,300க்கும் மேற்பட்ட அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில் ஒவ்வொரு ஆண்டும், 16 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். 

நீட் பாணியில், பொறியியல் கல்லுாரிகளுக்கும், பொது நுழைவுத் தேர்வு நடத்த, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஏற்கனவே ஒப்புதல் அளித்துஉள்ளது. இதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, மூன்றாண்டுகளை நிறைவு செய்வது குறித்து, மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:

நீட் தேர்வு என்பது, நுழைவுத் தேர்வை வெற்றிகரமாக நடத்தி, அதன் முடிவுகளை வெளியிடுவதுடன் முடிவடையாது. கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை எவ்வாறு நடக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். மாணவர்களின் திறமை வெல்கிறதா, பணம் வெல்கிறதா என்பதை, இந்த நுழைவுத் தேர்வு முடிவு செய்யும்.இதுபோலவே, பொறியியல் கல்லுாரிகளிலும், திறமையுள்ள மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், பொது நுழைவுத் தேர்வு கொண்டு வர, ஏற்கனவே கொள்கை அளவில் தீர்மானித்து, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இருப்பினும், மருத்துவக் கல்வியில் மாணவர் சேர்க்கை முடிவடையும் வரை காத்திருக்க உள்ளோம். வரும், ஜூலைக்கு பிறகு, பொறியியல் கல்விக்கான நுழைவுத் தேர்வு குறித்து முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

பிளஸ் 2 'மார்க் ஷீட்' பள்ளிகளில் கிடைக்கும்

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், இன்று முதல், பள்ளிகளில் வழங்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்வு முடிவு, 12ல் வெளியானது. நேற்று முன்தினம் முதல், தேர்வுத்துறையின், www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வெளியிடப்பட்டது.

இன்று முதல், மாணவர்களுக்கு அவர்களின் பள்ளிகளிலும், தனித் தேர்வர்களுக்கு, தேர்வு மையங்களிலும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது

இணைய உலகை அச்சுறுத்தும் ‘ரான்சம்வேர்’ வைரஸ்: செய்ய வேண்டியது, செய்யக்கூடாதது என்ன?

சமீபத்தில் உலகம் முழுவதும் மருத்துவமனை மற்றும் தொழிற்சாலை சர்வர்களை பதம்பார்த்துள்ள ‘ரான்சம்வேர்’ வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழி முறைகளை கணினி தொழில்நுட்ப வல்லுநர்கள் வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ.), உருவாக்கிய, இணையவழி தாக்குதல் ‘டூல்’களை (கருவிகளை) கொண்டு, உலகின் சுமார் 100 நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கணினிகளில் ‘ரான்சம்வேர்’ வைரஸ் மூலம் இணைய தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.


இந்த ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலால், இந்தியா, ஸ்பெயின், இங்கிலாந்து, ரஷியா என கிட்டத்தட்ட 100 நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. இங்கிலாந்தில் மருத்துவ சேவைகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் யார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ‘மால்வேர் டெக்’ என்னும் பாதுகாப்பு அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள், ஓரளவு இந்த வைரஸ் தாக்குதலை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதே நேரத்தில் இன்னுமொரு இணைய தாக்குதல் நடத்தப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பதாக அவர்கள் கணித்துள்ளனர். அந்த தாக்குதல் அனேகமாக இன்று நடைபெறலாம் எனவும் அவர்கள் யூகித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை கணினி தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதில்,

1. கணினியின் இயங்கு தளமான (ஆபரேடிங் சிஸ்டம்) விண்டோஸ் பழைய வெர்சனாக இருந்தால் அதை தற்போது உள்ள புதிய வெர்சனுக்கு (விண்டோஸ் 10) ஏற்றது போல அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.

2. ஒருவேளை நீங்கள் பழைய ஆபரேடிங் சிஸ்டமை (விண்டோஸ் XP, 7, விஸ்டா) பயன்படுத்தி வந்தால், தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் அதற்கான அவசர பாதுகாப்பு இணைப்பை உருவாக்கியுள்ளது. அதை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

3. கணினியில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள ஆண்டி வைரஸ் உள்ளிட்ட முக்கிய சாப்ட்வேர்களை தற்போது வரை சரியான அப்டேட்களை செய்து கொள்ள வேண்டும்.

4. கணினியில் இணைய வசதிகளை கொண்டிருக்கும் பட்சத்தில் முக்கியமாக பயர்வால் (firewall) வசதியை கண்டிப்பாக ஆக்டிவ் செய்ய வேண்டும். ஆக்டிவாக இருந்தாலும் இணைய வழி ஊடுருவலை தடுக்கும் வகையில் பயர்வால் அமைப்புகளை (setting) மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

5. சர்வரில் இருந்து தகவல்களை அனுப்பும் அமைப்பை தற்காலிகமாக செயலிழக்க செய்யுமாறு மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

6. கணினியில் உள்ள தேவையான தகவல்களை பேக்அப் (Backup) செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் தகவல்கல் இழப்பை தடுக்கலாம்.

7. முன் அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து வரும் இ-மெயில் தகவல்களை திறந்து வாசிக்க முயற்சிக்க வேண்டாம். விளம்பரம் உள்ளிட்ட தேவையற்ற இ-மெயில்களிடமிருந்து விலகியிருப்பது நல்லது.

கணினியை ஆன் செய்வதற்கு முன்பாக செய்ய வேண்டியவை:

1. கணினியின் சர்வர் மற்றும் நெட்வொர்க் ஸ்விட்சுகளின் இணைப்பை துண்டிக்க வேண்டும்.

2. வை-பை இணைப்பு, லேன் (LAN) இணைப்பு, ரூட்டர்கள் ஆகியவற்றை துண்டித்து ஆப் செய்து வைக்க வேண்டும்.

3. ஸ்மார்ட் டி.வி, டேப்லட், மொபைல் போன்கள் ஆகியவற்றையும் ஆப் செய்து வைக்க வேண்டும்.

4. கணினி, மொபைல் ஆகியவற்றில் ப்ளூ டூத், ஹாட்ஸ்பாட் ஆகியவற்றை ஆன் செய்ய வேண்டாம்.

5. இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க சிறிது நாட்களுக்கு இணைய இணைப்பை பயன்படுத்தாமல் இருக்கலாம்.

மேற்கண்ட அனைத்தையும் செய்யாமல் உங்களது மொபைல், கணினி, ஸ்மார்ட் டி.வி, டேப்லட் ஆகியவற்றை ஆன் செய்ய வேண்டாம் என தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

பள்ளி பதிவேடுகளில் பெயர் மாற்றம் மற்றும் திருத்தம் செய்வதற்கான வழி

பிறந்த தேதி / தந்தை பெயர் / மாணவர் பெயர் / முகப்பெழுத்து மற்றும் சாதித் திருத்தம் கோரும் விண்ணப்பங்கள் பரிந்துரை செய்வது தொடர்பாக அரசு கீழ்க்கண்ட விளக்கங்களை அளித்துள்ளது. மாணவரின் பெற்றோரால் சரியாக விவரங்கள் கொடுக்கப்பட்டு பள்ளி பதிவின்போது பள்ளி நிர்வாகத்தால் தவறு செய்யப்பட்டிருந்தாலோ அல்லது காலண்டரில் இல்லாத தேதி பிறந்த தேதியாக பதிவு செய்யப்பட்டிருந்தாலோ அல்லது இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு பிறந்த தேதியை திருத்தம் செய்யுமாறு உரிமையியல் மற்றும் உயர்நீதிமன்றங்கள் தீர்ப்பு அளித்திருந்தாலோ பள்ளிப்படிப்பை முடித்து மதிப்பெண் சான்றுகளையும் பெற்றுக் கொண்ட பின் பிறந்த தேதி / தந்தை பெயர் / மாணவர் பெயர் / முகப்பெழுத்து மற்றும் சாதித் திருத்தம் மேற்கொள்வது என்பது பிரிவு 5 ன்படி ஏற்கத்தக்கதல்ல.

பத்தாம் வகுப்பு அரசு தேர்விற்கு பெயர்ப்பட்டியல் அனுப்பப்படுவதற்கு முன்னர் உரிய சான்றுகளின் அடிப்படையில் பிறந்த தேதி / தந்தை பெயர் / மாணவர் பெயர் / முகப்பெழுத்து மற்றும் சாதித் திருத்தங்களை செய்வதற்கு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிப்படிப்பை முடித்து மதிப்பெண் சான்றுகளையும் பெற்றுக் கொண்ட பின் தந்தை பெயர் மற்றும் முகப்பெழுத்து திருத்தம் கோரி தொடரப்பட்ட வழக்கில் (வழக்கு எண் - W. P. NO - 25677/2010 in M. P. NO - 1 & 2 /2011, R. Yoga Priya Vs Director of School Education) சென்னை உயர்நீதிமன்றம் கீழ்க்கண்டவாறு தீர்ப்பு வழங்கியுள்ளது.

"Since the petitioner has already published her name change in the Govt. Gazette as stated Supra, the name is sufficient for all purposes ans everybody is bound to accept the same as the changed name of the petitioner. Hence there is no error in the order passed by the respondent i. e) Director of School education refusing top carry our the name (or) Initial Change in the Certificates in the Certificates as requested by the petitioner ".

சாதித் திருத்தம் கோரும் நிகழ்வுகளில் முதலில் தவறான சாதி குறிப்பிடப்பட்டு பின்னர் வருவாய்த்துறை வழங்கும் சாதிச் சான்றிதழின் படி திருத்தம் கோரப்பட்டால் பள்ளி மாற்றுச் சான்றிதழ்களில் அவ்வாறான திருத்தம் மேற்கொள்ளப்படாது. ஏனெனில் வருவாய்த்துறை வழங்கும் சாதிச் சான்றிதழே இறுதியானதும், ஏற்றுக்கொள்ளதக்கதும் ஆகும்.

பிறந்த தேதி / தந்தை பெயர் / மாணவர் பெயர் / முகப்பெழுத்து மற்றும் சாதித் திருத்தம் கோருவோர் கல்வித்துறையில் பணிபுரிபவர்கள் என்றால் பணியில் சேர்ந்து 5 ஆண்டுகளுக்குள் சார்ந்த பள்ளி தலைமையாசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் மூலம் பள்ளிக்கல்வி இயக்குனருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இதர அரசு துறைகளில் மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிவோர் பிறந்த தேதி /தந்தை பெயர் / மாணவர் பெயர் / முகப்பெழுத்து மற்றும் சாதித் திருத்தம் கோரி தங்கள் நியமன அலுவலர் மூலம் வருவாய் நிர்வாக அலுவலர், பேரிடர் மேலாண்மை, சேப்பாக்கம், சென்னை - 600005 மூலம் நேரடியாக அரசு தேர்வுத்துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும். பள்ளிக் கல்வித்துறைக்கு கருத்துக்கள் அனுப்பக்கூடாது.

உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகளின் அடிப்படையில் பிறந்த தேதி /தந்தை பெயர் / மாணவர் பெயர் / முகப்பெழுத்து மற்றும் சாதித் திருத்தம் கோருவோர் இருதரப்பு வாதங்களின் அடிப்படையிலான தீர்ப்பின் அசல் மற்றும் அசல் கல்விச் சான்றுகளுடன் அன்னார் 10 ஆம் வகுப்பு பயின்ற பள்ளி தலைமையாசிரியர் மற்றும் சார்ந்த முதன்மை கல்வி அலுவலர் / மாவட்ட கல்வி அலுவலர் மூலம் கருத்துக்களை பள்ளி கல்வி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும்.

ஒருதலைப்பட்சமாக வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படமாட்டாது என்பதால், அத்தகைய தீர்ப்புகள் பெறப்பட்டால் சார்ந்த மேல்முறையீட்டு மனு உடன் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் ஒருதலைப்பட்ச தீர்ப்பின் அடிப்படையில் திருத்தம் கோரும் கருத்துக்களை பரிந்துரைக்கக்கூடாது.

வழக்குகளில் தலைமைச் செயலாளர் / கல்வித்துறை செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஒரு தரப்பினராக இருந்தால் (One of the Department) அவர்களை நீக்கம் செய்திட (Deletion) மனு செய்திட வேண்டும். ஏனெனில் கல்விச் சான்றுகளில் திருத்தம் செய்யும் அதிகாரம் பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் இதர துணைத்தலைவர்களின் பரிந்துரையின் பேரில் அரசு தேர்வுத்துறை இயக்குனருக்கு மட்டுமே உள்ளது.

பள்ளி நிர்வாகத்தால் தவறு செய்யப்பட்டிருந்தாலோ அல்லது காலண்டரில் இல்லாத தேதி பிறந்த தேதியாக பதிவு செய்யப்பட்டிருந்தாலோ அல்லது இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு பிறந்த தேதியை திருத்தம் செய்யுமாறு உரிமையியல் மற்றும் உயர்நீதிமன்றங்கள் தீர்ப்பு அளித்திருந்தாலோ கீழ் குறிப்பிட்ட ஆவணங்களுடன் மாணவர் 10 ஆம் வகுப்பு பயின்ற பள்ளி தலைமையாசிரியர் மற்றும் சார்ந்த முதன்மை கல்வி அலுவலர் / மாவட்ட கல்வி அலுவலர் மூலம் கருத்துக்களை பள்ளி கல்வி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும்.

மெட்ரிக்குலேசன் பள்ளிகள் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் பயின்றவர்கள் சார்ந்த மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் / ஆங்கிலோ இந்திய பள்ளி ஆய்வாளர் மூலம் மெட்ரிக்குலேசன் பள்ளி இயக்குநர் மூலம் அரசு தேர்வுத்துறை இயக்குனருக்கு அனுப்ப வேண்டும். ஆதிதிராவிடர் பள்ளிகளில் பயின்றவர் என்றால் ஆதிதிராவிட இயக்குனருக்கு அனுப்பக்கூடாது. இத்தகைய கருத்துக்களை மாவட்ட கல்வி அலுவலர்கள் பரிந்துரைக்கக்கூடாது.

முற்றிலும் தனித் தேர்வர்களாக தேர்வு எழுதியவர்கள் நேரிடையாக அரசு தேர்வுத்துறை இயக்குனருக்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இவர்களது கருத்துக்களையும் முதன்மை கல்வி அலுவலர்கள் / மாவட்ட கல்வி அலுவலர்கள் பரிந்துரைக்கக்கூடாது.

இன்ஜி., கலை கல்லூரிகளில் பிளஸ் 1 பாடம் கட்டாயமானது

பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு நடத்தப்படாததால், கல்லுாரிகளில், பிளஸ் 1 பாடங்கள் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். 


அதனால், பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கு, அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. இதை, தனியார் பள்ளிகள் தவறாக பயன்படுத்தி, மாணவர்களுக்கு பிளஸ் 1 பாடங்களையே நடத்தாமல், இரண்டு ஆண்டுகளும், பிளஸ் 2 பாடங்களையே நடத்தினர். 

அதனால், உயர்கல்விக்கு சென்ற மாணவர்கள், அங்கு அடிப்படை பாட அறிவு இல்லாமல், பருவ தேர்வில் தோல்வி அடைகின்றனர். கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்து, அண்ணா பல்கலையின் இன்ஜி., படிப்பில் சேர்ந்தவர்களில், முதல் செமஸ்டர் தேர்வில், 22 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை. 

தேர்ச்சி பெற்றவர்களில் பலர், குறைந்த மதிப்பெண்ணே பெற்றனர்.இதையடுத்து, பிளஸ் 1 வகுப்புக்கும், கட்டாய பொதுத்தேர்வு நடத்த வேண்டும். 

பிளஸ் 1 மதிப்பெண்ணையும், உயர்கல்விக்கான, ’கட் ஆப்’ மதிப்பெண்ணாக்க வேண்டும் என, அண்ணா பல்கலை சார்பில், தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது, பிளஸ் 1 படிக்காமல், பெரும்பாலான மாணவர்கள், பிளஸ் 2 முடித்துள்ளதால், அவர்களுக்கு, மீண்டும் பிளஸ் 1 பாடம் நடத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதற்காக, அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள இன்ஜி., கல்லுாரிகளிலும், அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லுாரிகளிலும், பிளஸ் 1 பாடம், கட்டாய தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. 

முதல் செமஸ்டரில், 60 வகுப்புகளில், பிளஸ் 1 பாடங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வகுப்புகளை, இன்ஜி., மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளில், ’பிரிட்ஜ் கோர்ஸ்’ என்ற முன் தயாரிப்பு வகுப்புகளில் நடத்தி முடிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. 

பிளஸ் 1 பாடம் தெரியாமல், எந்த மாணவருக்கும், இன்ஜினியரிங் பாடம் நடத்த வேண்டாம் என, பேராசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, உயர்கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகப் பள்ளிகளில் விரைவில் புதிய பாடத் திட்டம் - அதிரடி காட்டும் செங்கோட்டையன்

தமிழக பாடத் திட்டங்களில் மாற்றம், அரசுப் பள்ளிகளுக்கான புதுத் திட்டங்கள், நடப்பாண்டு தமிழகக் கல்வித் துறைக்கு ஒதுக்கியுள்ள நிதி போன்றவற்றைப் பற்றி தமிழகப் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.


பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி அறிவிப்பு..!
அப்போது அவர், 'இதுவரை 40,000 பேர் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர். வருகின்ற 26-ம் தேதி வரை இந்தத் திட்டத்துக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர் சேர்க்கை இன்னும் அதிகரிக்கப்படும். இந்தாண்டு கல்வித்துறைக்காக  26,913 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அளவில் 12-ம் வகுப்பு வரையுள்ள அரசுப் பள்ளிகள் 36,830 இருக்கின்றன. இந்த அரசுப் பள்ளிகளில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரவும், புதிய கட்டடங்கள் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும். 6 ஆண்டு காலத்தில் நபார்டு திட்டம் மூலம் 12,000 கோடி ரூபாய் பெற்று திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம்.

தொழில் நிறுவனங்கள், முன்னாள் மாணவர்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், பெற்றோர் மற்றும் ஆசிரிய அமைப்புகள் அரசு பள்ளிகளுக்கு முன்வந்து உதவிகளைச் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றோம். உதவி செய்ய விரும்புவோருக்கு ஏதுவாக ஒரு பிரத்யேக குழு அமைக்க உள்ளோம். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் இந்தியாவுக்கே வழிகாட்டியாக தமிழகம் திகழும். தூய்மையைப் போற்றும் வகையில், இரு மாதங்களுக்கு ஒரு முறை 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பணி செய்பவர்களை பள்ளிகளைச் சுத்தம் செய்ய பயன்படுத்த உள்ளோம்.

ஏறத்தாழ 12 ஆண்டுகளாக பாடத்திட்டங்கள் மாற்றப்படவில்லை என்று கூறப்பட்டது. இன்னும் 3 ஆண்டுகளில் எந்த வகுப்புகளுக்கு எப்படி பாடங்களை மாற்றலாம் என்று பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து 2 நாள்களில் கொள்கை முடிவு எடுக்கப்படும். வரும் 19-ம் தேதி காலை 10 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வுகள் வெளியிடப்படும். தேர்வு முடிவுகள் வெளியிட்ட இரு நிமிடங்களில் மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் முடிவுகள் தெரிவிக்கப்படும்' என்று கூறியுள்ளார்.

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நடக்கும் இடங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்: ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஒவவொரு ஆண்டும் மாறுதல் கலந்தாய்வு நடத்துவது வழக்கம். இதை கோடை விடுமுறையிலேயே நடத்தினால் ஆசிரியர்கள் புதிய பணியிடங்களில் பணியேற்க வசதியாக இருக்கும் என ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன.  கல்வித்துறை செயலராக உதயசந்திரன் பொறுப்பேற்றது முதல் பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக கடந்த சில ஆண்டுகளாக கோடை விடுமுறை திறந்த பின் நடைபெற்ற ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை மே மாதத்திலேயே நடத்த உத்தரவிட்டார்.


இதன்படி உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களுகக்கான பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு வருகிற மே 19ந் தேதியும், நடுநிலைப்பள்ள தலைமையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் மாவட்டத்திற்குள்ளான பணி மாறுதல் மே 22ந் தேதியும், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல் 23ந் தேதியும் நடைபெற உள்ளது. 24ந் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வும், 25ந் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கான ஒன்றியத்திற்குள் மற்றும் மாவட்டத்திற்குள்ளான பணி மாறுதல் கலந்தாய்வும் நடைபெற உள்ளது.

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோருக்கான கலந்தாய்வு பட்டதாரி ஆசிரியர்களுக்கு மே 26ந் தேதியும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மே 29 மற்றும் 30ந் தேதியும் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டுகளை போல் அல்லாமல் இந்தாண்டு அனைத்து விபரங்களும் இணைய வழி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள. எனவே விதி மீறல் நடப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன.

கோடை  வெயில் வாட்டி வதைப்பதால் கலந்தாய்வு நடைபெறும் இடங்களில் உரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் கூறியதாவது

கடந்தாண்டுகளில் நடந்த கல்தாய்வு இடங்களில் உரிய அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தரவில்லை;. குறிப்பாக கழிப்பிட வசதியில்லாததால் பெண் ஆசிரியர்கள் மிகவும் சிரமதிதிற்குள்ளாயினர். வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் சுத்தமான குடி நீர் வசதியுடன் ஆசிரியர்கள் அமர்வதற்கு இருக்கை வசதிகள் செய்து தரப்பட வேண்டும். கலந்தாய்வை நேர்மையாக நடத்துவதற்கு ஏதுவாக மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை காலிப்பணியிடங்களையும் வெளிப்படையாக வெளியிட வேண்டும். மேலும் ஒவ்வொரு அறிவிப்புகளையும் ஒலி பெருக்கியில் தெளிவாக அனைத்து ஆசிரியர்கள் அறிந்துகொள்ளும் வகையில் அறிவித்திட வேண்டும் என அவர் தெரிவித்தார். மேலும் மேல் முறையீடுகளை மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் அவர்கள் உடனடியாக விசாரித்து கலந்தாய்வை தொய்வின்றி நடத்த வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்

பணிநிரவல் ஆசிரியர்களின் விவரம் மற்றும் காலிப்பணியிடங்களின் விவரம் கீழ்கண்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவு

பணிநிரவல் ஆசிரியர்களின் விவரம் மற்றும்  காலிப்பணியிடங்களின் விவரங்களை http://www.deetn.com/ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய
தொடக்கக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

17/5/17

6 லட்சம் ஐடி ஊழியர்களுக்கு சிக்கல் !!

ஐ.டி. நிறுவனங்களில் 3 ஆண்டுகளுக்குள் 6 லட்சம் ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது._

_பெங்களூருவைச் சேர்ந்த ஹெட் ஹண்டர்ஸ் என்ற முன்னணி நிறுவனத்தின் தலைவர் லக்ஷ்மிகாந்த், பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், இந்த ஆண்டு 56 ஆயிரம் ஐ.டி. பணியாளர்கள் 
வேலைஇழக்க இருப்பதாகத் தெரிவித்தார். உண்மையில், ஆண்டுக்கு ஒரு லட்சத்து 75 ஆயிரம் பணியாளர்கள் முதல் 2 லட்சம் பணியாளர்கள் வரையில் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்றும், இதன் மூலம் 5 லட்சம் முதல் 6 லட்சம் ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்._

_மாறி வரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளாத ஐ.டி. ஊழியர்களே பணியிழக்க நேரிடும் என்றும் லக்ஷ்மிகாந்த் தெரிவித்துள்ளார்._

இணைய உலகை அச்சுறுத்தும் ‘ரான்சம்வேர்’ வைரஸ்: செய்ய வேண்டியது, செய்யக்கூடாதது என்ன??

சமீபத்தில் உலகம் முழுவதும் மருத்துவமனை மற்றும் தொழிற்சாலை சர்வர்களை பதம்பார்த்துள்ள ‘ரான்சம்வேர்’ வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழி முறைகளை கணினி தொழில்நுட்ப வல்லுநர்கள் வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ.), உருவாக்கிய, இணையவழி தாக்குதல் ‘டூல்’களை 
(கருவிகளை) கொண்டு, உலகின் சுமார் 100 நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கணினிகளில் ‘ரான்சம்வேர்’ வைரஸ் மூலம் இணைய தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலால், இந்தியா, ஸ்பெயின், இங்கிலாந்து, ரஷியா என கிட்டத்தட்ட 100 நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. இங்கிலாந்தில் மருத்துவ சேவைகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் யார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ‘மால்வேர் டெக்’ என்னும் பாதுகாப்பு அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள், ஓரளவு இந்த வைரஸ் தாக்குதலை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதே நேரத்தில் இன்னுமொரு இணைய தாக்குதல் நடத்தப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பதாக அவர்கள் கணித்துள்ளனர். அந்த தாக்குதல் அனேகமாக இன்று நடைபெறலாம் எனவும் அவர்கள் யூகித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை கணினி தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதில்,

1. கணினியின் இயங்கு தளமான (ஆபரேடிங் சிஸ்டம்) விண்டோஸ் பழைய வெர்சனாக இருந்தால் அதை தற்போது உள்ள புதிய வெர்சனுக்கு (விண்டோஸ் 10) ஏற்றது போல அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.

2. ஒருவேளை நீங்கள் பழைய ஆபரேடிங் சிஸ்டமை (விண்டோஸ் XP, 7, விஸ்டா) பயன்படுத்தி வந்தால், தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் அதற்கான அவசர பாதுகாப்பு இணைப்பை உருவாக்கியுள்ளது. அதை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

3. கணினியில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள ஆண்டி வைரஸ் உள்ளிட்ட முக்கிய சாப்ட்வேர்களை தற்போது வரை சரியான அப்டேட்களை செய்து கொள்ள வேண்டும்.

4. கணினியில் இணைய வசதிகளை கொண்டிருக்கும் பட்சத்தில் முக்கியமாக பயர்வால் (firewall) வசதியை கண்டிப்பாக ஆக்டிவ் செய்ய வேண்டும். ஆக்டிவாக இருந்தாலும் இணைய வழி ஊடுருவலை தடுக்கும் வகையில் பயர்வால் அமைப்புகளை (setting) மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

5. சர்வரில் இருந்து தகவல்களை அனுப்பும் அமைப்பை தற்காலிகமாக செயலிழக்க செய்யுமாறு மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

6. கணினியில் உள்ள தேவையான தகவல்களை பேக்அப் (Backup) செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் தகவல்கல் இழப்பை தடுக்கலாம்.

7. முன் அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து வரும் இ-மெயில் தகவல்களை திறந்து வாசிக்க முயற்சிக்க வேண்டாம். விளம்பரம் உள்ளிட்ட தேவையற்ற இ-மெயில்களிடமிருந்து விலகியிருப்பது நல்லது.

கணினியை ஆன் செய்வதற்கு முன்பாக செய்ய வேண்டியவை:

1. கணினியின் சர்வர் மற்றும் நெட்வொர்க் ஸ்விட்சுகளின் இணைப்பை துண்டிக்க வேண்டும்.

2. வை-பை இணைப்பு, லேன் (LAN) இணைப்பு, ரூட்டர்கள் ஆகியவற்றை துண்டித்து ஆப் செய்து வைக்க வேண்டும்.

3. ஸ்மார்ட் டி.வி, டேப்லட், மொபைல் போன்கள் ஆகியவற்றையும் ஆப் செய்து வைக்க வேண்டும்.

4. கணினி, மொபைல் ஆகியவற்றில் ப்ளூ டூத், ஹாட்ஸ்பாட் ஆகியவற்றை ஆன் செய்ய வேண்டாம்.

5. இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க சிறிது நாட்களுக்கு இணைய இணைப்பை பயன்படுத்தாமல் இருக்கலாம்.

மேற்கண்ட அனைத்தையும் செய்யாமல் உங்களது மொபைல், கணினி, ஸ்மார்ட் டி.வி, டேப்லட் ஆகியவற்றை ஆன் செய்ய வேண்டாம் என தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

கல்வித்துறைக்கு வெளிச்சம் பாய்ச்சும் பள்ளிகல்வித்துறை செயலாலர் திரு. உதயசந்திரன் !!

எப்பொழுது வரும், எப்பொழுது வருமென்று விடியலுக்காய் ஏங்கித் தவம் கிடந்தவா்களுக்கு, பள்ளிக் கல்விச் செயலராய் பொறுப்பேற்ற நாள் முதல் நன்னம்பிக்கை முனையாக  நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சி வருகிறார்.  உயா்திரு. த.உதயசந்திரன் இ.ஆ.ப அவா்கள்.

 பள்ளிக் கல்வி அதிகாரிகளுக்கு இம் மேமாதத்தில் தலைசிறந்த எழுத்தாளா்கள், கல்வியாளா்கள், சிந்தனையாளர்கள் போன்ற ஆளுமைகளைக் கொண்டு பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகளைப் பயனுற வழங்குதல், தமிழ் விக்கிப் பீடியாவை முன்னெடுத்துச் செல்ல முயற்சிகள் மேற்கொள்ளுதல், பாடத்திட்டம் மாற்றப் பரிசீலனை, ஆசிரியா்கள் சங்கப்  பொறுப்பாளா்களுடன் கலந்துரையாடல், தினந்தோறும் பள்ளிகளில் காலை வணக்கக் கூட்டம் நிகழ்த்த வலியுறுத்தல், ஆசிரியா்களுக்கும், மாணவா்களுக்கும் தனித்தனியே பத்திரிகைகளைத் துவக்குதல், பொதுத் தோ்வு முடிவுகளில் தரவரிசை ஒழிப்பு, அரசுப் பள்ளிகளின் தரமுயா்த்துவதில் சிறப்புக் கவனம் செலுத்துதல், கல்வி அதிகாரிகளைத் தானே நேரடியாகக் கண்காணிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்தல் போன்ற பல்வேறு ஆக்கப்பூா்வமான நடவடிக்கைகள் மூலம் வரும் கல்வியாண்டை வளமான கல்வியாண்டாக வளா்ச்சிப் பாதையில் செலுத்திட செயல்திட்டங்களை வகுத்து வருகிறார்..

56,000 ஐ.டி ஊழியர்கள் வேலை பறிபோகும் அபாயம்" : என்னதான் காரணம்?

இந்தியாவைச் சேர்ந்த 7 முன்னணி ஐ.டி நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த 56,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளன.
இந்தியாவின் முன்னணி ஐ.டி நிறுவனங்களாக கருதப்படும் இன்போசிஸ், விப்ரோ,டெக் மகேந்திரா,காக்னிசண்ட்,டி.எக்ஸ்.சி டெல்னாலஜிஸ், கேப் ஜெமினி ஆகிய நிறுவனங்களில் சுமார் 1.24 மில்லியன் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 4.5 சதவீத ஊழியர்களை வேலையை விட்டு அனுப்ப அந்த நிறுவனங்கள் தற்போது முடிவெடுத்துள்ளன. அதாவது கிட்டத்தட்ட 56,000பேருக்கு லே ஆஃப் கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 டி.எக்ஸ்.சி நிறுவனம் தங்களிடம் வேலை பார்க்கக் கூடிய 1,70,000 ஊழியர்களில் 10,000 பேருக்கு லே ஆஃப் கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு லே ஆஃப் கொடுக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையை விட இரு மடங்காகும். லே ஆஃப் கொடுக்கப்பட்ட ஊழியர்களுக்கு பதிலாக, பிரஷர்ஸ் எனப்படும் புதிய, சம்பளம் குறைவாக பெறக் கூடிய பொறியியல் பட்டதாரிகள் வேலைக்கு எடுக்கப்பட உள்ளனர்.

இந்த வேலை நீக்க நடவடிக்கையின் முதல் கட்டமாக, லே ஆஃப் கொடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ள ஊழியர்கள் ”பக்கெட் 4 ”என்ற பெயரில் தரம் பிரிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் உயர் பதவிகளில் உள்ள 3000 மேலாளர்களும் அடக்கம்.ஆனால் இந்த வேலை நீக்க நடவடிக்கைகள் என்பது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறக்கூடியது எனவும் பெர்பார்மென்ஸ் அடிப்படையில் வேலை நீக்கம் செய்யப்படும் ஊழியர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் மாறும் எனவும் ஐடி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

உலகளவில் முன்னேறி வரும் தொழில் நுட்பம் மற்றும் வியாபார நுட்பங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றியமைத்துக் கொள்ள, இந்த லே ஆஃப் நடவடிக்கைகள் தேவைப்படுகிறது என இந்திய ஐ.டி நிறுவனங்கள் காரணம் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.