யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

29/6/17

நெருக்கடியில் காரைக்குடி நகராட்சி பள்ளி திணறல்:கோப்புகளை கிடப்பில் போட்ட வருவாய்த்துறை!!

காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட ராமனாதன் செட்டியார் நகராட்சி தொடக்கப்பள்ளியில் போதிய வகுப்பறை இல்லாததால், தமிழ், ஆங்கில வழி பிரிவு மாணவர்கள் ஒரே கட்டடத்துக்குள் நெருக்கடியில் படிக்கும் நிலை தொடர்கிறது.
காரைக்குடி டி.டி.நகர் சர்ச் 7-வது வீதியில் நகராட்சிக்கு உட்பட்ட ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலை பள்ளி மற்றும் தொடக்க பள்ளி செயல்பட்டு 
வருகிறது. நடுநிலை பள்ளியாக இருந்த இப்பள்ளி, கடந்த 2013--14-ம் கல்வி ஆண்டில் உயர்நிலை பள்ளியாக தரம் உயர்வு பெற்றது.ஒரே பள்ளி இரண்டாக பிரிக்கப்பட்டது. உயர்நிலை பள்ளியில் 2013-ம் கல்வி ஆண்டில் மாணவர் எண்ணிக்கை 200 ஆக இருந்தது. 2014--15-ல் 318, 2015--16-ல் 478, 2016--17-ல் 650, இந்த ஆண்டு 954 ஆக உயர்ந்துள்ளது. தமிழ் வழியில் 317 மாணவர்களும், ஆங்கில வழியில் 637 மாணவர்களும் படிக்கின்றனர்.
கட்டட வசதி இல்லாத நிலையில் நகராட்சி சார்பில் ரூ.ஒரு கோடிக்கு கட்டடங்கள் கட்டப்பட்டு ஓரளவு நெருக்கடி சமாளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், நடப்பாண்டில் இட நெருக்கடியால் பல மாணவர்கள் சேர்க்கப்படவில்லை. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய கழிப்பிட, கைகழுவும் வசதி, மைதான வசதி இல்லை.தொடக்க பள்ளியை பொறுத்தவரை கடந்த 2014--15-ல் 217, 2015--16-ல் 350, 2016--17-ல் 460, நடப்பாண்டில் 500 மாணவர்கள் என ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. கட்டட வசதி இல்லாததால், மாணவர்கள் வராண்டாவில் அமர்ந்து படிக்கின்றனர்.ஒரு வகுப்பில் 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர்.
ஆசிரியர்கள் மாணவர்களை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். தொடக்க பள்ளிக்கு கட்டடம் கட்ட தாலுகா அலுவலக பின்புறம் உள்ள 42 சென்ட் இடத்தை தேர்வு செய்து, வருவாய் துறை அமைச்சரின் ஒப்புதலுக்கு நகராட்சி நிர்வாகம் அனுப்பி வைத்தது.அப்போதைய நகராட்சி தலைவர் கற்பகம் இதற்கான அனுமதி பெற முழு முயற்சியை எடுத்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, உள்ளாட்சி நிர்வாகிகளின் பதவி காலமும் முடிவடைந்ததால், இதற்கான கோப்பு நில நிர்வாக இயக்குனரகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
பெற்றோர் ஒருவர் கூறும்போது: நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ராமநாதன் செட்டியார் நகராட்சி அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்தபோதும், போதிய அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லை. தொடக்க பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கட்டடம் கட்டுவதற்குரிய அனுமதியை காரைக்குடி எம்.எல்.ஏ., ராமசாமி மற்றும் தற்போதைய நகராட்சி கமிஷனர் சுந்தராம்பாள் பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக