யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

27/10/17

ரிலையன்ஸ் 2ஜி சேவை நிறுத்தம்!

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தனது
2ஜி சேவையை இன்னும் ஒரு மாதத்துக்குள் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் 2ஜி மற்றும் 3ஜி தொலைத் தொடர்புச் சேவைகளை வழங்கி வருகிறது. அனில் அம்பானியின் சகோதரரும் இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரருமான முகேஷ் அம்பானி கடந்த ஆண்டில் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவையைத் தொடங்கிய பிறகு அனில் அம்பானிக்கு நஷ்டம் ஏற்படத் தொடங்கியது. இந்நிலையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தொலைத் தொடர்புத் துறையில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளும் முயற்சியில், ஏர்செல் நிறுவனத்துடன் இணைய முடிவு செய்தது.

எனினும் சில சட்ட சிக்கல்களால் ஏர்செல் நிறுவனத்துடனான இணைவு தோல்வியைச் சந்தித்தது. இதனால் ரிலையன்ஸுக்கு உள்ள ரூ.44,000 கோடி கடன் பிரச்னைக்குத் தீர்வு காண இயலாமல் போனது. எனவே கடனில் சிக்கித் தவிப்பதை விட வெளியேறுவதே சிறந்தது என முடிவு செய்து, 2ஜி மொபைல் சேவையை நவம்பர் 30ஆம் தேதிக்குள் நிறுத்திக் கொள்வதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், லாபம் கிடைக்கும் வரையில் 3ஜி சேவை தொடரும் என்றும் அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் இந்த முடிவால் அதன் பணியாளர்கள் சுமார் 2,000 பேரின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக