யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

27/10/17

45 நிமிடங்களில் ரத்தம் கிடைக்கும்!

சாலை விபத்துக்களில் விபத்துக்குள்ளானவர்களுக்கு 
உடனடியாக ரத்தம் கிடைக்காத காரணத்தால் பலர் உயிரிழக்கின்ற நிலை ஏற்படுகிறது. இந்நிலையில், அவசர சிகிச்சைக்கு உடனடியாக ரத்தம் கிடைக்கும் வகையில் புதிய ரத்தக் கொள்கையை தமிழக அரசு அமல்படுத்தவுள்ளது. இதுகுறித்தான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய ரத்தக் கொள்கையின்படி, மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவர்களுக்கு 45 நிமிடங்களில் ரத்தம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 295 ரத்த வங்கிகளும், 519 ரத்த சேமிப்பு மையங்களும் உள்ளன. இங்கிருந்து, உடனடியாக ரத்தம் தேவைப்படும் அனைத்து பகுதிகளுக்கும் ரத்தத்தை கொண்டு செல்வதற்கான பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதனால், விபத்துகளில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு இது பயனளிக்கும்.

இந்த திட்டம் ஏழை கர்ப்பிணி பெண்களின் சிகிச்சைக்காக ரத்தம் கிடைப்பதை உறுதி செய்ய முடியும். அங்கீகாரம் பெற்ற ரத்த வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ள ரத்தத்தில் நோய் உள்ளதா என்பதை ஆய்வு செய்து உறுதி செய்யவும் இது வழிவகுக்குகிறது.

மேலும், ரத்தம் தானம் செய்வோரின் முகவரி உள்ளிட்ட விவரங்களை ரத்த சேமிப்பு வங்கிகள் சேமித்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக