யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

25/10/17

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு!!

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்களின் போராட்டம் 
வருகிற 31-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்தப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு மாதக் கடைசி நாளில் ஊதியம் வழங்க வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணப் பயன்கள், பதவி உயர்வுகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த செப்.31-ஆம் தேதி முதல் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள், ஓய்வூதியர்கள் கூட்டமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். மேலும், அக்.23-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்தனர்.

தொடர்ந்து, கடந்த 20-ஆம் தேதி சென்னையில் முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பூமா கோயில் முன் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் திங்கள்கிழமை பணிக்குச் செல்லும் முன்பாக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.மனோகரன் தலைமையில் கூடினர். இந்தக் கூட்டத்தில் போராட்டத்தை தாற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டதை அடுத்து அனைவரும் பணிக்குச் சென்றனர்.

பின்னர், கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.மனோகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 20-ஆம் தேதி சென்னையில் உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உயர் கல்வித் துறை செயலர் சுனில்பாலிவால், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஏ.அருண்மொழிதேவன் எம்.பி., கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ, எம்.உமாமகேஸ்வரன், சார்லஸ், துணைவேந்தர் செ.மணியன், பதிவாளர் கே.ஆறுமுகம் மற்றும் கல்வித் துறை துணைச் செயலர்கள் பங்கேற்றனர். அப்போது 16 அம்சக் கோரிக்கைகளை எடுத்துரைத்தோம். கோரிக்கைகளை முதல்வரிடம் தெரிவித்து அக்.30-ஆம் தேதி முடிவுகளை அறிவிப்பதாகவும், அதுவரை போராட்டத்தை ஒத்திவைக்குமாறும் கோரினார்கள். மேலும், வருகிற அக்.30-ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து பதிவாளர் கடிதம் அளித்துள்ளார்.

எனவே, வருகிற அக்.31-ஆம் தேதி வரை போராட்டத்தை ஒத்திவைத்துள்ளோம்.
கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு சுமுக தீர்வு ஏற்படவில்லை எனில் வருகிற நவ.1-ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார் அவர்.

கூட்டமைப்பு நிர்வாகிகள் பி.சிவகுருநாதன், எஸ்.பூங்கோதை, ப.மனோகர், இமயவரம்பன், செல்வராஜ், செல்வக்குமார், புருஷோத்தமன், பாலு, சி.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக