யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

25/10/17

மீனவப் பட்டதாரிகளுக்கு ஐஏஎஸ் தேர்வுப் பயிற்சி!!!

மீனவப் பட்டதாரி இளைஞர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் போட்டித் தேர்வுக்கான பயிற்சிபெற 
அக்டோபர் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என நேற்று முன்தினம் (அக்டோபர் 22) அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மீனவப் பட்டதாரி இளைஞர்களுக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் போட்டித் தேர்வில் பங்கேற்கப் பயிற்சி அளிக்க வேண்டும் எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மீன்வளத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மைப் பயிற்சி நிலையம் இணைந்து இந்தப் பயிற்சி திட்டத்தை நடத்தவுள்ளது. எனவே, கடல் மற்றும் உள்நாட்டு மீனவக் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களும் மீனவர் நல வாரிய உறுப்பினர்களின் பிள்ளைகளும் இதில் சேர்ந்து பயிற்சி பெறலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு 21-35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு 42. விண்ணப்பப் படிவத்தை www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது மாவட்ட மீன்துறை உதவி இயக்குநர், மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம், எண்.11, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, பொன்னேரி - 601 204 முகவரியில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்திசெய்த விண்ணப்பங்களை அக்டோபர் 25ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-27972457 என்னும் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

தற்போது பணியில் இருக்கும் மீனவப் பட்டதாரி இளைஞர்களும் இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக