யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

29/11/17

மத்திய அரசு ஊழியர்களுக்கு 'டெபுடேஷன் அலவன்ஸ்' உயர்வு

புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும், 'டெபுடேஷன் 
அலவன்ஸ்' இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

'டெபுடேஷன்' எனப்படும், அயல் பணிக்கு செல்லும் மத்திய அரசு ஊழியர்களுக்கு, அதற்கான படி வழங்கப்படுகிறது. உள்ளூரில், அயல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு, அவர்களின் மாத அடிப்படை சம்பளத்தில், 5 சதவீதம் அல்லது அதிகபட்சம், 2,000 ரூபாய், டெபுடேஷன் அலவன்சாக வழங்கப்படுகிறது.
வெளியூரில், அயல் பணியாற்றும் ஊழியர்களுக்கு, அவர்களின் மாத அடிப்படை சம்பளத்தில், 10 சதவீதம் அல்லது அதிகபட்சம், 4,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், டெபுடேஷன் அலவன்சை, இரு மடங்காக உயர்த்தி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, உள்ளூர் அயல் பணிக்காக, அதிகபட்சம், 4,500 ரூபாயும், வெளியூர் அயல் பணிக்காக, அதிகபட்சம், 9,000 ரூபாய் வழங்கப்படும். ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் படி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக