யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

19/1/18

17.01.2018 ) மாலை 4.00 மணியளவில் மதிப்புமிகு பள்ளிக்கல்வி முதன்மைச்செயலர் அவர்களும் , மதிப்புமிகு அனைவருக்கும் கல்வி இயக்கக திட்ட இயக்குநர் அவர்களும் காணொலிக் காட்சி மூலம் சில தகவல்களை நமக்குத் தந்துள்ளார்கள் அவற்றின் விபரம்..

1, மொபைல் அப்ளிகேசன் மேம்படுத்தப்பட்டு மாணவர் அடையாள அட்டை        (STUDENT SMART CARD ) எளிதில் பதிவேற்றம் செய்ய வழிவகை செய்யப் பட்டுள்ளது.. மேலும் இப்பணியைத் துரிதப்படுத்த மொபைல் அப்ளிகேசனுடன் கணினி மற்றும் லேப்டாப் மூலமும் பதிவேற்றவும் வசதி செய்யப்பட உள்ளது..
2, ஆதார் எண் இணைக்கும் பகுதியில் ஆதார் எண் இல்லாதவர்களுக்கு E I D நம்பர் இணைக்கும் வசதி மொபைல் அப்ளிகேசனில் மட்டும் இருந்தது. தற்போது கணினி மற்றும் மடிக்கணினி மூலமும் E I D நம்பர் இணைக்க வசதி செய்யப்பட உள்ளது..
3, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் பொதுக்குழுமத்தில் உள்ள மாணவர்கள் விபரங்கள் எக்செல் வடிவில் நமக்கு நாளை கிடைத்துவிடும் . அதனை வைத்து மாணவர்களை எளிதில் கண்டறிந்து விரைவில் நம் பள்ளிக்கு ஈர்க்க வழிவகை கிட்டும் வகையில் வசதி செய்யப்படும்..

4, ஒரே மாணவனின் ஆதார் எண்ணை பல பள்ளிகளில் இணைப்பதாக எழுந்த புகாரையடுத்து மாநிலம் முழுதும் உள்ள எமிஸ் பதிவுகளில் , கண்டறியப்பட்ட டூப்ளிகேட் ஆதார் எண்கள் திரட்டப்பட்டு , எக்செல் வடிவில் நமக்கு நாளை அனுப்பப்படும், அதனை வைத்து சரியான ஆதார் விபரங்களை உறுதி செய்து மேம்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது..

5, எமிஸ் மாணவர் விபரங்களின் எண்ணிக்கை தற்போதைய வருகைப்பதிவேட்டில் உள்ள எண்ணிக்கைக்குச் சமமாக இருக்குமாறு சரி செய்யவேண்டும்..

6, வேறு ஒன்றியம் , மாவட்டப் பள்ளிகள் அனுப்பாத விபரங்களை எளிதில் ஈர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுளது ( மேலும் விபரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை அணுகவும்)

7, எமிஸில் ஆதார் இணைத்தது போக மீதமுள்ளவை ஆதார் புகைப்படம் எடுக்காத மாணவர்கள் விபரங்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற அளவுக்கு பணிகளை முடித்திட வேண்டும்.

6, எல்லாவற்றிற்கும் முதன்மையாக அனைத்துப் பணிகளையும் வரும் 25.01.2018 மாலைக்குள் முடித்திட வேண்டும் என்று மதிப்புமிகு முதன்மைச் செயலர் அவர்கள் கால நிர்ணயம் செய்திருக்கிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக