யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

17/2/18

டிஆர்பி அலுவலகத்தில் பயோமெட்ரிக் முறை!

                                        

அரசு போட்டித் தேர்வுகளில் முறைகேடு நடைபெறுவதாக உயர் நீதிமன்ற 
மதுரைக் கிளை தாமாக எடுத்துக்கொண்ட வழக்கில், ஆசிரியர் தேர்வு வாரியப் பணிகள் இனி தனியாருக்கு வழங்கப்படாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

“போட்டித் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளினால் தவறான முறையில் மதிப்பெண்களைப் பெறுபவர்கள், தகுதியுடையவர்களின் பணியைப் பறித்துவிடுகின்றனர். அதனால், போட்டித் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனுடன் தொடர்புடையவர்கள் மீது விசாரணைக் குழு அமைக்கவோ அல்லது விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றவோ செய்ய வேண்டும்” என்று பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணையில் இன்று (பிப்ரவரி 16) சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், “அரசு போட்டித் தேர்வு நடைமுறைகள் தனியாருக்கு வழங்கப்டாது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் பயோமெட்ரிக் முறையைக் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது.

தற்போது கடைபிடிக்கப்படும் தேர்வு மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்து டி.என்.பி.எஸ்.சி மார்ச் 9ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக