யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

17/2/18

அரசு போட்டித்தேர்வு நடைமுறைகள் இனி தனியாருக்கு வழங்கப்படாது – உயர்நீதிமன்றத்தில் TRB விளக்கம்

அரசு போட்டித்தேர்வு நடைமுறைகள் இனி தனியாருக்கு வழங்கப்படாது என்று உயர்நீதிமன்ற
மதுரை கிளையில் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

▪போட்டித் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான வழக்கில் தவறான முறையில் மதிப்பெண்களை பெறுபவர்கள் தகுதியுடையவர்களின் இடங்களை பறித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. போட்டித்தேர்வுகளை முறைப்படுத்தி முறைகேடுகளை தடுக்கக் கோரப்பட்டிருந்தது.

▪தொடர்புடையவர்கள் மீது விசாரணைக்குழு அமைக்கவோ, விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றவோ கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இன்று அரசு போட்டித்தேர்வு நடைமுறைகள் இனி தனியாருக்கு வழங்கப்படாது என டி.ஆர்.பி. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

▪டி.ஆர்.பி. அலுவலகத்திற்குள் நுழைவது பயோமெட்ரிக் முறையில் மேம்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து டி.என்.பி.எஸ்.சி. பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், மார்ச் 9-க்கு விசாரணையை ஒத்திவைத்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக