யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

19/4/18

தொடக்கக் கல்வித் துறை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை பற்றிய சரியான தகவல் --- தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவிப்பு.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஏப்ரல் 21 முதல் பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை விடப்படுகிறது என தெரிவித்திருந்தார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பால் ஏப்ரல் 19ஆம் தேதியுடன் பள்ளி வேலைநாள்கள் முடிவதாக இருந்த சூழ்நிலை ஏப்ரல் 20ஆம் தேதியும் பள்ளி வேலைநாள் என்ற நிலை உருவானது.

சென்ற ஆண்டு மாறுதல் ஆணை பெற்று விடுவிக்கப்படாமல் (ஈராசிரியர் பள்ளிகளில்) உள்ள ஆசிரியர்களை தற்போது பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் ஆணைக்கிணங்க ஏப்ரல் 18 ஆம் தேதி விடுவித்து ஏப்ரல் 19 ஆம் தேதிக்குள் பணியில் சேர்ந்துகொள்ள குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆணை அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் இ.மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

பள்ளி கோடை விடுமுறை மாற்றம் தொடர்பாக எழுத்து பூர்வமான அறிவிப்புகள் எதுவும் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்படாததால் ஏற்கனவே உள்ள பள்ளி வேலைநாள் கால அட்டவணைப்படி ஏப்ரல் 19 ஆம் தேதிதான் இவ்வாண்டின் கடைசி வேலைநாளாகும். ஏப்ரல் 20 ஆம் தேதி கோடைவிடுமுறை தொடங்குகிறது.

தொடக்கக் கல்வித் துறை பள்ளிகள் 210 பள்ளி வேலைநாள்கள் முடித்திருக்க வேண்டும். பள்ளி வேலைநாள்கள் 210 க்கு குறைவாக உள்ளது எனில் ஏப்ரல் 20 பள்ளி வேலைநாளாக செயல்படலாம். இதில் வேறு எந்தவித குழப்பமும் தேவையில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக