யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

19/4/18

பத்தாம் வகுப்பு அறிவியலில் தேர்ச்சி எளிது : ஆசிரியர், மாணவர்கள் கருத்து

பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெறுவது எளிது, என ஆசிரியர், மாணவர்கள் தெரிவித்தனர்.
ஆர்.விஷால், சுவார்ட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி: 15 ஒரு மதிப்பெண் வினாக்களில் இரண்டு வினாக்கள் விடை எழுத முடியவில்லை. இரண்டு மதிப்பெண்ணில், 32 கேள்விகளில் 20 கேள்விகள் எழுதவேண்டும். இவை எளிதாக இருந்தன. 5 மதிப்பெண் கேள்விகளில் புத்தகத்தின் உள்ளே இருந்து அதிகம் இடம்பெற்றிருந்தது.
ஜே.லேஷிதா, அரசு உயர்நிலைப்பள்ளி, பேராவூர்: ஒரு மதிப்பெண்ணில் 13, 14 கேள்விகள் பாடத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்டதால், விடை அளிக்க முடியவில்லை. ஐந்து மதிப்பெண்ணிலும், அது போல் கேட்கப்பட்டாலும், ஆசிரியர்கள் எங்களுக்கு பயிற்சிஅளித்ததால் எளிதானது.
ஹெப்சி ஜெனிடா ஆக்னஸ், சுவார்ட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்: ஒன்று, ஐந்து மதிப்பெண் வினாக்கள், புத்தகத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்டிருந்தது. கேள்விகளை புரிந்து எழுதினால் அதிக மதிப்பெண் பெறலாம்.
பி.ஆறுமுகம், அறிவியல் பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, அழகன்குளம்: முந்தைய தேர்வுகளை காட்டிலும், அறிவியல் தேர்வு எளிமை. அனைவரும் தேர்ச்சி பெறுவது எளிது. இரண்டு ஒரு மதிப்பெண் வினாக்கள் சிந்தித்து எழுதுவதாக இருந்தது.மேலும், இரண்டு மற்றும் ஐந்து மதிப்பெண் கேள்விகளில் 'அ' மற்றும் 'ஆ' என இரண்டு பகுதியிலும் சரியாக எழுதினால் மட்டுமே முழு மதிப்பெண் பெற முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக