யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

23/5/18

10ஆம் வகுப்பு தேர்வில் 94.5% தேர்ச்சி! - சிவகங்கை மாவட்டம் முதலிடம்!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 94.5% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 94.5% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட 0.1% விழுக்காடு கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 9.5 லட்சம் பேரில் 8.97 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 92.6% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.4% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் 98.5% தேர்ச்சி பெற்று முதலிடம் பெற்றுள்ளது. ஈரோடு மாவட்டம் 98.38% பெற்று இரண்டாம் இடம் பெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டம் 98.26% பெற்று மூன்றாம் இடம் பெற்றுள்ளது. 5,584 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் 5,456 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன என கூறினார்.

மேலும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஜூன் 28ஆம் தேதி மறுதேர்வு எழுதலாம் என அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக