யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

23/5/18

அதிக கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து : 'பீஸ்' விபரத்தை பள்ளிகளில் ஒட்ட உத்தரவு

தனியார் பள்ளிகளில், கல்வி கட்டண விபரத்தை, பள்ளி அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும். ''அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, அதிகமாக வசூலிக்கும் பள்ளிகள் மீது, அங்கீகாரம் ரத்து உள்ளிட்ட 
நடவடிக்கைகள் எடுக்கப்படும்,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.தமிழக அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்துவது, நிர்வாக முறைகளை சீரமைப்பது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், சென்னையில், நேற்று நடந்தது. இதில், பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன், முதன்மை செயலர் பிரதீப் யாதவ், பள்ளிக் கல்வி இயக்குனர் இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது, புதிய பாடத்திட்டத்தை, முறைப்படி மாணவர்களுக்கு கற்றுத் தருவது, காலி பணியிடங்களை கண்டறிந்து, ஆசிரியர்களை நியமிப்பது போன்ற விஷயங்கள் குறித்து, இக்கூட்டத்தில், பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.
பின், அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: அரசு தொடக்க பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், தனியார் பள்ளிகளில், இலவச, 'அட்மிஷன்' கேட்டு, 1.32 லட்சம் பேர், பதிவு செய்துள்ளனர். 
கடும் நடவடிக்கை : விரைவில் குலுக்கல் நடத்தி, இவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படும். அரசு நடத்திய பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மாணவ - மாணவியர், 'நீட்' நுழைவுத்தேர்வு எளிதாக இருந்ததாக கூறியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், மாசிநாயக்கன் பள்ளி யில், பிளஸ் 2 தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும், தோல்வி அடைந்துள்ளனர். இதற்கு, அவர்கள் தெலுங்கு மொழி பேசுவோர் என்பதும் காரணம். அந்த பள்ளியில், தெலுங்கு தெரிந்த ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளித்து, துணை தேர்வில் தேர்ச்சி பெற நடவடிக்கை எடுக்கப்படும்.தனியார் பள்ளிகளில், அதிக கட்டணம் வசூலிப்பதாக, பெற்றோர் புகார் அளித்தால், அந்த பள்ளிகளின் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளிகளின் அறிவிப்பு பலகையில், அரசு நிர்ணயித்துள்ள கட்டண விபர பட்டியலை ஒட்ட வேண்டும். 
சிறப்பு பயிற்சி: அதிக கட்டணம் வாங்கினால், அந்த பள்ளிக்கான தடையில்லா சான்றிதழ் ரத்து மற்றும் அங்கீகாரம் ரத்து போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். புதிய பாடத்திட்டத்தை பயிற்றுவிப்பது குறித்து, ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். ஜூன், 1ல், திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக