யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

18/5/18

கலை, அறிவியல் கல்லூரிக்கு மவுசு

பிளஸ் 2 தேர்வில், முக்கிய பாடங்களில் மதிப்பெண் குறைந்துள்ளதால், அதிக மாணவர்கள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் சேர வாய்ப்புள்ளதாக, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவில், 60 சதவீத மாணவர்கள், 800க்கும் குறைவான மதிப்பெண் பெற்றுள்ளனர். இவர்களில், இன்ஜி., கல்லுாரிகளில் சேர்வதற்கு, தகுதியான கணித பாடப்பிரிவில், 4.22 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில், 50 சதவீதம் பேர் மட்டுமே, இன்ஜினியரிங் படிப்பில் சேர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. மற்றவர்கள், கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் அதிக அளவுக்கு சேர வாய்ப்புள்ளது.
தேர்வு முடிவு குறித்து, கல்வி ஆலோசகர், ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது:இந்த ஆண்டு, மாணவர்களின் மதிப்பெண் முறையை பார்க்கும் போது, 60 சதவீதம் பேர், 800 மதிப்பெண்ணுக்கு குறைவாக பெற்றுள்ளனர். எனவே, இன்ஜினியரிங் படிப்புக்கான, கட் - ஆப் மதிப்பெண்ணில், ஐந்து முதல் எட்டு வரை குறைய வாய்ப்புள்ளது. முதல், 10 இடங்களில் உள்ள கல்லுாரிகள் தவிர, மற்ற கல்லுாரிகளில் இடம் பெறுவதில், போட்டிகள் குறையும். கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில், அதிக மாணவர்கள் சேர வாய்ப்புள்ளது. அரசு தேர்வுத்துறை சார்பில், மாணவர்களின், 'சென்டம்' பட்டியல் வெளியிட்டிருந்தால், மாணவர்கள் உயர்கல்விக்கு திட்டமிட உதவியாக இருந்திருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக