யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

18/5/18

ஊதிய முரண்பாடுகள் களையும் குழுவிடம் அறிக்கைகள் தொடர்ந்து அளிப்பு

ஊதிய முரண்பாடுகளைக் களையும் குழுவிடம் அறிக்கைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த முரண்பாடுகள் குறித்து அறிக்கைகள், கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. இதற்காக, நிதித் துறை செயலாளர் (செலவினம்) எம்.ஏ.சித்திக் தலைமையில் ஒருநபர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவிடம் தனிநபர்களும், அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்தவர்களும் கோரிக்கை மனுக்களை அளித்து வருகின்றனர். மனுக்களை அளிக்க மே 15 கடைசி நாள் என தமிழக அரசு அறிவித்திருந்தாலும் தொடர்ந்து மனுக்களை அளிக்கலாம் எனக் கூறியுள்ளது. மனுக்கள் அளிக்கப்பட்ட பிறகு, ஊழியர் சங்கங்களையும், கோரிக்கை மனுக்களை அளித்த தனிநபர்களையும் அழைத்துப் பேச ஒருநபர் குழு முடிவு செய்துள்ளது. 
பணி வரன்முறைக் குழு: அரசுப் பணியிடங்களை வரன்முறைப்படுத்துவதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவானது அனைத்து அரசுத் துறைகளுக்கும் பல்வேறு கேள்விகள் அடங்கிய பட்டியலை அனுப்பி வைத்திருந்தது. இந்தப் பட்டியலை வரும் 21}ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி, பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த தலைவர்களும் கேள்விகளுக்கான பட்டியலில் பதில்களைப் பூர்த்தி செய்து நேரில் அளித்து வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக