யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

6/10/18

மாநிலம் முழுவதும் நாளை /( 6/10/2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! முதல்வர் அதிகாரபூர்வ அறிவிப்பு.!

அடுத்த 5 நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முழுவதும் மிதமான மழை இருக்கும். வரும் 7 ஆம் தேதி அதிகபட்சமாக தமிழகத்தில் 25 செ.மீ வரை வரை அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடல் அதிக சீற்றத்துடன் காணப்படும் என்றும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் தெரிவித்தது.


தமிழகம், புதுச்சேரியில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தில் இருந்து தகவல் வந்துள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு "ரெட் அலர்ட்" எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது. குறைந்த நேரத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்த ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.


இந்நிலையில், புதுச்சேரி மாநில முதல்வர் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் நாளை அரசு விடுமுறை என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

மொஹரம் விடுமுறையை ஈடுசெய்ய நாளை பணி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், நாளை விடுமுறை என முதல்வர் நாராயண சாமி அறிவித்துள்ளார்.

வரும், ஏழாம் தேதி அனைத்து அரசு ஊழியர்களும் விடுப்பு எடுக்காமல் பணியில் இருக்க வேண்டும் என்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆணை பிறப்பித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக